ShareChat
click to see wallet page
search
இன்று காஷ்மீரின் கடைசி மன்னரும் இந்தியாவோடு காஷ்மீரை இணைத்தவருமான மன்னர் ஹரிசிங்கின் நினைவுநாள் காஷ்மீரம் வேத காலத்தில் இருந்து இந்தியாவின் ஒரு பகுதி, பிரசித்தியான சாரதா மடம் அங்குதான் இருந்தது காசி போல அதுவும் மகாபுனிதமான ஷேத்திரமாக இருந்தது, 1400ம் ஆண்டுகளில் இருந்து கடுமையான மதமாற்றம் அங்கு ஆப்கானிய கும்பலால் வந்தது எனினும் 1700களில் சீக்கிய எழுச்சிக்கு பின் அங்கிருக்கும் இந்துக்களை காக்க அது சீக்கிய அரசின் ஒரு மாகாணமாயிற்று, பிரிட்டிசார் காலத்தில் அங்கு ரன்பீர் சிங் எனும் மன்னன் அமர்த்தபட்டான் அவன் ஆப்கானிய பிரிட்டிஷார் போரில் பிரிட்டிஷ்க்கு ஆதரவாக இருந்ததாலும் சீக்கிய வம்சம் என்பதாலும் அந்த முழு காஷ்மீரமும் அவரின் அரசாயிற்று அதாவது பூட்டான், நேபாளம், சிக்கிம் போன்ற மாகாணங்களில் மன்னர்கள் இருந்தது இருப்பது போல் இங்கும் ஹரிசிங் எனும் மன்னர் கடைசியாக இருந்தார் 1947 வரை அவர் பிரிட்டனுக்கு கட்டுபட்ட அரசராய் இருந்தார், பிரிட்டிசார் வெளியேறியதும் தனி நாடாக செயல்படும் விருப்பம் அவருக்கு இருந்தது ஆனால் மக்களில் பெரும்பான்மை இஸ்லாமியர் என்பதால் பாகிஸ்தான் அதற்கு உரிமை கோரிற்று, அதை எழுப்பியவர் ஜின்னா இந்தியா ஊடாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளின் மூலம் காஷ்மீரில் இருப்பதால் பாகிஸ்தான் அதனை கைபற்ற முனைந்தது மதம் அதற்கொரு ஆயுதமானது மன்னர் ஹரிசிங் தவித்துபோனார், அவரின் தேர்வு இந்தியாவாக மட்டும் இருந்தது, இதனால் அஞ்சிய பாகிஸ்தான் அதனுள் புகுந்து ஒரு பகுதியினை ஆக்கிரமித்தது, மன்னர் இந்தியாவின் உதவியினை நாடினார், எங்கேயும் எதையும் உருப்படவிடாத நேரு அங்கு தலையிட்டு குழப்போ குழப்பு என குழப்பினார் மன்னர் கேட்டது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை அகற்றி முழு காஷ்மீராக மீட்டு தன்னிடம் தர இந்திய உதவியினை கோரியது, அதை செய்திருந்தால் பின்னாளில் முழு காஷ்மீர் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் ஆனால் நேரு குழப்பினார் மன்னர் முடிந்தவரை போராடி பார்த்தார், அவரின் திவானாக இருந்த தமிழரால் 370ம் சட்டபிரிவு உட்பட பல குழப்பமாக இந்தியாவோடு இணைந்தது காஷ்மீருக்கு அந்த 370 சட்டம் எப்படி வந்தது என்பதில் ஒரு தமிழருக்கும் பெரும் பங்கு உண்டு அவர் பெயர் கோபாலசாமி ஐயங்கார், தஞ்சாவூர் தமிழர் 1882ல் பிறந்தவர், பெரும் படிப்பாளி தஞ்சை சென்னை எனபடித்தவர், பச்சையப்பாவில் பட்டம் பெற்றார் அதன் பின் சட்டம் படித்தார், பச்சையப்பாவில் பேராசியராக பணியாற்றினார் பின்பு அரசுபணி குறிப்பாக குடியுரிமை பணிகளில் கல்கத்தா டெல்லி என சுற்றியவருக்கு காஷ்மீர் மன்னனின் காரியதரிசியாகும் வாய்ப்பு கிடைத்தது மன்னர் ஹரிசிங் அவரை காஷ்மீர் பிரதமராக நியமித்திருந்தார் கிட்டதட்ட திவான் பதவி, காஷ்மீரை 1937 முதல் 1947 வரை காஷ்மீரினை மன்னரின் ஆண்டது இந்த தமிழனே 1947ல் சிக்கல் வந்தபோது கோபாலசாமி அய்யங்காரே முழு வேலையினையும் செய்தார், பாகிஸ்தான் காஷ்மீரை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கின்றது என ஐநாவில் முழங்கியதும் அவரே பாகிஸ்தான் அது உள்நாட்டு மக்களின் புரட்சி என சொன்னபொழுது அவர்கள் கைகளில் பாகிஸ்தானிய ஆயுதங்கள் வந்தது எப்படிஎன கோபாலசாமி கேட்டபொழுது பாகிஸ்தானிய பிரதிநிதியிடம் பதில் இல்லை காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் அந்த 370 சட்டபிரிவு அவசியமே இல்லை நேரடியாக இணைத்திருக்கலாம் ஆனால் நேரு உலக உத்தமர் அல்லவா? அவர் காஷ்மீர் மக்களுக்கு ஒரு உறுதிமொழி கொடுப்பது போல் அச்சட்டத்தை உருவாக்கினார் கோபால்சாமி அய்யங்காருக்கு இதில் விருப்பமே இல்லை என்றாலும் அவரை மிரட்டி உருட்டி அந்த உருப்படாத சட்டத்தை உருவாக்கினார் நேரு, ஆனால் இந்தியாவுடன் இணைந்துவிட்டபின் அது இந்தியாவின் ஒரு பகுதியே என்பதில் உறுதியாக இருந்தார் கோபாலசாமி அய்யங்கார் பாகிஸ்தான் காஷ்மீரில் ஒரு முடிவுக்கு வரும் வரை அது அந்நிய பூமிபோல் இருந்தாக வேண்டும் என நேருவால் உருவாக்கபட்டது அந்த 370ம் சட்டபிரிவு, நேருவின் பாகிஸ்தானிய பாசம் அப்படியானது இப்படியாக அந்த திவான் காஷ்மீரின் இந்திய அதிகாரியாக மாறிவிட மன்னர் ஹரிசிங் இந்தியாவின் மும்பைக்கு வந்தார், தன் அந்திம காலம் வரை ஓய்வூதியம் பெற்றுகொண்டு அங்கே வாழ்ந்து மறைந்தார் இன்று அவரின் நினைவுநாள், அவர்மட்டும் கொஞ்சம் அசந்திருந்தால் முழு காஷ்மீரும் பாகிஸ்தான் பக்கம் சென்றிருக்கும் அவர் இந்தியாவினை அழைத்து இந்தியாவிடமே காஷ்மீரை ஒப்படைத்தார் ஆனால் நேரு முழு காஷ்மீரை மீட்கவுமில்லை பாதி காஷ்மீரை முறையாக இந்தியாவோடு இணைக்கவுமில்லை இன்னும் இன்னும் குழப்பினார், மன்னரும் நேருவினை எதிர்க்கமுடியாமல் குழப்பத்தில் வாடி செத்தும்போனார் அவர் இறந்தபின் அவரின் அஸ்தி காஷ்மீரிய மலைகளில் தூவபட்டது, சிந்துநதி இந்தியாவுக்கு வேண்டும் என விரும்பிய அந்த கோட்சே போலவே முழு காஷ்மீரும் வரும்வரை தன் அஸ்தி முழுக்க கரைக்கபட கூடாது என மன்னர் கேட்டு கொண்டதால் இன்னமும் அது ரகசியமாக பாதுகாக்கபடுவதாக செய்திகள் உண்டு அந்த இந்து மன்னன் காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என்பதில் சரியாக இருந்தார், பாகிஸ்தானிடம் பாதி காஷ்மீர் சென்றதில் மனமுடைந்தே இறந்தார், நேரு செய்த துரோகங்களில் இம்மன்னருக்கு செய்த துரோகமும் அடங்கும் இம்மன்னரின் கனவுகளில் ஒன்றான 370ம் சட்டபிரிவு மோடியால் அகற்றபட்டுவிட்டது, உரிய காலம் வரும்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கபடும் காஷ்மீரில் ஹரிசிங்கிற்கு எந்த அடையாளமுமின்றி நேரு காலத்தில் காஷ்மீரிய பிரிவினை கோஷ்டிகள் காலத்தில் மறைக்கபட்டது, மோடி அரசு 2022ல் தான் அதாவது 370ம் சட்டபிரிவு நீக்கபட்டபின்புதான் அவரின் பிறந்தநாளை அரச விடுமுறை என கொண்டாட வழி செய்து அவருக்கோர் சிலையும் எழுப்பியது, மன்னரின் நினைவு அதன்பின்பே துலங்கிற்று மன்னர் ஹரிசிங் நிச்சயம் பாகிஸ்தானுடன் சேர்ந்து காஷ்மீர் வளராது உருப்படாது என்பதை கணித்துத்தான் இந்தியாவுடன் இணைந்தார், ஆனால் நேரு அதனை குழப்பி சுல்தானிய காஷ்மீரம் போல 370ம் சட்டபிரிவினைஉருவாக்கி அதை வளரவிடாமல் வைத்தார் இன்று அந்த 370ம் சட்டபிரிவு நீங்கி காஷ்மீர் முழு வளர்ச்சியில் செல்வதை கண்டு, ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவோடுதான் இணையவேண்டும் என ஆர்பரிப்பதை கண்டு நிச்சயம் அந்த மன்னர் ஹரிசிங்கின் ஆன்மா மகிழ்ச்சியடையும், இந்திய வரலாற்றில் மறக்கமுடியா அந்த இந்து மன்னருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் #🙏என் தேசப்பற்று #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🎙️அரசியல் தர்பார்
🙏என் தேசப்பற்று - 3 Lanor 3 Lanor - ShareChat