#சிவகங்கைமாவட்டம்
கோட்டையூரில் குடிகொண்டிருக்கும்
#இந்தசித்தரின்பூர்வீகம் கொங்குநாடு ஐந்து வயதில் வீட்டை விட்டு வெளியே வந்தவர் இந்தியா முழுவதும் சுற்றி திரிந்து மகான்களை சந்தித்து ஆசியைப் பெற்றவர் மும்பை கணேஷ்புரியை சேர்ந்த ஸ்ரீநித்யான் சுவாமியின் சீடர் இவர் விராலிமலை முருகனின் அருளை பெற்ற இச்சித்தரை அனைவரும் எச்சில் பொறுக்கி ஆறுமுகம் சுவாமிகள் என்று அன்போடு அழைத்திருக்கிறார்கள் இவர் யாராவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையிலிருந்து ஒரு பிடி எடுத்து சாப்பிட்டு விடுவாராம் அப்படி சாப்பிட்டால் அந்த நபருக்கு யோகம் அடித்து விடும் அவர் வாழ்க்கையில் எல்லா வளங்களும் சேர்ந்து மிக உன்னதமான நிலைக்கு வந்து விடுவார்களாம் இதனை முன்னிட்டு இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது எச்சிக்கலையும் பொறுக்கும் சுவாமிகள் அதாவது எந்த சிக்கலையும் பொறுத்து அதை தீர்த்து வைக்கும் சித்தர் என்பதால் அவருக்கு எச்சிக்கலை பொறுக்கி ஆறுமுகம் சித்தர் என்று மருவியதாக கூறுவர் ஒரு முறை இவர் திருநெல்வேலியில் இருந்த போது கோவணத்துடன் சாலையில் திரிந்து கொண்டிருந்த இவரை போலீஸ்காரர் ஒருவர் விரட்டி கொண்டு வரவே இவர் ஓடிப் போய் ஒரு குப்பைத் தொட்டிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறார் ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் சுவாமிகள் வெளியே வரவில்லையாம் அங்கு இருந்து இவரை பிடிப்பதற்காக துரத்தி கொண்டு வந்த போலீஸ்காரரோ குப்பைத்தொட்டியை நெருங்கியதும் அங்கிருந்து ஓரடிகூட எடுத்து வைத்து நகரமுடியாமல் அப்படியே சிலை போல் நின்றிருக்கிறார் மற்றொரு போலீஸ்காரர் அங்கு வந்த பின்புதான் சுவாமிகள் அந்த குப்பைத்தொட்டிக்குள்ளையே இல்லை என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது அதன்பின் எங்கிருந்தோ மறுபடியும் அந்த இடத்திற்கு வந்த ஆறுமுகம் சித்தர் அந்தப் போலீஸ்காரரை தொட்ட பின்புதான் அவரால் அந்த இடத்தை விட்டு அசைய முடிந்திருக்கிறது அப்போதுதான் அவருக்கு புரிந்திருக்கிறது அவர் சாதாரண மனிதரல்ல என்பது தம் செயலுக்கு வருந்தி ஆறுமுக சித்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த போலீஸ்காரர் மூதேவி உபாசகராக ஆறுமுகம் சித்தர் விராலிமலை முருகனின் அருளை பெற்றவர் வராஹி தாயை வழிபடுபவர் தாம் முக்தி அடையும் நாளை முன்கூட்டியே தெரிவித்தவர் இவர் ஒரு முருகன் பக்தர் என்பதால்தான் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகத்தன்று முக்தியடைந்தார் என்று கூறுகிறார்கள் இவர் 1982ஆம் ஆண்டு வைகாசி மாதம் விசாகநட்சத்தித்திர பெருநாளன்று முக்தியடைந்தார் சித்தருகளுக்குள் மகா சித்த புருசராக விளங்கிய ஆறுமுகம் சித்தர்கள் பிறர் துன்பங்களை தான் ஏற்று அவர்கள் குறையை போக்கி வந்தார் விராலிமலை குகையிலிருந்து பக்தர்களுக்கு அருள்மழை பொழிகிறார் அயல்நாடுகளில் இருந்து வந்த அன்பர்களின் தீராத நோய்நொடிகளையல்லாம் தீர்த்து வந்தார் இவருடைய சமாதிக்கு சென்று வழிபட்டு மனமுருக வேண்டினால் இவரது அனுக்கிரகத்தை எளிதில் பெறலாம்
இப்போதும் சமாதிக்குள் சமாதி நிலையில் இருந்தவாறு தம்மை நாடி வரும் பக்தர்கள் குறை தீர்த்து வருகிறார் ஆறுமுகம் சித்தர் சுவாமிகள்
இடம்
புதுக்கோட்டை சாலையிலுள்ள கோட்டையூர் சிவன் கோவிலுக்கு 2 கி. மீ தொலைவிலுள்ள டவுன் extension பகுதியில் உள்ளது. ஓம் நமசிவாய ஓம் குருவே சரணம் ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி சித்தர் சுவாமிகள் போற்றி ஓம் வராஹி தாயே போற்றி ஓம் நந்தீஸ்வரர் போற்றி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி அம்மன் போற்றி.ஓம் சாய்ராம் ஓம் சித்தர்கள் திருவடி சரணம் போற்றி ஓம் வீரபிரம்மேந்திரர் சுவாமிகள் போற்றி ஓம் சிக்கல் போக்கும் ஆறுமுகம் சித்தர் சுவாமிகள் போற்றி #🙏கோவில் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய


