#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 வந்தால் நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்க்க வேண்டும் அப்போது அது எவ்வளவு விகாரமாக இருக்கிறது என்பது தெரியும் அதன் பிறகு நமக்கு கோபமே வராது காரணம் நம் முகமே நம்மை பயமுறுத்தி விடும்.
இந்த அடிப்படையில் தான், தெய்வங்களுக்கு கூட சிலைகள் வடிக்கப்பட்டன.
நாம் கோவில்களுக்கு சென்று ஒவ்வொரு தெய்வத்தின் சன்னதியிலும் பயபக்தியுடன் வணங்குகிறோம்.
அநேக தெய்வங்கள் கருணை வடிவம் கொண்டதாகவே இருக்கும். அந்த தெய்வங்களின் கண்களைப் பார்த்தால் கருணை அப்படியே சொட்டும்.
அதைப் பார்க்கும் நமக்கும், "ஆஹா, நாமும் எப்படி பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்ளக் கூடாதா?" என தோன்றும்.
ஆனால் காளி, துர்க்கை போன்ற தெய்வங்கள் பயங்கரமாக காட்சி தருவார்கள். ஏன் இவர்களுக்கு மட்டும் பயங்கர தோற்றம் என்பதைக் குறித்து மனதில் எண்ணம் எழும்.
பொதுவாக இந்த தெய்வங்கள் அரக்கர்களை அழிப்பதற்காக பயங்கர தோற்றம் கொண்டுள்ளன என்று சொல்வார்கள். ஆனால் அது மட்டும் காரணம் அல்ல.
நமது மனம் ஒன்பது விதமான விருப்பங்களை கொண்டுள்ளது. இதை நவரசம் என்பர். எந்த விருப்பம் நம் மனதில் தோன்றுகிறதோ, அதன் எதிரொலி நம் முகத்தில் தெரியும். அதாவது அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா? அதைப்போலத்தான் தெய்வ சிலைகளின் வடிவமும் இருக்கும்.
நவரசங்களில் கோபமும் ஒன்று. அந்தக் கோபத்தை வெளிப்படுத்தும்போது முகம் விகாரம் ஆகிவிடும். காளி துஷ்டர்களுக்கு எதிரானவள் என்பதால், அவள் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாள்.
ஆனாலும் அவளைப் பார்த்ததும் நமக்கும் பயம் வருகிறது. கோபம் யாருக்கு வந்தாலும் எதிரே நிற்பவர்களுக்கு பயம் ஏற்படும் அந்த பயத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே காளி துர்க்கை வழிபாடுகள் தோன்றியிருக்க வேண்டும் என நினைக்க வேண்டி இருக்கிறது.
இனியும் யாரிடமும் கோபப்படாதீர்கள். சாந்த மூர்த்தியாக இருங்கள்.


