#ஓம் முருகா #ஓம் முருகா 🙏🕉️ #🙏ஓம் முருக சரணம்🙏 #🦚🦚🦚ஓம் முருக 🦚🦚🦚 ##🕉️ஓம் முருகா #🕉️திருச்செந்தூர் முருகன்🙏🏻 #🕉️ பக்தி மாலை #🔱 கடவுள் #கடவுள் 🙏 GOD சுப்பிரமணியசாமி கோயில் சென்னிமலை...
ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.
இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசியமும் நிகழ்கிறது.
அமைவிடம்...
இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்
மூலவர்...
பழனியாண்டவர்
சிறப்புகள்...
தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
வரலாறு...
பழங்காலத்தில் கொங்கு மண்டலம் 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பகுதி பூந்துறைநாடு. கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த முருகன் கோயில் இது. வடமொழி பெயர் சிரகிரி. தேவராய சுவாமிகளும், இத்தலத்தை பாடிய அருணகிரி நாதரும், "சிவகிரி' என்று குறிப்பிட்டுள்ளனர்.
காஞ்சிமா நதி என்னும் நொய்யல் ஆற்றை தெற்கு பாகமாக கொண்டு சென்னிமலை கோயில் அமைந்துள்ளது. ஆண்டவர் சன்னதி கிழக்கு நோக்கி உள்ளது.
முன்புறம் புளியடி விநாயகர் சன்னதியும், அடுத்து கோயிலில் உட்புறத்தில் மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு வலப்பாகத்தில் மார்கண்டேஸ்வரர் மற்றும் உமையவல்லி அம்மன் சன்னதிகளும், இடது பாகத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.
செவ்வாய்த் தலம்: கோயிலில் மூலவர் சென்னிமலை ஆண்டவர் நடுநாயக மூர்த்தியாக செவ்வாய் கிரகமாக அமைந்துள்ளார்.
மூலவரை சுற்றி நவகிரகங்களில் எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷங்களில் பாங்குடன் அமைந்து அருள்பாலிக்கின்றனர். மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வணங்கி வழிபட்ட பலன் உண்டு. மூலவர் சன்னதிக்கு நேர் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக சென்றால், வள்ளி, தெய்வானை சன்னதி பெரும் கோயிலாக அமைந்துள்ளது.
தேவியர் இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய தவம் செய்து, இறைவனை அடைந்து அங்கேயே தனிப்பெருங் கோயிலாக கொண்டு பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இப்படி தேவியர் இருவரும் தனிப்பெருங் கோயிலில் அமைந்து காட்சியளிப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்....
நவகிரகங்களை தரிசித்த பலன் சென்னிமலை முருகனால் கிட்டும்.


