ShareChat
click to see wallet page
search
அர்ஜுனனுக்கு வயோதிகர் மூலம் அனுபவம் போதித்த கிருஷ்ணர்.... அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்ஜுனன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுத்தான். அதற்கு அந்த வயோதிகர், ஆகா இது என் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார். இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் அப் பொற்காசுகளைக் களவாடி சென்று விட்டான். சுமார் பத்து தினங்கள் கழித்து மீண்டும் அவ்வழியே அர்ஜுனன் வந்தான். பணம் களவாடப்பட்டதைக் கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லைக் கொடுத்தான். இதையாவது பத்திரமாக வைத்திருந்து உங்கள் வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றார் வயோதிகர். தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த ஒரு பானையில் நவரத்தின கல்லைப் போட்டு வைத்தான். அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டுமே அதை எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான். இதையறியாத அவர் மனைவி ஒருமுறை பரணிலிருந்து அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது. அதை அவள் பெரிதுபடுத்தவில்லை. அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான். ஏதும் அறியாத மனைவி நடந்ததைக் கூறினாள். உடனே ஆற்றிற்கு சென்ற அவர் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான். சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூறினான். அர்ஜுனன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூறினான். அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார். ஆச்சர்யப்பட்டான் அர்ஜுனன். ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை… வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…? எனக்கும் தெரியவில்லை..? என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா. அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர். அவன் வீட்டிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா எனக் கேட்டான்… உடனே தனக்குள் யோசித்த அவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணினான். பின் அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு, அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்தான். மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான். ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது… உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான். அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணினான். உடனே திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். அதை அனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்ஜுனன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்டான். கண்ணனும் சிரித்துக் கொண்டே, இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை. ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தத பணம் மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்தார். அதனால் தான் அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார் கிருஷ்ணர். இதைப் போலத்தான் ஒவ்வொருவரும் பலனை எதிர்பாராமல் செய்கின்ற செயல்கள் உரிய நேரத்தில் பயனளிக்கும். சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🏻🤘 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 - ShareChat