தவெகவின் வெற்றியை சிலர் மக்கள் தீர்ப்பு என்று நினைக்கலாம்; சிலர் மகேசன் தீர்ப்பு என்று நினைக்கலாம். எனக்கென்னவோ இது temporary quirk of democracy (gemini AI - "ஜனநாயகத்தின் தற்காலிக விசித்திரம்" ) அல்லது ஜனநாயகத்தின் மோசமான தோல்வி என்று தான் தோன்றுகிறது. புதிதாக ஒரு நடிகர் - அரசியல் அனுபவமோ, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடிய அனுபவமோ எதுவும் இல்லாதவர் - அரசியல் கட்சி ஆரம்பிப்பாராம்; அந்த தேர்தலிலேயே ஆட்சியையும் கூட பிடிப்பாராம்!! அப்படியானால் பல வருடங்களாக ஏற்கனவே அரசியலில் இருந்து மக்களுக்காக பாடுபட்டவர்களுக்கு என்ன மரியாதை?! அரசியல் அனுபவம், மக்கள் பிரச்சினைகள் குறித்த புரிதல் எல்லாம் தேவையில்லையா?! அல்லது இப்போதைய அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களாக இருப்பவர்கள் எல்லாரும் படுமோசமானவர்களாக இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம் ஆகிறது. ஆகவே இந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் படுதோல்வியை தான் குறிக்கிறது. ஸ்டாலின் போன்றார் இந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறுவது சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போகும் அளவுக்கு அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள்; அவர்கள் ஆட்சி படுமோசமாக இருந்திருக்கிறது என்பதை அவர்களே confess ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம் ஆகிறது!! அப்படியானால் அடுத்த தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வருவது கஷ்டம் தான்!! மேலும், சினிமா உலக நடிகர் நடிகை மோகம் சாபத்திலிருந்து தமிழ் மக்களுக்கு என்றைக்கு விடுதலை கிடைக்கும்?! என்று தான் தோன்றுகிறது!!*************************₹**********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம


