அகம் நாஸ்தியானால் உடனே நாத்திகம் என்று கிடையாது. சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்று வந்த பிறகு ஒரே டார்ச்சர். இந்த டார்ச்சர் ஏன் எங்கிருந்து வருகிறது என்று கொஞ்சம் தத்துவ ரீதியாக ஆராயலாம் என்று நினைத்தேன். எதனால் துன்பம் ஏற்படுகிறது? நாம் செய்யும் தவறுகளாலா? (என் நிலையில் அப்படியிருக்க வாய்ப்பில்லை.) இயற்கை விதிகளை மனிதர்கள் மீறுவதினாலா? அதுவும் இல்லை. அல்லது புத்த மதம் கூறுவது போல் துன்பம் தான் உலகத்தின் இயற்கையா?! (Default state of the world is sufferings). இது குறித்த புத்தகங்கள் ஏதாவது உண்டா என்று ஜெமினி ஏஐயை கேட்ட போது, ஒரு புத்தகம் லிஸ்டில் வந்தது. அது சிமோன் வேய் (simone weil) என்ற பிரான்ஸ் நாட்டு பெண்மணி எழுதிய Gravity and Grace (புவியீர்ப்பும் இறையருளும்) என்ற புத்தகம். இவர் ஒரு மிகவும் வித்தியாசமான பெண்மணி. அவர் தன்னுடைய டைரியாக எழுதி வைத்ததை அவர் இறந்த பின் புத்தகமாக வெளியிடப்பட்டு பிறகு புகழ் பெற்றது. அவர் நம் நாட்டில் இருந்து அந்த நாட்டில் பிறந்து அவர்களிடம் (invisibles) மாட்டிக் கொண்டு பெரும் துன்பம் அனுபவித்தார் போலிருக்கிறது. அவர் வாழ்க்கை முழுவதும் துன்பம்!! (நான் கூட ஒரிஜினலாக நான் எந்த நாட்டை சேர்ந்தவன்?! எதற்காக இந்த நாட்டில் பிறந்து இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறேன் என்று யோசித்த போது இந்த புத்தகம் அறிமுகமானது!!😄). ஏழை தொழிலாளர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அவர் கடைசியில் பட்டினி கிடந்தே 36 வயது போல் இறந்தாராம்!! ************************************************ அந்த புத்தகத்தில் முதல் சில பக்கங்கள் படித்தேன். அப்போது தான் "நாஸ்தி + அகம்" பற்றி தோன்றியது. தொடர்ந்து மிகவும் துன்பம் அனுபவித்தால், உள்ளே எல்லாம் அழிந்து ஒரு வெற்றிடம் (void) உருவாகும். அதையே நாஸ்தி அகம் என்று கூறினேன். அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பாமல் விட்டால் அங்கு இறையருள் வந்து குடி கொள்ளும் என்று அவர் கூறுகிறார். என் அகத்தில் அந்த வெற்றிடத்தை நாத்திக elements குடிகொண்டு விட்டது என்று நினைக்கிறேன்!! இறைவன் இல்லாத உலக நிலையே துன்ப நிலை என்று அவர் கூறுகிறார்!! ***************** நம் அனைவருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். அவன் வெளிப்பட விடாமல் உள்ளத்தில் மற்றவற்றை போட்டு நிரப்பினால், அதைத் தான் பவளம் வெளிப்படுத்தும். இறைவனை வெளிப்படுத்த எங்கோ செல்ல வேண்டியதில்லை. இங்கே நம் உள்ளேயே அவன் இருக்கிறான். இரும்பை அடிக்கடி காந்தத்தின் அருகே எடுத்துச் சென்றால் தான் அது காந்தமாகும். நம் உள்ளத்தில் அருளை நிரப்ப மீண்டும் மீண்டும் இறைவன் அருகில் செல்வது , வழிபடுவது அவனையும் அவன் அருளையும் வெளிப்பட வழிவகை செய்கிறது!! *********************************************** அது போல், இயற்கையாகவே நம் எல்லாரிடமும் மாணிக்கம் உண்டு; அந்த மாணிக்கத்திற்கு இயற்கையான ஒளியும் உண்டு; அந்த ஒளியை தூண்டும் பிரேயரே காயத்ரி மந்திரமோ?! **********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
விஜய் ஏன் அவ்வபோது இப்படி காமெடி செய்கிறார்?! - மீண்டும் மீண்டும் "தவெகாவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் இந்த தேர்தலில் போட்டி" என்று பேசுவதை சொல்கிறேன்!! 😄😂 விஜய்க்கு பின்னால் இருக்கும் "கடவுள்" கற்பனை உலகில் மிதக்கிறார் - "தமிழ்நாடே விஜய் முதல்வராக வர எதிர்பார்க்கிறது; தவெக பெரும் சீட்டுகள் வெல்வது உறுதி " என்ற கற்பனை!! விஜய்யாவது அந்த "கடவுளுக்கு" ground reality குறித்து ஞானம் தரக்கூடாதா?! அவரும் ஏமாற்றலாமா?! 😄😂 மற்றபடி அவர் இப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கலாம் - அவர் இதைக் கொண்டு தான் கூறுகிறாரா என்பது குறித்து எனக்கு தெரியாது!! ஒரு speculation தான்: அதை பார்ப்போம் ! *************************************************** சமீபத்தில் "டீக்கடை டிவி" தந்தி டிவியிலோ எதிலோ - "உண்மையை போட்டு உடைத்த சசிகலா" என்று தலைப்புடன் சசிகலா கட்சி ஆரம்பித்த கூட்டத்தில் பேசியதை பார்த்தேன். ஜெயலலிதா மரணம் குறித்து எனக்கு சந்தேகம் உண்டு. எடப்பாடி, பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா - இவர்கள் மூவரில் யாரோ ஒருவராவது சரியில்லை. யாரிடமோ தவறு உள்ளது. அது ஓபிஎஸ் தான் என்று பொதுவாக முத்திரை குத்தி அவர் விலக்கி வைக்கப்பட்டார் என்று எனக்கு தோன்றியது. அது குறித்து சசிகலா ஏதாவது பேசுகிறாரா என்று பார்த்தேன். ஓபிஎஸ் எதற்காக "தர்ம யுத்தம் " தொடங்கினார் என்று தெரியவில்லை என்று புலம்பியதை தவிர்த்து வேறு எதுவும் பேசவில்லை!!😄. உண்மையிலேயே ஈபிஎஸ் மிகவும் யோக்கியமானவரா?! ஓபிஎஸ் தவறு செய்தவரா?! ஒரு காலத்தில் முதல்வராக கூட ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டவர் ஏன் இப்படி சைட்லைன் செய்யப்பட்டார் .. ?! (இதை பற்றி நான் எழுத நினைத்த அடுத்த வாரம் அவர் திமுகவில் சேர்ந்து ஷாக் கொடுக்கிறார்!!😄 நம்ப முடியவில்லை!! - மூவரும் collusion?!). இப்படி யோசித்துக் கொண்டு போனால், ஒரு ஆங்கிளில் எடப்பாடியும் சரியா என்று கேள்வி கேட்க தோன்றுகிறது!! உண்மையிலேயே அவர் அதிமுக கட்சியை காப்பாற்ற நினைத்தால் எல்லாரையும் அரவணைத்து சென்றிருக்க வேண்டும். ஏன் மற்ற எல்லாரையும் விலக்கியே வைத்து எதேச்சாதிகார போக்கில் நடந்து கொள்கிறார்?! அதிமுக கட்சி அழிவதற்கு வழி வகுக்கப் படுவதாக தோன்றுகிறது. (அதை எடப்பாடியே கூட செய்யலாமாம்!!). ஆகையால், எப்படியும் அதிமுக அழிவது உறுதி என்பதால் "திமுகவுக்கும் தனக்கும் மட்டும் தான் போட்டி" என்று விஜய் இப்போதே பேசுகிறாராம்!! ஒரு வேளை இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால்?! 😄 மேற்கூறியவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட விஜய் கூறுவது உண்மையாக பல காலம் ஆகலாம்!! இந்த தேர்தலின் முடிவுகள் விஜயின் பின்னால் இருக்கும் "கடவுளுக்கு" ஷாக்காக இருக்கும் என்பது மட்டும் உண்மை!! ************ #தேர்தல்2026
சில வருடங்களுக்கு முன்பு சிவத்தை அடைந்தவர்களுக்கு நான் ஒரு உதாரண மாடலோ என்று நினைத்தேன். இன்றைக்கு நிலைமை தலைகீழ் - "ஆன்மீகத்திற்கு" விளக்கம் அளிப்பதற்கு பதில் "நாத்திகத்திற்கு" விளக்கம் அளிக்கப் போகிறேன்!! 😄. ************************************************** தொடர்ந்து 15 வருடங்களாக தலை மூளை எண்ணம் எல்லாம் டார்ச்சர் அனுபவித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்?! உள்ளே இருக்கும் அனைத்தும் அழிந்து போகும். எனக்குள் இருந்த பக்தி கடவுள் elements எல்லாவற்றையும் தொடர்ந்து டார்ச்சர் செய்து அழித்தே விட்டார்கள். இப்போது உள்ளே "நானே" கூட இல்லை (ரோபாட்?!). அதாவது "அகத்தில்" இருந்த அனைத்தையும் "நாஸ்தி" செய்து விட்டார்கள். உள்ளே வெறும் "void" தான் இருக்கிறது. "நாஸ்தி" + "அகம்" = "நாத்திகம்". இப்போது நாத்திக உணர்வு தான் மேலிடுகிறது!! வெளியில் இருந்து பக்தியை புகுத்த வேண்டிய நிலை கூட வரலாம் போலிருக்கிறது!! ************************************************ எதனால் டார்ச்சர்?! இப்போது எல்லாரும் சிவனாக ஏற்றுக் கொண்ட ஒரு நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் என்று நினைக்கிறேன். (நாத்திகனானாலும் பரவாயில்லை; ஏற்றுக் கொள்ள முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்). (இத்தனைக்கும் invisible entity - யாரென்று கூட தெரியாது!!). ஆன்மீகத்தின் ஆரம்பத்தில் பிராமணர்களை எதிர்த்ததால் பிராப்ளம். பிறகு அவர்கள் கர்மம் அவர்களுக்கு என்று விட்டு விட்டேன். பிறகு, கோவிலில் பாட்டு பாடினால் டார்ச்சர்; பிறகு துறவறத்தை ஏற்றுக் கொள்ளாததால் பிராப்ளம். பிறகு சனாதனத்தை எதிர்த்ததால் டார்ச்சர் (anti national). பிறகு ராமகிருஷ்ணரை, விவேகானந்தரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிராப்ளம். பிறகு யார் யாரையோ கடவுளாக ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால். தொடர்ந்து வரும் இந்த டார்ச்சர் "நாஸ்தி அகம்" ஆக்கும் என்பதால் காமத்திற்கு முதல் எதிரியாக இருந்த என்னை "காமத்தில் வைத்து" திணித்தார்கள். (அது பொய் - காமம் உள் அழிவை தடுக்கவில்லை). காமத்தை திணித்த அவர்களே பிறகு காமத்தில் விழுந்து விட்டு கோவிலுக்கு வருகிறேன் என்று கோவிலுக்கு சென்றால் கூட பெரும் டார்ச்சர்!! இப்போது எங்கே போனாலும் டார்ச்சர்!! பிராமணர்கள் அல்ல; வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் டார்ச்சருக்கு காரணம் (இல்லாவிட்டால் அவர்களுக்கு சனாதனத்தில் இடம் இல்லையோ?! உள்ளே விட மாட்டார்களோ?!) என்று தோன்றியதால் இஸ்லாம், கிறிஸ்துவம் என்று அவர்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்!! இப்படி டார்ச்சர் ஒன்று தான் - ஆனால் விதவிதமாக காரணங்கள் (இப்படி கூட speculation: யாரோ ஒரு சிவன்/ கடவுள் நான் இறந்த பிறகு தான் "சிவன் போஸ்டை எடுத்துக் கொள்வேன்" என்று இருந்தானாம்; இன்று வரை என்னை கொல்ல முடியாததால், போஸ்டை இப்போது ஏற்றுக் கொண்டு விட்டானோ?! ஆனால், இது உண்மை: என்னைக் கொல்லவும் தொடர்ந்து முயற்சி நடக்கிறது; வேறு யார் யாரோ சாகிறார்கள் போல!!). முக்கியமான ஒன்று: இப்போது என்னை தண்ணி அடிக்க வைக்க (liquor drinking) பெரும் தூண்டுதல் நடைபெற்று வருகிறது!! எனக்கு இன்று வரை பழக்கம் கிடையாது (teetoller ). ************************************************* நான் இப்போது எழுதுவதை படித்து (மென்டலோ என்று!!😄 ) நான் முன்பு எழுதியதையெல்லாம் நம்பாமல் இருந்து விடாதீர்கள்!! மேலும், இந்த நிலை என் எதிரிகள் சிலர் அழியும் வரை மட்டும் இருக்கலாமோ என்னவோ!!). ************************************************* சில நாட்கள் முன்பு திருமூலர் முதல் தந்திரத்தில் எழுதிய "முப்பது உபதேசம்" முதல் சில பாடல்கள் படிக்க நேர்ந்தது. நான் "ஆஹா!! என்ன இது?! அப்படியே என் நிலையை பாடியிருக்கிறாரே!! சிவபெருமான் எனக்கு எவ்வளவு அருளியிருக்கிறான் என்றெல்லாம் கூட வியந்தேன்!!😄 (ஆனால் , அடுத்த நாளே டார்ச்சர் - மேற்கூறிய "நாஸ்தி அகம்" நிலைக்கு சென்று விட்டேன்!!😄😂) அதில் ஒரு அற்புதமான பாடல் - "பவளத்தில் சுடர் விடும் மாணிக்கத்தை பதிப்பான் நம் பெருமான்". இது ஒரு அற்புதமான விளக்கம். பவளம் என்பது crystal. அதற்கு சொந்தமாக எதுவும் கிடையாது. ஒளியும் கிடையாது. ஆகையால் அது தான் எதனை சார்ந்து இருக்கிறதோ அதை வெளிப்படுத்தும். உலகம் அல்லது கடவுள். இது மெய்கண்ட சைவம். ஆனால், அத்வைதம் என்ன கூறும் தெரியுமா?! அந்த பவளத்தில் ஒரு மாணிக்கம் இருக்கிறது - அது தான் ஆத்மன். மாணிக்கத்திற்கு இயற்கையான ஒளி உண்டா?! கிடையாது!! ஆனால், அத்வைதம் ஆத்மனுக்கு ஒளி உண்டு என்கிறது. என்னுடைய சைவ சித்தாந்தம் இயற்கையாகவே நம்முள் மாணிக்கம் உண்டு; ஆனால், அதன் ஒளியை தூண்ட சிவபெருமான் வேண்டும் என்கிறது (எங்கே அந்த சைவ சித்தாந்தம் எழுதப் பட்டுள்ளது என்று கேட்டால், அது என்னிடம் மட்டும் தான் இருக்கிறது!!!😄). ஆகையால், திருமூலரின் "பவளத்தில் ஒளி தரும் மாணிக்கத்தை பதிப்பான் சிவபெருமான்" என்று பாடியிருப்பது என் சைவ சித்தாந்த கருத்தை வலியுறுத்துவதால் சந்தோஷமாக இருந்தது!! ஆனால், எனக்குள் ஒளியை பதித்தானா?! மூன்று ஒளி இருக்கலாம் - ஞான ஒளி, ஆத்ம ஒளி மற்றும் சக்தி ஒளி - இவற்றில் ஞான ஒளி என் மாணிக்கத்தில் இருப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் (ஆகையால் அவ்வளவு "அகம்" அவ்வளவு "நாஸ்தி" இல்லை!!😄). ஏன் எல்லாவற்றையும் முழு ஒளியையும் எம்பெருமான் தர மாட்டானா?! என்று கேட்டால் அதற்கும் பதிலை திருமூலர் தருகிறார் - அவரவர் தேவைக்கேற்ப அவன் விருப்பப்படி அருளுவான்!! (ஆகையால் சிலருக்கு எந்த ஒளியும் இல்லாத மாணிக்கமோ?!😄😂). இன்னும் மீதி பாடல்களை படிக்க வில்லை. அதற்குள் பெரும் டார்ச்சர் மற்றும் நாஸ்தி அகம்!! "****************************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
என்னங்கடா இது...?! இப்படி ஒரு சீரியஸான காமெடியா?!! செயற்கை நுண்ணறிவில் (artificial intelligence) "வெப்பம்" temperature என்று ஒரு கான்செப்ட் உண்டு ("குளுமை" என்று வைத்திருக்கலாம்!😄)- நார்மலாக 0.7 என்று செட் செய்வார்கள். ஐஐடி காமகோடி, துக்ளக் குருமூர்த்தி போன்றவர்களுக்கு temperature - 2.0 என்று நினைக்கிறேன்!! பயங்கர கிரியேட்டிவாக உலவுகிறார்கள்!!😄😂 #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம #ஆன்மீக வாழ்க்கை
https://youtube.com/watch?v=WbROMuz-tC4&si=07rfI4ell_cGWusX
ஸ்ரீராமநவமிக்கான என் விரதம் முதல் மூன்று நாட்கள் வெற்றி; நான்காவது நாள் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு சென்று வந்தேன்; ஏதோ பயங்கர டார்ச்சர் பற்றிக் கொண்டு விட்டது. அடுத்த நாள் அந்த தலை டார்ச்சரால் காய்ச்சல், சளி என்று 3 நாட்கள் விரதம் இருந்த தடயமே இல்லாமல் உருக்குலைத்து விட்டது. ஆகையால், ராமநவமி வழிபட கூட முடியவில்லை (கோபத்தில் விருப்பமும் இல்லை - ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதற்கும் போகவில்லை). ஸ்ரீராமர் ரிஷிகளின் தவத்தை காப்பவர். நான் சனாதன ரிஷி அளவுக்கு பெரிய ஆள் இல்லையாகையால் என் தவத்தை காப்பாற்ற அவர் முயலவில்லை போலும்!!😄 ********************************************** எனக்கு இது மாதிரி டார்ச்சர் வருவது 15 வருடங்களாக நடக்கிறது; ஆனால், இந்த முறை மிக அதிகம். வழக்கமாக காமத்தில் விழுவது பற்றிய கர்மம் இப்படி டார்ச்சராக வருகிறது என்று மேலும் காமத்திற்கு எதிராக இருப்பேன். ஆனால், இது விரதம் இருப்பதற்கே எதிராகவோ என்று கூட குழப்பத்தில் தோன்றியது; அப்படியிருக்க வாய்ப்பில்லை என்று தான் நினைக்கிறேன். ஆனால் , அப்படிப்பட்ட காரணம் உண்மையானால் இதை மிக சீரியஸாக எடுத்துக் கொண்டு, நாத்திகத்தை முற்றிலுமாக வேறறுக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது என்று நினைக்கிறேன். தமிழகத்தில் சற்று பாஜக, சனாதனம் வந்தாலும் பரவாயில்லை; இத்தகைய கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை நாம் முற்றிலும் விலக்க வேண்டும். என் வாழ்க்கை அனுபவத்தில் கூறுகிறேன். மேலும், இன்று ஒரு பிரயாண விலாக் ஒன்று பார்த்தேன் - https://youtu.be/RrR33NVoChQ?si=0v9qHZ1D7uGOoz5K
- அதனால் கம்போடியாவில் நடந்த இனப்படுகொலை பற்றி விவரமாக படிக்க நேர்ந்தது - மிக மிக மிக மிக மிக மிக மிக கொடூரம் - எதனால்?! ஏழைகளின் வாழ்வு; கம்யூனிசம்; சோசியலிஸம் என்ற பெயரால்!!! ஆனால், உண்மையை ஆராய்ந்தால் அது கடவுளுக்கு எதிரான சக்தியால் என்று எளிதாக கூறலாம்!! நாத்திகம் ஓரளவிற்கு மேல் சென்றால், இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது!! ஆகையால் சனாதனம் கூட பரவாயில்லை; பிஜேபி பரவாயில்லை; கடவுளுக்கு எதிரான நாத்திகத்தை அறவே ஒழிக்க வேண்டும். ************************************************ சரி, எழுத வந்த விஷயத்திற்கு வருகிறேன். பல காலம் ஸ்ரீராமரை பிரத்யேகமாக (exclusively) ஒரு 15-20 நாட்கள் வழிபட வேண்டும் என்று தோன்றுவதுண்டு. ஆகையால் தான் ரொம்ப பிளான் பண்ணி (அந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு உடல்நிலை வேறு சரியில்லை) பத்ராசலம் சென்று அங்கே ஒரு வாரமாவது தங்கி தினமும் விரதம் கோவில் என்று இருக்க வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு சென்றேன். ஆனால், ஏனோ இரண்டு நாட்களில் திரும்பி விட்டேன். அதேபோல் ஸ்ரீராமரை மும்மூர்த்திகளில் முதல்வராக வழிபட வேண்டும் என்று (அவருக்கோ) யாருக்கோ பல நாள் ஆசை!!😄 பத்ராசலம் செல்ல பல காலம் ஆசை கொண்டிருந்த நான், இந்த விஷயம் ஒரு முறை பூஜா நேரத்தில் தோன்றிய போது உடனே மறுத்து விட்டேன். என்ன தான் எனக்கு ராமபக்தி இருந்தாலும் என் பூஜையறையில் சிவபெருமானுக்கு தான் முதலிடம்; ராமரை நடுநாயகமாக வைத்து வணங்க முடியாது என்று கூறிவிட்டேன்!! 😄😂 (ஆனால் , ராமர் விடவில்லை; என்றாவது ஒரு நாள் இவனுக்கு என் பெருமை பற்றிய உண்மை தெரியவரும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது!! 😄😂) *********************************************** ஒரு முறை இந்த எண்ணம் மீண்டும் தோன்றிய போது, நான் அதிகம் யோசிக்கக் கூட இல்லை; உடனே "ராமரால் எப்படி உலகை ஆள முடியும்?! அவர் உத்தம குணத்திலும், சாத்வீகத்திலும் உயர்ந்து தோய்ந்தவர்; அவரால் இந்த உலகை ஆளவெல்லாம் முடியாது; உலகை ஆள்வதென்றால் சிவபெருமான் போல் பலபடி மக்களுக்காக கீழே இறங்கி வர வேண்டியிருக்கும்; அது அவருக்கு ஒத்து வராது" என்று கூறிவிட்டேன். உடனே, "ராமரை பற்றி நீ என்ன நினைத்தாய்?! ரிஷிகளின் தவத்தை காப்பாற்ற அம்பு விட்டவர்; தீமையை எதிர்க்க அவர் தயங்குவதில்லை.." என்றெல்லாம் பதில் தோன்றியது!! ஆகையால் தான் இப்போது தோன்றியது - ஏன் என் தவத்தை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை?!😄😂 சரி, அவர் தான் சனாதன ரிஷிகளின் பங்காளன்; நம்முடைய அந்த "ஏழை பங்காளன்" அவன் எங்கே போனான்?! ஆம், எனக்கும் தான் தெரியவில்லை!! அவன் எங்கே போனான்?! (ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கோ?!) ஸ்ரீராமரை வழிபட்டால் வரமாட்டான் என்றால் பிறகு எதற்கு சிதம்பரத்தில் பெருமாள் சன்னதி?! **********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஸ்ரீராமநவமி 26 மார்ச் வருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்றிலிருந்து 5 நாட்களுக்கு நான் விரதம் இருக்கப் போகிறேன்!😄 முதல் மூன்று நாட்கள் மூன்று வேளையும் சாப்பாடு கட் (கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யக் கூடும்!!). பிறகு இரண்டு நாட்கள் மதியம் மட்டும். டிவி, நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் எதுவும் கிடையாது. பெண்கள் முகத்தை கூட இந்த நாட்களில் பார்க்கக் கூடாது. தியானம் மற்றும் சாத்திர நூல்கள் மட்டும்....... என்று வழக்கமான விரத விதி முறைகள். 26ம் தேதி கும்பகோணம் செல்லாம் என்று நினைத்திருக்கிறேன். **********************
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
அனைவருக்கும் ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள்!! ********************************************* சமீபத்தில் கேட்ட கதீஜா ரஹ்மானின் பாடிய பாடல்!! *************************************************. ஓ அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் மதீனாவின் அரசரும், மலாக்குகளின் அன்புக்குரியவரும் ஆவீர்.
என் இதயத்தின் வணக்கத்தையும், வாழ்த்துகளையும் அல்லாஹ்வின் நபிக்கு தெரிவிக்கிறேன்.
நீங்கள் கவ்சர் ஊற்றின் அதிபரும், நியாயத் தீர்ப்பு நாளில் எங்களுக்கு பரிந்துரை செய்யப்போகும் ஒருவரும் ஆவீர்.
எல்லாவற்றிலும் உங்கள் தெய்வீக ஒளியும் சாரமும் நிறைந்துள்ளது.
உங்கள் வெளிப்பாடு அனைத்திலும் தெளிவாகத் தெரிகிறது.
ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் கருணை காட்டுங்கள்.
தொலைவில் துன்பத்தில் இருக்கும் மக்களை காத்து ஆறுதல் அளியுங்கள்.
மிஅராஜ் நிகழ்வின் அதிபரே, முழுமையின் உரிமையாளரே, நீங்கள் எல்லாரிலும் தனித்துவமானவர்.
அரபுகளின் மகத்தான அரசரே, எங்கள் பணிவான விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அல்லாஹ் ஒவ்வொரு வேண்டுதலையும் கேட்கிறான், மேலும் அவர் உங்களின் மகத்துவத்தை சாட்சியாகக் கூறுகிறார்.
இந்த உலகம் அமைதிக்காக ஏங்குகிறது, அது துன்பங்களாலும் குழப்பங்களாலும் நிரம்பியுள்ளது.
எங்கள் ஒவ்வொரு அடியும் ஒரு சோதனையாகும்; எங்கள் வெற்றி அல்லாஹ்வின் விருப்பத்திலும் வழிகாட்டுதலிலும் உள்ளது.
https://youtu.be/n7e3fb65Gao?si=zdT5TGVmIsjbDtzK
**************** #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
ஞானபீட விருது என்பது ஒரு தனியார் டிரஸ்ட் வழங்கும் விருதாம் (டைம்ஸ் ஆஃப் இந்தியா). அரசாங்கம் வழங்கும் விருது இல்லையாம்!! பிறகு எதற்கு அதைப்பற்றி சர்ச்சை?! இந்த விருது 60 முறை இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய செம்மொழி என்று பெருமைப் பேசப்படும் தமிழுக்கு இதுவரை எத்தனை முறை வழங்கப் பட்டுள்ளது தெரியுமா?! வெறும் இரண்டு முறை தான்!! என்னவொரு அக்கிரமம்!! இதைப்பற்றி ஜெயமோகன் இதற்கு முன் ஏன் பேசவில்லை?! தமிழில் இருந்து வந்த மொழி என்று கருதப்படும் கன்னட மொழி இது வரை 8 முறை பெற்றுள்ளது. மலையாளம் 6 முறை பெற்றுள்ளது; ஆனால் தமிழ் 2 முறை தான் (அதில் ஒன்று தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத "சித்திரப் பாவை" என்ற "முற்போக்கு" கதை எழுதிய யாரோ அகிலனாம்!!). இந்த அளவிற்கு தமிழ் மொழி "பாரதீய வித்யா பீடத்தால்" புறக்கணிக்க பட்டுள்ளது!! ஏன் யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை?! வைரமுத்து இந்த விருதை புறக்கணித்தால் தமிழுக்கு பெருமை!! 😄😂. ********************************************** மாறாக, ஏன் பாடலாசிரியருக்கு கொடுக்கப் பட்டது என்ற வாதம் சரியல்ல! கன்னடத்தில் நான்கு முறை கவிஞர்களுக்கு தான் கொடுக்கப் பட்டுள்ளது!! ஏன் தமிழுக்கு 2 முறை தான்?! புதுமைப்பித்தனில் ஆரம்பித்த "முற்போக்கு கலாச்சார சீரழிவை போற்றும், பெண்ணியம் பேசும்" வகையான "இலக்கியங்கள்" தமிழில் அதிகம்!! இவற்றுக்கு ஞானபீட விருது வழங்கப் படாதது எனக்கு சந்தோஷமே!! 😄 இலக்கியம் என்றால் அந்த சமூகத்தின் நல்ல விஷயங்களை வெளிப்படுத்தி அவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் (reinforce unique cultural values). சமூகத்தின் அவலங்களை படம் பிடித்து காண்பிப்பது மட்டும் தான் இலக்கியம் என்று யார் வரையறை செய்தார்கள் என்று தெரியவில்லை!! அவையும் கூட உண்மையான கலாச்சாரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்படிப் பட்ட- "முற்போக்கு", "பெண்ணுரிமை", "வட்டார வழக்கு" - தவிர்த்த எழுத்தாளர்கள் யாரும் தமிழில் இல்லை என்றும் சொல்ல முடியாது!!😄😂😂 . சரி, அப்படி கன்னடத்தில் என்ன தான் எழுதினார்கள் என்று பார்த்தால், எல்லாம் "பாரதீய" மயமாக இருக்கிறது!!😄. கன்னட கலாச்சாரத்தை விட "வேத கலாச்சார" நூல்களாக இருக்கிறது!! கன்னத்தில் பரிசு பெற்ற சிலர் படைப்பை பார்ப்போம்!! குவெம்பு என்பவர் எழுதியது நவீன ராமாயணம். கோகக் என்பவர் எழுதியது வேத காலத்தை பற்றிய கவிதைகள்!! யூ ஆர் அனந்தமூர்த்தி எழுதியது ஆச்சாரமான பிராமணர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!! வெங்கடேச ஐயங்கார் எழுதியது பிரிட்டிஷ்க்கு எதிரான மன்னர் பற்றியது! சிவராம் கரந்த் என்பவர் எழுதியது மனித வரலாற்று தொன்மம், கிரீஷ் கர்னாட் துக்ளக் பற்றிய வரலாற்று கதை - ஆக இவை எவையும் கன்னட கலாச்சாரத்தை புரிந்து கொள்ள உதவாது!! இது போன்ற "இலக்கிய படைப்புகள்" தமிழில் இல்லை தான்!! இப்போது "பாரதீய சனாதனத்துடன்" தமிழை இணைக்க இந்த விருது!! எனக்கு வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் போன்றவை இலக்கியமாக தோன்றியதும் இல்லை - தமிழை வலுப்படுத்தாமல் வட்டார கொச்சை மொழிகளை உபயோகக்கும் நாவல்கள்!! ஆக, வைரமுத்து தகுதியானவர் என்றாலும் ஜெயமோகன் கூற்றிலும் சிறிது உண்மை உள்ளது!!! ஆனாலும், ஜெயமோகன் சற்று வரம்பு மீறி பேசி விட்டார் என்றே கூற வேண்டும்.
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த காலத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருந்த போது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சிநிரல் அறிவிக்கப்பட்டவுடன் ஏற்படும் ஆர்வம் ஏற்படுகிறது!! யார் இந்த முறை ஜெயிப்பார்கள்? ************************************************. முதலிலேயே சொல்லி விடுகிறேன் - எனக்கு எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட சமயத்தில் நான் நியூட்ரல் தான்; இந்தியா பக்கம் கிடையாது!😄 நாமெல்லாம் எந்நாட்டவர்க்கும் இறைவனை சேர்ந்தவர்கள்; உலகம் தான் நம்முடைய நாடு!!😄😂). திறமை உள்ளவர்கள் ஜெயிக்கட்டும் என்பது போல், பெரும்பான்மை மக்கள் யாரை தேர்வு செய்கிறார்களோ அவர்கள் ஜெயிக்கட்டும். ************************************************* இவர்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்ற விருப்பம் எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும், என் கணிப்பை கூறலாம் என்று நினைக்கிறேன். என் கணிப்பு அதிமுக கூட்டணி ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது - ஆனால் சீட் வித்தியாசம் அதிகம் இருக்காது. . தவெக, நாதக போன்ற கட்சிகள் திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிப்பதால், மாறாக திமுக மீண்டும் ஜெயிக்கவும் வாய்ப்பு உள்ளது. ************************************************* ஆரம்பத்தில் திமுகவும், பாஜகவும் கூட்டு சேரக்கூடிய விபரீதமான நிலை இருந்தது. போதாத குறைக்கு அண்ணாமலை வேறு அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றார். திமுக-பாஜக கூட்டணி அமைந்தால் திராவிட இயக்கங்களை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று கருதினேன் (தவெகா அதற்குத் தானோ?!). ஊழல் அமைச்சர்கள் பிரச்சனையை வைத்துக் கொண்டு ஸ்டாலினால் பாஜகவை முழுமையாக எதிர்க்க முடியாது. ஆகையால், இந்த கூட்டணி அமைவதை தடுக்க வேண்டியிருந்தது. இதனால் அண்ணாமலை முடக்கப்பட்டு பாஜக வேண்டாம் என்று இருந்த அதிமுகவை பாஜகவுடன் கூட்டணி சேர்க்க வேண்டியதாகி விட்டது!!😄 இல்லாவிட்டால் கண்டிப்பாக ஸ்டாலின் பாஜகவுடன் கூட்டணிக்கு உடன்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்!!😄 அப்போது இல்லாத ஒரு முக்கியமான ஃபேக்டர் விஜயின் தவெக!! சமீபத்தில் வந்த கருத்து கணிப்பு கூறும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருப்பது உண்மையா என்று தெரியவில்லை. அவரும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்திருக்க வேண்டியது. ஆனால், அந்த கூட்டணியை திமுக-பாஜக வெல்லக் கூடும் என்று நினைத்தேன். இப்போது விஜய் திமுகவை எதிர்க்கும் அளவிற்கு, திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து அதன் வெற்றிக்கு உதவப் போகிறார் என்று தெரிகிறது!😄. பாஜக இருக்கும் கூட்டணியில் அவர் சேர்வது அவருக்கு இருக்கும் ஒரே தனித்தன்மையை பாதிக்கும். ஆகையால் அவர் சேரமாட்டார் என்று தோன்றுகிறது. மாநில வளர்ச்சிக்கு முயலும் அளவுக்கு அடித்தர மக்களின் பிரச்னைகளை ஸ்டாலின் கவனிக்க வில்லையா, ஆயிரம் கோவில்களுக்கு பிளீச்சிங் செய்தது மக்கள் ஆதரவை தருமா , தினமும் டிவிக்களில் காணப்படும் மக்கள் போராட்டங்கள் உண்மையற்றதா என்றெல்லாம் தெரியவில்லை. அதிமுக எடப்பாடி பழனிச்சாமியால் திருப்பரங்குன்றம் கூத்து போன்ற கேலிக் கூத்துக்கள் மாநிலம் முழுவதும் அரங்கேறாமல் தடுக்க முடியுமா? அல்லது மத, சாதி, இன அடிப்படை கூத்துக்கள் தமிழகத்தில் அதிகமாகுமா என்றும் தெரியவில்லை. (திமுக கூட கொங்கு நாடு போன்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியது தவறு).மக்கள் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று நம்புவோம்!! (அல்லது SIR ஓரளவிற்கு வெற்றியை முடிவு செய்து விட்டிருக்குமோ?!😄 நான் படிவம் சமர்ப்பிக்க வில்லை; ஆகையால் எனக்கு ஓட்டுரிமை இல்லை) ************************************************ #ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
மற்றுமொரு அற்புதமான பாடல்! (தர்பாரி கனடா). இப்படி ஒரு பாடல் இருப்பது கூட தெரியாமல் 15 வருட ஆன்மீக வாழ்க்கையா?! என்று தோன்றுகிறது!! சமீபத்தில் ராகமாலிகா சூப்பர் சிங்கர் போட்டியில் ஒருவர் பாடினார்; முதல் தடவை கேட்டவுடனே உள்ளத்தை தொட்டது. இவர் பாடுவது இன்னமும் அருமை. தமிழில் இது போன்ற பாடல்கள் வர வேண்டும்!!
#ஆன்மீக வாழ்க்கை #ஓம் நமோ நாராயணா #ஓம் சிவாயநம
https://youtube.com/watch?v=WKNQL59rdj8&si=1ZkDy0fRqkh_5q6y












