❤️🤍🩵𝓣𝓱𝓪𝓱𝓲𝓻𝓪🌹𝓠𝓾𝓮𝓮𝓷🩵🤍❤️
708 views • 2 months ago
*بسم الله الرحمن الرحيم*
*السلام عليكم و رحمة الله و بركاته*
*குர்ஆன் சுன்னா வழியில் வெள்ளிக்கிழமைத் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள்.*
01) ஜும்ஆ உடைய சுன்னத்தான குளிப்பை குளித்தல் வேண்டும்.
02) அழகான ஆடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ள வேண்டும்.
03) வீண் பொழுது போக்குகளை விட்டு நேர காலத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்.
04) இறுதித்தூதர் எம்பெருமானார் ﷺ அவர்கள் மீது அதிக அதிகமாக ஸலவாத்துக்கள் ஓதிக் கொள்ள வேண்டும்.
05) அல்குர்ஆனில் இடம்பெறும் அத்தியாயம் சூரத்துல் கஹ்ஃப் இனை ஓதிக் கொள்ள வேண்டும்.
06) இமாம் அவர்கள் ஜும்மா பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அருகில் இருப்பவர்களோடு பேசாமல் அப்பிரசங்கத்தை வாய் மூடி காது தாழ்த்தி சிறந்த முறையில் செவிமடுக்க வேண்டும்.
07) நமக்கு முன் பள்ளிவாசலுக்குச் சென்று அமர்ந்திருப்பவர்களைத் தாண்டி அவர்களின் பிடரியைக் கடந்து செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
08) ஜும்மா தொழுகை முடிந்து விட்டால் வழமைப் போல் தொழுகைக்குப் பின்னால் ஓதக்கூடிய அனைத்து திக்ருகளையும், தஸ்பீக்ஃகளையும் ஓதிக் கொள்ள வேண்டும்.
09) பின்னர் பள்ளியில் இரண்டு இரண்டு ரக்கஅத்துகளாக நான்கு ரக்கஅத்துக்கள் சுன்னத் தொழுகையை தொழவேண்டும்.
10) வீட்டில் தொழக் கூடியவர்களாக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டு ரக்கஅத்துக்களும், வீட்டில் 2 ரக்கஅத்துக்களும் தொழுது கொள்ள வேண்டும்.
இவ்வாறாக பலதரப்பட்ட நிறைய ஒழுங்குகளை பேணப்பட வேண்டிய நாள் இந்த வெள்ளிக்கிழமை எனும் ஜும்மா உடைய நாள். நம்மில் பலர் ஜும்ஆவுடைய நாளின் சிறப்புக்கள், ஒழுங்குகள் பற்றி அறிந்திருந்தும் அந்த நாளை கண்ணியப்படுத்த மறந்துவிடுகிறோம்.
இந்தப் பதிவு உங்களுக்கு ஜும்ஆவுடைய சிறப்புகளை நினைவுபடுத்துவதாக இருக்கட்டும்..
#💜🌹அல்லாஹு🤍 அக்பர் 🌹💚 #💚🤍🧡тнαнιяα🌹qυєєи💜🤍💚
15 likes
14 comments • 8 shares