#sithar sivavaakkiyar. சிவவாக்கியர் அருளிய🌹...!*
▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
*🙏சிவவாக்கியம்..!*
➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿➿
💛💚💛💚💛💚💛💚💛💚💛💚💛💚
*நூல்: 212...!*
அள்ளிநீரை யிட்டதே தகங்கையிற் குழைத்ததேது
மெள்ளவே மிணமிணவென்று விளம்புகிற்கு மூடர்காள்
கள்ளவேட மிட்டதேது கண்ணைமூடி விட்டதேது
மெள்ளவே குருக்களே விளம்பிடீர் விளம்பிடீர்.
*பொருள் விளக்கம்:*
ஆற்றில் குளிக்கும்போது கைகளில் ஆற்று நீரையள்ளி ஆற்றிலே விட்டு, உள்ளங்கையில் விபூதி எடுத்து அதில் நீரை விட்டுக் குழைத்து உடம்பு முழுவதும் பட்டை போட்டு மெல்ல வாய்க்குள்ளேயே முணுமுணுவென்று மந்திரங்களைச் சொல்லும் மூடர்களே! ஏன் இந்தக் கள்ள வேடம்? மரணம் வந்தபோது கண்களை மூடிவிடுகிறீர்கள். இதனால் சாதித்ததேது? இவ்வாறு செய்யும் குருக்களே! இதன் தத்துவத்தை மெதுவாக விளக்கிக் கூறுங்கள்.
*🌷நமசிவய ௐ🌷*
*சித்தர் சிவ வாக்கியர் மலரடிகளையும் - நம்பெருமான் (அப்பன்) திருவடிகளையும் போற்றி வணங்குகின்றேன்....!!!!*
*🙏சிவாய நம🙏*
*🙏திருச்சிற்றம்பலம்🙏*
*வளரும்...*
🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩🩵🟩


