#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩
#பகிர்வு
திமுகவின் தோல்வி தாளாமல் திமுககாரர்கள் இன்னும் புலம்புகிறார்கள் என்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியாதவர்களில் என் போல் கட்சி சாராதவர்களும் அடக்கம். திமுககாரர்களே அமைதியாக இருந்தாலும் என் போன்றவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.
ஒரு நல்லவனுக்கு, ஊருக்கு உழைத்தவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கலங்குவதைப் போல்தான் எங்களைப் போன்றவர்கள் உணர்கிறோம். ஏசுவை சிலுவையில் அறைந்த யூதர்களைப் போல, ஜோன் ஆஃப் ஆர்க்கைக் கொளுத்திய ஃபிரெஞ்ச் மக்களைப் போல, உங்களுக்காகப் பாடுபட்ட ஸ்டாலினைத் தோற்கடித்து விட்டீர்களே பாவிகளே என்று தான் தமிழ் மக்களைப் பார்த்தால் எனக்கு அடக்க முடியாத கோபத்தால் சொல்லத் தோன்றுகிறது.
ஸ்டாலினைப்போல் இப்படி இதுவரை யார் இருந்தார்கள், இப்படி யார் உங்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள், எத்தனை கவனமாக, எத்தனை அனுசரணையாக, எத்தனை அரவணைப்பாக, எத்தனை பாதுகாப்பாக, ஒன்றிய அரசு கொடுத்த எத்தனையோ சிரமங்களுக்கு இடையில் உங்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும், உங்கள் சுயமரியாதைக்காகவும், இந்த மண்ணுக்காகவும், மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் அயராது நின்றார்களே, அவர்களைத் தோற்கடித்துவிட்டு ஒரு கோமாளிக் கூட்டத்தைக் கொண்டு வந்து அவர்கள் இடத்தில் அமர்த்தி இருக்கிறீர்களே உங்களுக்கு மூளை என்று ஏதாவது இருக்கிறதா என்று தான் தமிழ்நாட்டில் ஒவ்வொருவரையும் பார்த்து சட்டையைப் பிடித்துக் கேட்கத் தோன்றுகிறது.
நடந்ததற்கு மக்களைக் குறை சொல்லக்கூடாது என்பவர்கள் மகா மடையர்கள். தவற்றுக்குத் தவறு செய்தவனைக் குறை சொல்லாமல், வெறெவனைக் குறை சொல்வது? அப்படி உண்மையை வெளிப்படையாகப் பேசினால்...மக்களை குறை சொல்கிறார்கள் .... ஓட்டுப்போட மாட்டார்கள் என்று அரசியல் கட்சிகள் வேண்டுமானால். அமைதிப்படை சத்தியராஜைப் போல் புன்னகைத்துக் கொண்டும், மழுப்பிக் கொண்டும் போகலாம். மக்களில் ஒருவராக நடந்ததைப் பார்த்துப் பேசுகிற நமக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. எனவே நாம், மக்கள் பொறுப்பில்லாமல் தற்குறித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களில் ஒருவராக நாம் உண்மையை
முகத்தில் அறைந்தாற்போல் சொல்லத்தான் வேண்டும்.
அப்படிச் சொல்வது அடிப்படையில் விமர்சனங்களற்ற, நிபந்தனைகளற்ற திமுக ஆதரவு ஆகாது. பாஜக கூடாது என்பது எப்படி அடிப்படையில் காங்கிரஸ் ஆதரவு ஆகாதோ, அப்படித்தான் இது. இரண்டும் சமுதாய நலன் சார்ந்தவை.
இத்தனை வருட வாழ்வில் எந்த ஆட்சியின் தோல்வியும் இப்படி என்னை பாதித்ததே இல்லை. ஸ்டாலின் ஆட்சியின் தோல்வி மிக மோசமான தோல்வி. ஸ்டாலினுக்கல்ல, தமிழ்நாட்டிற்கு. இந்தியாவில் எல்லோருக்கும் முன்னுதாராணமாக இருந்த ஒரு மாநிலம் இன்று சினிமாக்கவர்ச்சியில் வீழ்ந்து. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறிக்கூட்டமாக, பிறர் அனைவரும் எள்ளி நகையாடும் கேவலத்திற்கு உள்ளாகி விட்டதே என்ற மனவலி,.... தாள முடியாத மனவலி.
இனி இந்தச் சமூகம் எப்படி மீண்டு வரப்போகிறது, எதைப்பிடித்து மீண்டு வரப்போகிறது, அப்படி வராவிட்டால் எல்லாச் சிறுமைகளும் நம்மைச் சூழுமே என்ற துக்கம் தூக்கத்தைக் கொல்கிறது. இந்தப் பைத்தியக்கார இளைஞர் கூட்டத்திற்குப் படிப்பு ஏன் சீர்தூக்கிப் பார்க்கும் எந்த விதமான அறிவையும் வழங்கவில்லை, சினிமா மோகம் ஏன் இப்படி அறிவை அரித்துத் தின்று விட்டது என்ற கேள்விகள் மனதில் இருந்து மறைய மறுக்கின்றன.
இந்த அசம்பாவித நேரத்தில் உறுதியாக நின்றிருக்க வேண்டிய, மிகச்சிறந்த கொள்கைகளை இதுவரை உயர்த்திப் பேசிய, மக்கள் தலைவர்கள் எல்லாம் கேவலம் ஒரு சீட்டுக்கும், ரெண்டு சீட்டுக்கும், தெருவோரம் மூணு சீட்டு விளையாடுகிறவர்களைவிட அற்பமான அரசியல் நடத்தையை வெளிப்படுத்துகிறார்களே என்ன கொடுமை இது என்ற ஏமாற்றம், சிதைக்கப்பட்ட அவர்களின் நம்பகத்தன்மை, எல்லாமே தமிழகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தைத் தருகின்றன.
யோசித்துப் பாருங்கள். ஸ்டாலினைக் கண்ட கண்கள், வேறொருவரை எப்படிக் காண முடியும்? தமிழக அரசியலில் 'கொண்டல் வண்ணன்' ஸ்டாலின் தான்.
எந்த ஒரு ஆட்சியும் ஸ்டாலினின் கடந்த ஐந்து வருட ஆட்சியைப்போல் சிறப்பாக நிச்சயம் அமையப் போவதில்லை. அதற்கான தகுதியோ, திறமையோ, அறிவோ, தொலை நோக்குப் பார்வையோ வேறு எவரிடமுமே இல்லை எனும் போது இருப்பதிலேயே தற்குறிகளான தவெகவிடம் எப்படி இருக்க முடியும்? அவர்களை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள் இந்த மடையர்கள்? ஒரு சமுதாயமாக தமிழ்ச் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கேவலம் இது? கொள்ளை நோய் கொண்டு மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள் என்பதற்கும், சினிமாக் கவர்ச்சியில் மூளை மழுங்கிக் கொத்துக்கொத்தாக மக்களின் அறிவு மடிந்து போனதற்கும் என்ன வேறுபாடு? எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் இது?
அறுசுவை உணவென்றால் அதில் கொஞ்சம் கசப்பும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதை விடுத்து மலத்தை உண்ணப் போன மக்களை நினைத்துக் கோபமும், கவலையும் கொள்ளாமல் எப்படி இருப்பது?
ஜெருசலம் வீழ்ந்த போது ஜெரிமையா பட்ட துன்பத்திற்கு ஈடான துன்பம் இது. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்பட வேண்டிய துயரம் இது. ஒரு சமூகம் மாயையில், மடமையில் வீழ்ந்து தன் மாண்புகளையும், மதிப்பையும் இழந்து இழிவைத் தேடிக்கொண்ட கொடுந்தருணம் இது.
தமிழ்ச்சமூகம் மட்டுமின்றி, உலகின் எல்லாச் சமூகங்களும் படிக்க, காலாகாலத்துக்கும் புத்தகங்களில் வைக்கப் பட வேண்டிய வரலாற்றுப் பாடம் இது.


