Varahi
#விநாயக #🕉️ ஓம் விநாயக போற்றி 🙏🏼 சதுர்த்தி ஸ்பெஷல்*🌹
மனிதர்களே தங்களுக்கு விதவிதமாக பெயர்களை சூட்டிக் கொள்ளும் போது, அண்ட சராசரத்தையும் தனது தொந்தியில் அடக்கி வைத்துள்ள கணபதிக்கு எத்தனை பெயர்கள் இருக்க வேண்டும்? கணபதியின் வித்தியாசமான பெயர்களோடு, அவர் கோவில் கொண்டுள்ள திருத்தலங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
மயிலாடுதுறை -அகத்திய விநாயகர்
மதுரை-ஆலால சுந்தர விநாயகர்
சென்னிமலை- இந்திர விநாயகர்
திருக்கச்சூர் - கருக்காத விநாயகர்
ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
திருவாலங்காடு - சித்தி விநாயகர்
நாகப்பட்டிணம் - பஞ்சமுகி விநாயகர்
புதுக்கோட்டை - பைரவி விநாயகர்
- காக்கைய நல்லூர்- வயிறு வெடித்த விநாயகர்
திருநாட்டியத்தான்முடி - காப்பி விநாயகர்
திருநெல்வேலி - சக்கரைப் பிள்ளையார்
ஒரகடம் - வெள்ளெருக்கு விநாயகர்
திருக்காறாயில் - கடுக்காய் விநாயகர்
ஆவிடையார் கோயில் - வல்லப்ப விநாயகர்
திருப்புறம்பியம் - வெயிலுக்குகந்த விநாயகர்
சங்கரன்கோயில் - காவாணிப் பிள்ளையார்
கோயம்புத்தூர் - ஆடிவரும் பிள்ளையார்
திருமணிக்கூடம் - நாலாயிரத்தெரு விநாயகர்
தூத்துக்குடி - சுகம் தரும் விநாயகர்
வேதாரண்யம் - வீரஹத்தி விநாயகர்
இவை தவிர
விநாயகரின் 50 வடிவங்களும், அந்த வடிவங்களை வணங்குவதால் நாம் அடையும் பலன்களையும் பற்றி தெரிந்துக் கொள்வோம்
1. ஏகாக்ஷர கணபதி: கணபதி அருள் கிடைக்கும்.
2. மகா கணபதி: பரிபூரண சித்தி.
3. த்ரைலோக்ய மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.
4. லக்ஷ்மி கணபதி: தன அபிவிருத்தி.
5. ருணஹரள கணபதி: கடன் நிவர்த்தி.
6. மகா வித்யா கணபதி: தேவ அனுக்ரகம்.
7. ஹரித்ரா கணபதி: உலக வசியம்.
8. வக்ரதுண்ட கணபதி: அதிர்ஷ்ட லாபம்.
9. நிதி கணபதி: நிதி ப்ராப்தி.
10. புஷ்ப கணபதி: தானிய விருத்தி.
11. பால கணபதி: மகிழ்ச்சி, மன நிறைவு.
12. சக்தி கணபதி: சர்வ காரியசித்தி.
13. சர்வ சக்தி கணபதி: சர்வ ரக்ஷாப்ரதம்.
14. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி: துரித பலன்.
15. குக்ஷி கணபதி: ரோக நிவர்த்தி.
16. ஸ்ரீ சந்தான லட்சுமி கணபதி: மக்கட்செல்வம்.
17. ஸ்ரீ ஸ்வர்ண கணபதி: ஸ்வர்ண பிராப்தி.
18. ஹேரம்ப கணபதி: மனச்சாந்தி.
19. விஜய கணபதி: வெற்றி.
20. அர்க கணபதி: தோஷ நிவர்த்தி.
21. ச்லேதார்க்க கணபதி: மாலா மந்திரம்.
22. உச்சிஷ்ட கணபதி: திரிகால தரிசனம்.
23. போக கணபதி: சகலலோக ப்ராப்தி.
24. விரிவிரி கணபதி: விசால புத்தி.
25. வீரகணபதி- தைரியம்.
26. சங்கடஹர கணபதி: சங்கட நிவர்த்தி
. 27. கணேசாங்க நிவாரணி: லட்சுமி மந்திர சித்தி
. 28. விக்னராஜ கணபதி: ராஜயோகம்.
29. குமார கணபதி: மாலா மந்திரம்.
30. ராஜ கணபதி: மாலா மந்திரம்
. 31. ப்ரயோக கணபதி: மாலா மந்திரம்.
32. தருண கணபதி: தியானயோக ப்ராப்தி.
33. துர்கா கணபதி: துக்க நிவாரணம்.
34. யோக கணபதி: தியானம்
35. நிருத்த கணபதி: கலா பிவிருத்தி.
36. ஆபத்சகாய கணபதி: ஆபத்துகள் நீங்குதல்.
37. புத்தி கணபதி: வித்யா ப்ராப்தி.
38. நவநீத கணபதி: மனோவசியம்.
39. மோதக கணபதி: சம்பூர்ண பலன்.
40. மேதா கணபதி: மேதா பிவிருத்தி
. 41. மோஹன கணபதி: ரக்ஷாப்ரதம்.
42. குரு கணபதி: குருவருள்.
43. வாமன கணபதி: விஷ்ணு பக்தி.
44. சிவாவதார கணபதி: சிவபக்தி.
45. துர்வாக கணபதி: தாப நிவர்த்தி.
46. ரக்த கணபதி: வசிய விருத்தி.
47. அபிஷ்டவாத கணபதி: நினைத்ததை அடைதல்.
48. ப்ரம்மண கணபதி: ப்ரம்ம ஞானம்.
49 . மகா கணபதி: ப்ரணவமூலம்.
50. வித்யா கணபதி: ஸ்ரீ வித்தை. மகா கணபதியை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.
சிவப்பு நிறப் பொருட்கள்
கணபதியின் நிறம் சிவப்பு. அவர் பூஜையில் சிவப்பு வஸ்த்ரம், சிவப்பு பூக்கள், சிவப்புச் சந்தனம் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த சிவப்பு நிறத்தால் சூழ்நிலையில் கணபதியின் பவித்ர துகள்கள் அதிகமாக ஆகர்ஷிக்கப்பட்டு, மூர்த்தியில் எழுச்சி ஏற்பட உதவுகிறது.
தோற்றமும் பொருளும்
கண + பதி = கணபதி. ஸமஸ்க்ருத அகராதிப்படி ‘கண’ என்றால் பவித்ரமான துகள்கள். பவித்ரம் என்றால் அதி சூட்சுமமான சைதன்ய துகள்கள் என்று அர்த்தம். ‘பதி’ என்றால் ஸ்வாமி என்று அர்த்தம். ‘கணபதி’ என்றால் ‘பவித்ரமான துகள்களின் ஸ்வாமி’ என்று அர்த்தம்.
வேறு சில பெயர்கள்
தமிழ்நாட்டில் கணபதி, பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். முத்கல் ரிஷி கணேச ஸஹஸ்ர-நாமம் எழுதியுள்ளார். அதில் கணபதியின் 1000 நாமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. துவாதஸ நாம ஸ்தோத்திரத்திலுள்ள கணபதியின் 12 நாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ரதமம் வக்ரதுண்டம் ச ஏகதந்தம் த்விதீயகம்
த்ரிதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம் கஜவக்த்ரம் சதுர்தகம் |
லம்போதரம் பஞ்சமம் ச ஷஷ்டம் விகடமேவ ச
சப்தமம் விக்னராஜேந்திரம் தூம்ரவர்ணம் ததாஷ்டமம் |
நவமம் பாலசந்திரம் ச தஸமம் து விநாயகம்
ஏகாதஸம் கணபதிம் த்வாதஸம் து கஜானனம் ||
மேலே கொடுக்கப்பட்டுள்ள 12 நாமங்களில், சில நாமங்கள் மற்றும் வேறு சில நாமங்களின் அர்த்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வக்ரதுண்ட : சாதாரணமாக வக்ரதுண்ட என்றால் வளைந்த முகம் அல்லது துதிக்கை உள்ளவர் என்று பொருள். ஆனால் சரியான அர்த்தம் இது அல்ல. ‘வக்ரான் துண்டயதி இதி வக்ரதுண்ட’, அதாவது கோணலான அல்லது தவறான வழி செல்பவரைத் தண்டித்து சரியான வழிக்குக் கொண்டு வருபவர் ‘வக்ரதுண்டர்’ என்று அழைக்கப்படுகிறார். திர்யக் அதிர்வலைகள் கோணலானவை. ரஜ-தம நிறைந்த 360 அதிர்வலைகளை தும்பிக்கையின் மூலமாக 108 அதிர்வலைகளாக, நேராக, ஸாத்வீகமாக மாற்றுவதே வக்ரதுண்ட ஆகும்.
ஏகதந்த அல்லது ஏகஷ்ருங்க : ஒரே தந்தம் அகண்டமாக (இன்னொன்று உடைந்துள்ளது) இருப்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. ஒன்று பிரம்மத்தைக் குறிக்கிறது. ‘தந்த’ என்ற பதம் ‘த்ரு தர்ஷயதி’ (அதாவது காண்பிப்பது) என்ற மூலத்திலிருந்து வந்துள்ளது. ஒன்று என்ற ப்ரம்மத்தின் அனுபூதியை உணரும் சரியான வழியைக் காட்டுவதாகவும் இன்னொரு அர்த்தம் வருகிறது.
லம்போதரன் : இந்த வார்த்தை லம்ப (பெரிய) மற்றும் உதர (வயிறு) என்ற இரு பதங்களின் கூட்டு வார்த்தையாகும். லம்போதரன் என்ற பதத்தின் பொருளை ஏக்நாத் என்ற மஹான் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
துஜ மாஜி வாசு சராசர |
மணோனீ போலிஜே லம்போதர ||
– ஏக்நாதி பாகவதம், ஆரம்ப ஸ்லோகம் 3
அர்த்தம் : நீயே அண்ட சராசரங்களையும் வியாபித்துள்ளவன். அதனால் உன்னை லம்போதரன் என அழைக்கிறோம்.
பாலசந்திர : ‘பால்’ என்றால் புருவங்களுக்கு மேலுள்ள நெற்றியின் பகுதி. உலகம் தோன்றிய நேரத்தில் பிரஜாபதி, ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் மீனாக்ஷியின் அதிர்வலைகள் ஒன்று கூடி அன்பு, மன்னிக்கும் தன்மை, வாத்ஸல்யம் இவற்றின் ஒட்டு மொத்தமான உருவத்திற்கு நிலவு என்று பெயரிட்டார்கள். அந்த நிலவை, திங்களை நெற்றியில் அலங்காரமாகச் சூடியவனை ‘பாலசந்திர’ என்கிறோம். சாதாரணமாக இந்தப் பெயர் சிவபெருமானுக்கே உகந்தது. ஆனாலும் கணபதி ஈசனின் மைந்தன் ஆன காரணத்தால், இவருக்கும் ‘பாலசந்திர’ என்ற பெயர் ஏற்பட்டது.
விநாயகன் : விநாயகன் என்ற பதம் ‘விசேஷ ரூபேண நாயக:’ என்ற பதத்திலிருந்து வந்தது. யாரிடம் நாயகனுக்கான அதாவது தலைவனுக்கான எல்லா குணங்களும் இருக்கின்றனவோ, அவனே விநாயகன். விநாயக கணங்களின் விஷயத்தில் ஆறு என்ற எண் அதோடு சம்பந்தப்படுத்தப் படுகிறது. விநாயக கணங்களைப் பற்றிய அதிக விவரங்கள் மானவக்ருஹ்ய சூத்ரம் மற்றும் போதாயன க்ருஹ்ய சூத்ரத்தில் காணப்படுகின்றன. அதன் சாராம்ஸம் என்னவென்றால், விநாயக கணங்கள் கஷ்டங்களைக் கொடுக்கின்றன; தொல்லைகளை ஏற்படுத்துகின்றன. சில சமயம் கொடூரமாகவும் உள்ளன. ஒரு முறை இவைகளின் தொல்லை துவங்கி விட்டால், மனிதன் பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொள்கிறான். அவனுக்குப் கெட்ட கனவுகள் வருகின்றன. எதைக் கண்டாலும் பயப்படுகிறான். விநாயக கணங்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க தர்மசாஸ்திரங்களில் அநேக பரிகாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கணபதி, அதாவது விநாயகன் என்பவர் இந்த விநாயக கணங்களின் அதிபதியாவார். சங்கரன், கணபதியிடம் கூறியுள்ளார், விநாயக கணங்கள் உன்னுடைய ஸேவகர்களாக இருப்பர். யக்ஞ காரியங்களில் உன் பூஜை முதலில் செய்யப்படும். இதைச் செய்யாதவரின் காரியங்களில் விக்னங்கள் ஏற்படும். அன்றிலிருந்து எந்த ஒரு காரிய ஆரம்பத்திலும் கணபதி பூஜை செய்யப்படுகிறது. விநாயக கணங்கள் விக்ன ரூபமாக உள்ளனர்; ஆனால் விநாயகர் அந்த விக்னங்களைப் போக்குபவராக உள்ளார். பக்தர்களின் அபீஷ்டங்களை ஸித்தி செய்பவர், அதாவது விரும்புபதைத் தருவதால் ஸித்தி விநாயகர் ஆகிறார்.
மங்களமூர்த்தி : மங்கம் சுகம் லாதி இதி மங்கலம் | ‘மங்’ என்றால் சுகத்தை அருளுபவர். இந்த மங்கலத்தைத் தருவதால் மங்களமூர்த்தி ஆகிறார்.
மஹாராஷ்ட்ராவில் கணபதியை மங்கல மூர்த்தி மோர்யா என்ற ஜயகோஷத்தோடு வரவேற்கிறார்கள். இதில் மோர்யா என்ற வார்த்தை மோர்யா கோசாவி என்ற விநாயக பக்தரைக் குறிக்கிறது. இவர் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பூனே நகரின் அருகில் இருக்கும் சிஞ்ச்வட் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த ஜயகோஷத்தின் மூலம் கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில் உள்ள திடமான, உறுதியான இணைப்பு தெளிவாகிறது.
வித்யாபதி :
1. சிக்ஷை,
2. கல்பம்,
3. இலக்கணம்,
4. நிருக்த,
5. ஜ்யோதிஷம்,
6. சந்தஸ்,
7. ரிக்வேதம்,
8. யஜூர்வேதம்,
9. ஸாமவேதம்,
10. அதர்வவேதம்,
11. பூர்வ மற்றும் உத்தரமீமாம்ஸா,
12. நியாயம்,
13. புராணம்,
14. தர்மசாஸ்திரம்,
15. ஆயுர்வேதம்,
16. தனுர்வேதம்,
17. காந்தர்வவேதம்,
18. நீதிசாஸ்திரம்
ஆகிய இந்த பதினெட்டு வித்தைகளின் அதிபதி கணபதி. அதாவது, இந்த வித்யாக்களை அத்யயனம் பண்ணுவதற்கு முன் அல்லது அத்யயனத்தின்போது கணபதி பூஜை செய்வது மஹத்துவம் நிறைந்ததாகும்.
சிந்தாமணி : இது கணபதியின் மற்றொரு பெயர். சித்தத்தில் (மனதில்) ஷிப்த, மூட, விக்ஷிப்த, ஏகாக்ர, மற்றும் நிருத்த என்று ஐந்து நிலைகள் உள்ளன. எவர் இந்த நிலைகளைப் பற்றிய தெளிவைத் தருகிறாரோ, அவர் சிந்தாமணி என்று அழைக்கப்படுகிறார். சிந்தாமணி கணபதியை பஜனை செய்வோருக்கு மனதில் இந்த ஐந்து நிலைகள் மறைந்து, மனம் அமைதி அடைகிறது. இதைப் பற்றிய விவரம் முத்கலபுராணத்தில் உள்ளது.
மஹாகணபதி : ரித்தி-சித்தி (சக்திகள்)களுடன் இருக்கும் கணபதி, மஹாகணபதி என்று அழைக்கப்படுகிறார். பார்வதி அமைத்த கணேச மூர்த்தியே மஹாகணபதியின் அவதாரமாகும். மஞ்சளால் உருவம் அமைத்து அதில் கணபதியை ஆவாஹனம் செய்தாள். உலகம் தோன்றும் முன்பே முழு முதற்கடவுளாக எந்த மகத்தான தத்துவம் நிர்குணமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருந்ததோ, அதையே மஹா கணபதி என்று சொல்லுகிறோம்.
அருகம்புல் மற்றும் புல்லின் இலைகளை எப்பொழுதும் ஒற்றைப்படையில் (குறைந்தபட்சம் 3, 5, 7, 21) அர்ப்பணிக்கவும்.
இளம் அருகம்புல்லை நீரில் நனைத்து அர்ப்பணிக்கவும்.
ஸ்ரீ கணபதியின் முகமண்டலத்தை தவிர்த்து எல்லா இடங்களையும் அருகம்புல்லால் நிறைக்கலாம்.
பூக்களின் காம்பு ஸ்ரீ கணபதியின் சரணங்களை நோக்கியும் பூக்கள் நம்மை நோக்கி இருக்கும்படியும் செம்பருத்தி போன்ற சிவப்பு மலர்கள் எட்டை (அல்லது எட்டின் பெருக்கல் எண்) அர்ப்பணிக்கவும்.
அவரின் விஸ்தீரணம் (பரப்பளவு)
அ. சந்திரனே தலை
ஆ. பிருத்வியே (பூமி) வயிறு
இ. ஸப்த பாதாளமே கால்கள்
விக்ன ஹர்தா
எந்த ஒரு விழாவையும் துவங்கும்முன், அது கிராம திருவிழாவாவோ, திருமண விழாவாவோ, புதுமனை புகுவிழாவாவோ, முதலில் கணேச பூஜை செய்யப்படுகிறது. ஏனென்றால் கணபதி என்பவர் தான் விக்னஹர்தா. இவர் எல்லாத் தடைகளையும் நிவர்த்தி செய்து கொடுப்பவர்.
ப்ராண சக்தியை அதிகரிப்பவர்
மனித சரீரத்தில் பல்வேறு நடவடிக்கைகள், பல்வேறு சக்திகளின் மூலம் நடைபெறுகின்றன. இந்த பல்வேறு சக்திகளின் மூல சக்தியை, ப்ராண சக்தி என்று வழங்குவர். கணபதியின் நாமஜபம் இந்த ப்ராணசக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
நாதபாஷையையும் பிரகாசபாஷையையும்
ஒன்றோடொன்று மாற்றும் திறன் பெற்றவர்
நாம் பேசும் நாதபாஷையை (ஒலி மொழி) கணபதியால் புரிந்து கொள்ள முடியும். எனவே தான் எளிதில் ஆனந்தம் அடையும் தெய்வமாக விளங்குகிறார். கணபதியினால்தான் ஒலியை ஒளியாகவும், ஒளியை ஒலியாகவும் மாற்ற முடியும். மற்ற தெய்வங்களுக்கு பிரகாசபாஷை (ஒளி மொழி) மட்டுமே தெரியும்.
எல்லா ஸம்ப்ரதாயத்தினராலும் வணங்கப்படுபவர்
தங்களின் உபாஸனா தெய்வமே மிகச் சிறந்தது என்றும் அவரே உலகின் படைப்பு, காத்தல் மற்றும் அழித்தலைச் செய்பவர் என்றும் அவரைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்றும் எண்ணுவதே ஸம்ப்ரதாயம் ஆகும். இதைப் போன்ற அநேக ஸம்ப்ரதாயத்தினரும் கூட கணபதி பூஜையைச் செய்கின்றனர், ஜைன மதம் உள்பட.
கணபதி பூஜையில் அருகம்புல்லுக்கு முக்கிய இடம் உண்டு. தூ: + அவம் என்பதே தூர்வா ஆயிற்று. தூ: என்றால் தூரத்தில் இருப்பது; அவம் என்றால் அருகில் வரவழைப்பது; எனவே தூர்வா என்றால் தொலைவிலுள்ள கணபதியின் பவித்ர துகள்களை அருகில் வரவழைப்பதாகும்.
கணபதிக்கு அர்ப்பணம் செய்யப்படும் அருகம்புல் மிருதுவாய் இருக்க வேண்டும். இதை (பாலத்ருணம்) இளம் அருகம்புல் என்கிறோம். தண்ணீரில் நனைந்த அருகம்புல்லை, 3,5,7 போன்ற ஒற்றைப்படையில் கட்டாக ஸமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கணபதியின் பவித்ரத் துகள்கள் அதிக நேரத்திற்கு மூர்த்தியில் நிறைந்திருக்கிறது.