ShareChat
click to see wallet page
search
#sree lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 236* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம்* *..சதுஷஷ்டிகலாமயி...* சதுஷஷ்டிகலாமயி அறுபத்து நான்கு வித்தைகள்/கலைகள் மயமாய் இலங்குபவள் ) *விளக்கம்🙏* """"""""""""""""""""""" ப்ரபஞ்சத்தில் ஞானங்களை அபராவித்தை, பராவித்தை எனபிரிக்கலாம். பரப்ருமத்தை அடையக்கூடிய ப்ரும்மஞானத்திற்கு வழிகாட்டக்கூடிய வகையில் முறையாக இறைப்பொருளுக்கு அர்ப்பணம் செய்ய, அபராவித்தைகள் பராவித்தையாகின்றன. அபராவித்தைகள் அதாவது அபராகலைகள் எண்ணிக்கையில் அறுபத்து நான்காகும். இவற்றை முழுமையாக பாஸ்கரராயர் உரைப் பட்டியலிட்டிருக்கிறது. கலைகளைப் பண்படாதவர்கள் அவற்றைப் புலனுகர்வைத் தூண்டும் வகையிலும், அனுபவிக்கும் வகையிலும் பயன் செய்யும்போதும் கொள்ளும்போதும் அவை கேவலம் ஜீவனோபாயத்துக்காகின்றன. தெய்வ வழிப்பாட்டுக்காகவும், மனத்தைப் பண்படுத்துதலுக்காகவும் செய்யப்படும்போது, பரஞானம் சித்தியாகிறது. இந்த அறுபத்து நான்கு கலைகளாக அம்மையே இலங்குகிறாள். கலைகளும், கலைகள் வழியாய் ஜீவர்கள் பரஞானம் கிடைத்து, பரத்தோடு ஒன்றுவதற்கும் செய்பவள் அன்னையே.... 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹 🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪🟨🟪
sree lalithaa sagasranaamam. - ShareChat