ShareChat
click to see wallet page
search
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மித்து போன சிக்கன் உணவை சாப்பிட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமா பலி..... மற்றொரு ஒரு வயதுக் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வீட்டில் சமைக்கப்பட்டு மீதமிருந்த சிக்கன் துண்டுகளை, அடுத்த நாள் காலையில் வீட்டின் வெளியே சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவாக அக்குழந்தைகளின் தாய் வைத்துள்ளார். அப்போது, வீட்டின் வெளிப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 3 வயது மகள் பூமிகா மற்றும் ஒரு வயது மகள் ரேணுகா ஆகியோர், விளையாட்டின் போக்கில் அந்த சிக்கன் துண்டுகளைத் எடுத்துத் தெரியாமல் சாப்பிட்டுள்ளனர். சிக்கனைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே இரு குழந்தைகளுக்கும் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 3 வயது சிறுமி பூமிகாவின் உடல்நிலை மிக மோசமடைந்தது. குழந்த அலறுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வயதுக் குழந்தை ரேணுகாவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.... #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #மே-17 முக்கிய தகவல்கள்
இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் - அடக்கடவுளே! வீட்டில் சமைத்த கோழிக்கறி.. தெரு அடுத்த நாள் நாய்களுக்கு வைத்ததை சாப்பிட்ட குழந்தைகள் 3 வயது சிறுமி பலி. பெரும் ಖ೫i8ಣ..! அடக்கடவுளே! வீட்டில் சமைத்த கோழிக்கறி.. தெரு அடுத்த நாள் நாய்களுக்கு வைத்ததை சாப்பிட்ட குழந்தைகள் 3 வயது சிறுமி பலி. பெரும் ಖ೫i8ಣ..! - ShareChat