துன்பத்தை நிரந்தரமாக வெல்லும் வழி!
நீ கஷ்டத்தில் இருக்கும்போது கிடைக்கிற அன்பு தங்கத்திற்கு இணையானது.
நீ கஷ்டப்பட்ட காலத்தில் உன்னுடன் இருந்தவர்களுக்கு மட்டுமே உனது நல்ல குணங்களைப் பற்றி தெரியும்.
இன்று நீ வசதியாக வாழ்கிறாய். ஆனால், உனக்கு நிம்மதி இல்லை. அதற்கு காரணம் என்ன?
இன்று உன்மீது தங்கத்திற்கு நிகரான அன்பு கொண்ட நட்பு உன்னைச் சுற்றி இல்லை.
உன்னுடைய நல்ல குணங்களை அறிந்தும் உன்னிமுள்ள குற்றங்குறைகளை அனுசரித்தும் செல்லக்கூடிய, உன்னைப் புரிந்துகொண்ட உறவுகள் இல்லை.
காலப்போக்கில் நீ சம்பாதிக்கவில்லை என்றால் நட்பு விலகுகிறது, உறவுகள் உன்னை சுமையாக நினைக்கின்றன.
ஆக உனக்கு வசதி இருந்தாலும் சரி அல்லது நீ வறுமையில் வாடினாலும் சரி, ஒரு கட்டத்திற்குப்பிறகு நட்புகளாலும் உறவுகளாலும் துன்பமே நிரந்தரம்.
துன்பத்தை நிரந்தரமாக வெல்லும் வழி என்ன?
நட்புகள் உறவுகள் ஆகிய ஊன்றுகோல்களை எதிர்பார்க்காமல் வாழ நீ பழகிக்கொண்டால் எதுவுமே உனக்கு துன்பங்களாக தெரிவதில்லை. இதுதான் துன்பத்தை நிரந்தரமாக வெல்லும் வழி.
இதற்கு மகாபாரதத்தில் கர்ணன் ஒரு பெரிய உதாரணம். அவன் திறமையானவன், தர்மவான். பலர் அவனை பயன்படுத்திக் கொண்டார்கள், ஆனால் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் வாழ்நாளெல்லாம் அவமதிப்பையும் நிராகரிப்பையும் மட்டுமே சந்தித்தான்.
உலகம் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வேதனை அவனுக்கு இருந்தாலும், அங்கீகாரத்திற்காக அவன் ஏங்கவில்லை, அடுத்தவர்களுக்கு உதவினான். அவனது மனவலிமைக்கு, “யார் இருந்தாலும் சரி, யார் விலகினாலும் சரி, நான் என்னை இழக்கமாட்டேன்” என்று எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்ளாத மனநிலையே.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
00:05

