#🖌பக்தி ஓவியம்🎨🙏 #💥ஓம் ந ம சி வா ய💥 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 வருடம் சித்திரை மாதம் 03ம் நாள் 16-ஏப்ரல்-26, வியாழக்கிழமை குருவாரம்
குருநாதன் சுவாமிமலையில் தங்க கவசம் அணிந்து வைரவேல் ஏந்தி நம்மை காத்திட நிற்கும்
சிவபெருமானுக்கே குரு ஸ்தானத்தில் மடி மேல் அமர்ந்து ப்ரவண பொருளை உபதேசித்த ஸ்வாமிநாதனை
மாறாத பக்தியோடு சீர்பாதங்களை பணிந்து போற்றி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர்
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க வெள்ளி மலையானுக்கே ப்ரணவப்பொருளை உபதேசித்த
குருநாதா , என் மன கவலைகளை நீக்கி நின்னையே நான் சதா நினைத்து போற்றிட என்மேல் கடைக்கண் பாரய்யா
முருகா முருகா என்று சதா உன்னையே நினைந்து உருகும் என் நெஞ்சம் அமர மயிலேறி வருவாயே வடிவேலய்யா
எனையே தந்துவிட்டேன் உன்னிடம் நீ அருளிட என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே உன்னருள் ஒன்றே வேணுமய்யா
குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, ஐங்கரனுக்கு இளைய சோதரா ஆறுமுகனே சிவசுதனே
என அனுதினமும் உன்னை வாயாரப் பாடி எனது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபய மிடுகுரல் அறியாயோ
யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த பாதமும் கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா,
காவேரி நதியின் கரை சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, மறைபுகழ் பெருமாளே, அடியேனை காத்திடய்யா
பாதி மதி கங்கை நதி கொன்றை மலர் அணிந்த சடைநாதர் சிவபிரான் அருளிய குமரேசனே, வெல்ல பாகு,
கனி ஒத்த இனிய மொழியை உடைய மாதரசி குறமகள் வள்ளி மணவாளா, காலனெனை யணுகாமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே, ஆடு மயிலினி லேறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே சூரன் உடலற வேலை விடும் பெருமாளே
பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போக, உன் ஆறு திருமுகங்களின்
அருட்பெருக்கில் கலந்து நீயும் நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி, தேவர் பணிய விண் மடந்தை பாத மலர்தூவ
அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயிலுடன் குலாவி எனக்கருள வரவேணும் மரகதமேனி பார்வதி அருள் சேயே
காவிரியின்வட புறம் சுவாமி மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே
🌹🌹🌹


