ShareChat
click to see wallet page
search
#lalithaa sagasranaamam. *ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 238* *இன்று நாம் அறிந்து கொள்ளும் திருநாமம் *...மனு வித்யா...* 🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏 மனு வித்யா : '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாள் அன்னை.... *விளக்கம் 🙏* ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' இந்த திருநாமத்துக்கு வியாக்கியானம் என்னவென்றால் மனுவினுடைய வித்யைக்கு ஆதரமாக இருக்கிறாவள் அன்னை... பன்னிரண்டு பேர் அன்னையின் மிகப் பெரிய பக்தர்கள் அவர்களுள் முதல் பக்தர் மனு.. மனு ஸ்லோகம்: 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 மனு: சந்திர குபேரச்ச லோபாமுத்ரா  ச  மன்மத: அகஸ்திர் அக்னிர்யச்ச இந்திர: ஸ்கந்த சிவஸ் ததா குரோத பட்டாரகோ தேவ்யா த்வாதசாமீ உபாஸகா...||| இந்த ஸ்லோகம் மனுவைப் பற்றியது ஆம் ஸ்லோகத்தில் மனுவின் பெயர்தான் முதலில் வருகிறது.மிகப்பெரிய அன்னை உபாஸகர் மனு.அதனால் அன்னை மனு வித்யா.அவருடைய வித்தையின் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.       இந்த திருநாமத்தை நாம் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கலாம்.மனு என்று சொன்னாலே மனிதர்களுக்குத் தலைவன் என்று பொருள். மானுடத்தின் தலைவன் - பிரதிநிதி என்பதாக அந்தப் பெயர் வந்தது.. மனுவித்யா என்று சொல்கிறபோது மனிதர்களாகிய நாம் உணர்ந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - புரிந்து கொண்டிருக்கக்கூடிய வித்யை - எதுவானாலும் அதன் ஆதாரமாக இருக்கக்கூடியவள் அன்னை.இதுவே அன்னையின் பெருமையை கூறும் 238 வது திருநாமம் ஆகும்..... 🌹🌹 ஐயா சிவசிவ அரகர அரகரா 🌹🌹 🙏🙏 ஓம் லலிதாம்பிகை தாயே போற்றி 🙏🙏 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩⬛🟩
lalithaa sagasranaamam. - ShareChat