MUTHUPANDIAN RAMKUMAR
*🙏🕉️இன்று வியாச பௌர்ணமி என்கிற குரு பூர்ணிமா 🕉️🙏*
*🙏🕉️ஆஷாட பௌர்ணமி வியாச பௌர்ணமி என்று போற்றப்படுகிறது. எனவே வியாச பௌர்ணமி தொடங்கிய நாளிலிருந்து அடுத்த நான்கு மாதங்கள் மழைக்காலமாகும்.*
*🙏இந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஜீவராசிகளும் இடம் பெயர்ந்து வாழுமாம். எனவே, இந்தக் காலகட்டத்தில் சந்நியாசிகள் அவற்றுக்குத் தொந்தரவு ஏற்படா வண்ணம் ஒரே இடத்தில் தங்கியிருப்பார்கள்.*
*🙏ஆஷாட பௌர்ணமி அன்று வியாச பூஜை செய்து அந்த நாள் முதல் ஒரே இடத்தில் நான்கு மாதங்களுக்குத் தங்கியிருப்பார்கள்.*
*🙏இந்த நான்கு மாதமும் உணவு அடிப்படையில் சில கட்டுப்பாடுகளோடு ஒரு விரத முறையையும் அனுஷ்டிப்பார்கள். இதற்கு சாதுர்மாஸ்ய விரதம் என்று பெயர்.🙏*
*🙏சந்நியாசிகள் மட்டுமன்றி இல்லறத்தில் இருப்பவர்களும் கட்டாயம் இந்த நான்கு மாதமும் தினமும் ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து (5 நிமிடம் முதல் அவரவர் வசதிக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி) இறைவனின் நாமத்தை தினமும் உச்சரித்துவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🤲நீங்கள் வழிபடும் மகானை நினைத்து அவர் படத்துக்குத் தினமும் ஒரு மலராவது சாத்தி வணங்குவது சிறப்பானது. நம் வாழ்வில் இருக்கும் பல பிரச்னைகள் தீர்க்க இந்தக் காலகட்டத்தில் செய்யும் இத்தகைய வழிபாடுகள் பயன் அளிக்கும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🙇♂️கல்வி, கலைகள் கற்ற மாணவர்கள் ஆடி மாதம் வரும் பௌர்ணமியில் கல்வி மற்றும் ஞானம் அளித்த குருவினை👣🪷 வணங்கி வழிபட வேண்டும் 🙇♂️🤲🕉️🙏*
*🙏அதுமட்டுமின்றி கலை, கல்வியின் தெய்வங்களான , தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், சரஸ்வதி, குருபகவான், புதன் போன்றவர்களை வணங்கி அருள்பெறுவது நன்மை பயக்கும்🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️தட்சிணாயணத்தின் முதல் பௌர்ணமியான இன்றுதான் ஆலமர்ச்செல்வனான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியே தெற்கு நோக்கி அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு மௌன நிலையில் முத்திரை காட்டி உபதேசித்தார். 🕉️🙏*
*🙏🕉️இது மகாபாரதத்தை எழுதியவரும், நான்கு வேதங்களை வகுத்தவருமான வேத வியாசரின் பிறந்த நாள் 🕉️🙏*
*🙏🕉️குருவாக இருந்து உபதேசம் செய்த ஹயகிரீவர் அவதரித்த நாள் 🕉️🙏*
*🙏🪷மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள்.. 💐🌷🌹🙇♂️🤲👣🕉️🙏* #🌸 இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🕉️