தாயின் வலி அறியா பிள்ளை
...........
தாயின் மனதை புரிந்துக் கொள்ளவில்லை
கண்ணீரை சிந்தும்போது வலிகள் அறியவில்லை
புன்னகையோடு கடந்து சென்றேன் அன்று
பிள்ளையாக பிறந்து என்ன பயன்
எனக்கோர் துணை வந்தபோது அறிந்தேனம்மா
பெண்ணாய் நீபட்ட துன்பங்கள் பெரிதென்று
தாயே நீயில்லாத வாழ்க்கையில் இன்பங்களேது
உயிருடன் இருக்கையில் துச்சமாய் நினைத்தேன்
தெய்வமாய் நிற்கிறாய் உயிரில்லாத சுவற்றின்மேல்
இன்று உணர்கிறேன் தனிமையின் கொடுமையை
நான் பெற்றது எனக்குச் சொந்தமில்லை
புதியதாய் வந்த உறவுக்கு சொந்தமென்று
எம். அமுதா
#என் காதல் கவிதை


