வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿
கடவுளின் மகிமை🙏❤️🧿
நான் சாய் பாபாவை கும்பிடுறனால சாய் பாபா மேல நம்பிக்கை வைங்கன்னு மத்தவங்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்குற ஒரு பழக்கம் இருக்கு.நம்ம 1st சித்தி பொண்ணு கிட்ட சாய் பாபா கிட்ட வேண்டிக்கோன்னு சொன்னேன். நம்ம 2nd சித்தி சாய் பாபா கோயிலுக்கே போய்ட்டு வந்ந்துட்டாங்கலாம். வீட்ல இருந்து பூ எடுத்துட்டு போனேன்,வெயில்ல வேற போனேன்னு சொன்னாங்க. நான் சொன்னேன் அப்படி ஒன்னும் நீங்க போக தேவையில்லை. அவருக்கு ரெண்டு விளக்கு ஏத்தி, என்ன நெய்வேத்தியம் இருக்கோ வச்சு வேண்டுங்க அது போதும்னு சொன்னேன். சாய் பாபா போட்டோ சித்தி கிட்டையும் பூசாரிண்ணா கிட்டையும் 10 ரூபாய் கொடுத்த பிறகு தான் சாய் போனாரு. நான் actually 1 ரூபாய் தான் கேட்டேன் ஆனா மனுஷன் இவங்க கிட்ட 10 ரூபாய் கொடுத்த பிறகு தான் போனாரு. 10 ரூபாய் என்பது சாய் பாபா விசயத்துல ரொம்ப பெரிய விசயம். இவங்க கிட்ட போறதே பயங்கர தடையா இருந்துருக்குன்னு தான் அர்த்தம். நான் எந்த கடவுளையும் freeya கொடுக்க மாட்டேன். ஏன்னா அது எனக்கு சரிப்பட்டு வரல so அதான் 1 ரூபாய் கேட்டேன்😂ஆனா நம்ம ஆளு 10 ரூபாய் கொடுத்தா தான் போவேன்னு சொல்லிட்டாரு.சிஷ்யை ஒரு அடி பாஞ்சா குரு பத்து அடி பாயுறாருப்பா😂சித்தி பொண்ணு போன வாரம்ன்னு நினைக்குறேன். சாய் பாபா நம்ம அம்மா கிராமத்துக்கே visit பண்ணிருக்காரு. நம்ம அம்மா ஊரு தஞ்சாவூர்ல இருக்க நகர், கோயில்வேனி, அஞ்சலையம்மாள் கிட்ட இருக்கு இந்த ஊர். சித்தி பொண்ணு சொன்னா ஒவ்வொரு வீட்டுக்கும் வந்தாங்கன்னு. அவ காசு உண்டியல போட்ட மாறி சொன்னா. எங்க இருந்து வந்துருக்கீங்கன்னு கேட்டுருக்கா. மகாராஷ்டிரால இருந்து வந்துருக்கோம்னு சொல்லிருக்காங்க. எனக்கு அது கேட்டு shock ஆகிடுச்சு.இப்போ உங்க கிட்ட share பண்ணும் போதே உடம்பு சிலுர்க்குது ஓம் சாய் ராம்🙏நான் சொன்னேன்னு ஒரு காரணுதுக்காக அவளோ தூரத்துல இருந்து பார்க்க போயிருக்காரு பாருங்க இதுக்கு மேல என்னங்க வேணும் நமக்கு.நம்ம அக்கா சொன்னா சாய் உன் மேல அவங்களுக்கு நம்பிக்கை வர வைக்க அவளோ தூரம் போயிருக்காரு பாருன்னு. இவளோ வருடங்கள் போகாத அவரு,நான் அவங்கள சாய் பாபா மேல நம்பிக்கை வைங்கன்னு சொல்லி few weeks கூட ஆகலங்க அவளோ சீக்கிரம் அங்க போய் ஆசிர்வாதம் பண்ணிருக்காரு❤️நிறைய வேண்டுதல் பண்ணி மறந்துருப்போம் ஒரு தேங்காய் கொடுத்துருக்கலாம்லன்னு சொன்னேன். நிறைய தேங்காய் இருக்கு ஹரிணி இது கொடுக்கணும்னு தோணலையேன்னு சொன்னா. கவலை படாத நீ அவர்க்குன்னு எடுத்து வச்சா அவரே வேற உருவத்துல வந்து வாங்கிட்டு போய்டுவாருன்னு சொன்னேன்😂 Actually தேங்காய்லாம் கொடுக்கலாம்னு தெரியாது அவளுக்கு.சாய் பாபா நீ அன்போட எதை கொடுத்தாலும் வாங்கிப்பார்ன்னு சொன்னேன், ஓம் சாய் ராம்🙏❤️🧿 #சாய் பாபா #சாய் பாபா #சாய் #ஓம் சாய் ராம் #கடவுளின் மகிமை 💓💗💗💗

