MUTHUPANDIAN RAMKUMAR
1K views • 1 months ago
#Lord krishn❣️ #Radha krishn✨ #Radha Krishn #மகாலட்சுமி, mahalakshmi, mahalaxmi, Narayan, mahavishnu, Friday #மஹாவிஷ்ணு கிருஷ்ண கவசம்🕉️🙏*
*🙏🕉️தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம்.🕉️🙏*
*🙏🕉️ஸ்ரீ கிருஷ்ண கவசம்🕉️🙏*
*🙏🕉️துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🤲அகரம் முதலே அழியாப் பொருளே ஆயர் குலமே நேயர் கரமே*
*இகமும் பரமும் இணையும் இடமே ஈதல் பரமாம் இதயத் தவமே*
*உலகக் குடையே உயிரின் கலையே ஊதும் குழலுள் வேதப் பொருளே*
*எரியும் கனலில் தெரியும் புனலே ஏழை மனதில் வாழும் அருளே !*
*ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே ஐவர் துணையே அன்புச் சிலையே*
*ஒளியே விழியே உயிரே வழியே ஓடும் நதியில் பாடும் அலையே*
*அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே அடியேன் சரணம் சரணம் சரணம் !*
*அறமே அறமே அறமே அறமே திறமே திறமே திறமே திறமே*
*தவமே தவமே தவமே தவமே வரமே வரமே வரமே வரமே*
*வேதம் விளையும் வித்தே விளையவே நாதம் பொழியும் நலமே நிலமே*
*ஓதும் பொழுதே உடனே வருவாய் உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்*
*அறியாக் கவலை அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!*
*பொய்யா மொழியே பொங்கும் நிலவே பூமிக் குடையின் காவற் பொருளே*
*பார்த்தன் பணியும் பாதம் காக்க பாஞ்சஜன்யம் பக்தனை காக்க*
*மூடர்கள் தமையும் மோகனன் காக்க முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க*
*வாடும் உயிரை மன்னவன் காக்க தேடும் விழியைத் திருமால் காக்க*
*கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க*
*துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க தூயோன் வருக ! துணையே தருக !*
*மாதர் கற்பும் மடவார் நோன்பும் மாயோன் காக்க மலைபோல் வருக !*
*தகிடத் தகிடத் தகிடத் தகவென தறிபடு துன்பம் தறிகெட ஓட*
*திகிடத் திகிடத் திகிடத் திகிடத் திசைவரு கவலை பசைஇலதாக !*
*துருவத் துருவத் துருவத் துருவிடத் தொலையாப் பொருளே அலையாய் வருக !*
*நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக கர்மசந் யாசக் களமே வருக !*
*ஞானம் யோகம் நல்குவன் வருக ! நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !*
*அடியேன் துயரம் அதிகம் அதிகம் அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !*
*பொங்கும் வேலும் புண்ணாக் காது பொருந்தும் துயரம் பொடிபடு மாறு*
*தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன் தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !*
*மதுசூதனனே மனிதன் சரணம் ! இருடீ கேச இயலான் சரணம் !*
*கீதா சாரிய கிருஷ்ணா சரணம் ! வேதா சாரிய வேந்தே சரணம் !*
*தேவகி மைந்தா சிறியேன் சரணம் ! யசோதா குமரா அடியேன் சரணம் !*
*உன்னை விட்டொரு உறவுகளில்லை என்னை விட்டொரு இனியவனில்லை*
*நம்மை விட்டொரு நண்பர்களில்லை நன்மையில் உன்போல் நாயகனில்லை*
*எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,அங்கங்கே நீ அருள் செய வருக !*
*கோசலை ஈன்ற குமரா வருக ! கோதையின் மாலை கொண்டவன் வருக !*
*ரகுவம் சத்தின் நாயகன் வருக !யதுவம் சத்தின் யாதவன் வருக !*
*மதுவை வென்ற மாதவன் வருக !மலைக்குடி கொண்ட மாலவன் வருக !*
*திருப்பதி யாளும் திருமால் வருக !திருவரங் கத்துப் பெருமாள் வருக*
*இராவணன் கொடுமை தீர்த்தாய்துன்பம் இராவணம் எமக்கும் இன்னருள் புரிக*
*கம்சன் கொடுமை களைந்தோய் வருக !காலனை வெல்லக் கைவலி தருக !*
*நெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்காதில் குண்டலம் கையில் வில்லொடு*
*தண்டைக் காலில் சலங்கை குலுங்க அண்டையில் வந்து அருளே புரிக !*
*கௌரவர் தம்மை களத்தில் வென்றாய் கெளரவம் காக்க கண்ணா வருக !*
*பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய் படித்தவன் மகிழப் பரமே வருக !*
*மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்*
*சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன் பக்கென உந்தன் பாதம் பற்றினேன்*
*கொக்கென நின்று குறிவைத் திருந்தேன அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;*
*இக்கணம் என்னை ஏங்க விடாமல்தக்கவனே நீ தயவுடன் அருள்க !*
*கல்லாய்ப் போனவள் காலடி பட்டுபெண்ணாய் ஆனது பிழையே யன்று !*
*உன்னால் தானே உலகம் இயக்கம் ! கண்ணனி லாமல் கடல்வான் ஏது ?*
*கண்ணனி லாமல் கடவுளுமில்லை கண்ணனி லாமல் கவிதையுமில்லை*
*கண்ணனி லாமல் காலமுமில்லை கண்ணனி லாவிடில் காற்றே இல்லை !*
*எத்தனை பிறவி எத்தனை பிறவி அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்*
*சத்திய நாதன் தாள்களை மறவேன் தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்*
*உன்னை நம்பி உனையே சேர்ந்தால் பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு*
*உலகில் போதும் ஒருமுறை மூச்சு ! உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !*
*இங்கே நாங்கள் இருக்கும் வரையில் சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !*
*பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல் மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்*
*இல்லை என்றொரு நாளில் லாமல் இன்னும் என்னும் ஆசை வராமல்*
*தொல்லை என்பது துளியுமில்லாமல் தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்*
*முதுமைத் துயரம் மூண்டு விடாமல் படுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்*
*சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு நிந்தனை பெற்று நீங்கி விடாமல்*
*என்றும் பதினா றிளமை வழங்கு ! இப்பணி தொடர அற்புதம் காட்டு !*
*தளரா மேனியில் சக்தியைக் கூட்டு தாய்போ லிருந்து சாதம் ஊட்டு !*
*வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !*
*உலகில் ஒருவன் உத்தமன் இவனெனஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !*
*சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர் சரிசரி சரியெனத் தலையை யசைக்க*
*பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க மளமள மளவென மனையிருள் நீங்க*
*கலகல கலவென காசுகள் சேர தளதள தளவென தர்மம் தழைக்க*
*வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க🙇♂️🤲🕉️🙏*
*ஐயா சரணம் சரணம் சரணம் ! அடியேன் வாழ்வில் நீயே கவசம் !*
*கவசம் கவசம் கவசம் கவசம் ! வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !*
*கவசம் கவசம் கவசம் கவசம் ! வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !*
*அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்*
*அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!*
*அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம்*
*அவனிடம் எதையும் தருவோம் தருவோம்🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🤲ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...ஜெயஜெய ஜெயஜெய🙇♂️🤲🕉️🙏*
*🙏🕉️🤲ஜெயஜெய ஜெயஜெயஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய...🙇♂️🤲🕉️🙏*
13 shares