MUTHUPANDIAN RAMKUMAR
#🔍ஜோதிட உலகம் 🌍 ஜோதிடத்தில் ஐந்தாம் பாவம் என்ன சொல்கிறது* ...?
தெரிந்து கொள்ள
வாருங்கள்....
😯😟😯😟😯
ஜோதிடத்தில், லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் ஐந்தாம் பாவத்தை புத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். ஒவ்வொருவர் ஜாதகத்திலும் இந்த ஸ்தானம் அதிக முக்கியத்துவம் பெறுவதாகவே காணப்படுகிறது. காரணம், ஒருவர் எத்தனை செல்வங்களை பெற்று இருந்தாலுமே...குழந்தை செல்வம் இல்லை என்றால் என்ன பயன்?!...
⬇️⬇️⬇️⬇️⬇️
வெகு காலம் குழந்தை பாக்கியம் தடைபட்டு வருபவர்கள். ஆண் குழந்தை பிறக்க வில்லையே என்று ஏங்குபவர்கள் கீழ்க்கண்ட சந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தை சொல்லி வாருங்கள். சீக்கிரத்தில் நல்ல சந்ததியை பெறுவீர்கள். அம்மந்திரம் பின்வருமாறு...
க்லாம் - க்லீம் - க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ
ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாம
ஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர
விருத்திகா ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம்
யஸஸ்வினம்
பொருள்: தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே! இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!
மக்கட்பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேற்படி ஸ்லோகத்தை ஆழ்ந்த ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலையில் தினமும் 11 தடவைக்கு குறையாமல் சொல்லி வந்தால், கட்டாயம் புத்திரப்பேறு உண்டாகும்.
⬆️⬆️⬆️⬆️⬆️
முறைப்படி சொல்ல வேண்டும் என்று வாஞ்சையாக இருப்பவர்கள். காலை அல்லது மாலையில்... அதாவது, யாரும் உங்களை தொந்தரவு செய்யாத நேரத்தில் விளக்கு ஏற்றி பக்கத்தில் ஒரு கிருஷ்ணர் படத்தை வைத்து... மேற்கண்ட ஸ்லோகத்தை தினமும் 108 முறை 48 நாட்கள் சொல்லி வரவும். குறிப்பாகத் தம்பதிகளாக சொன்னால் மிக நல்லது. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்லும் சமயத்தில் சைவ உணவை உட்கொண்டீர்கள் என்றால் சீக்கிரத்தில் நீங்கள் நல்ல பலனை அடைவீர்கள்.
👁️👁️👁️👁️👁️
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு மிக முக்கியம் தானே!...இதன் அடிப்படையில், ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடத்தைக் கொண்டு கீழ்கண்ட ஐந்து விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம். அவ்விஷயங்கள் பின்வருமாறு...
1. அதாவது ஒருவருக்கு எப்போது குழந்தை பிறக்கும்?!... அல்லது குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டா?!... இல்லையா?!...
2. ஒருவேளை பிறந்தாலும் ஒருவருக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உண்டு?
3. குழந்தை பிறக்கும் சமயத்தில் எந்த அளவிற்கு குழந்தை ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பு உண்டு?!...
4. குழந்தையுடன் பெற்றோருக்கு எதிர்காலத்தில் நல்லுறவு எந்த அளவிற்கு இருக்கும்?
5. பிறக்க இருக்கும் குழந்தையின் ஆயுள் பலம் எந்த அளவிற்கு சிறப்பாக அமைந்து உள்ளது?!.. போன்றவையே அவை...
மேற்கண்ட விஷயத்தில் கவனிக்க வேண்டியது...
தம்பதிகள் இருவருக்குமே ஐந்தாம் பாவம் மிகச் சிறப்பாக இருக்குமேயானால்... திருமணம் ஆன சில நாளில் குழந்தை பையில் தோன்றி கையில் வந்து விடும். ஒருவேளை, தம்பதிகளில் ஒருவருக்கு ஐந்தாம் பாவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது... மற்றொருவருக்கு அவ்வளவு சிறப்பாக அமைய வில்லை எனில்... குழந்தை பாக்கியம் உண்டு, ஆனால் அது சற்று தாமதம் ஆகலாம். அதுவே, தம்பதிகள் இருவருக்குமே ஐந்தாம் பாவம் சிறப்பாக அமையவே இல்லை என்ற நிலையில் குழந்தையை தத்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். எனினும், இது போன்ற அமைப்பு எல்லோருக்குமே காணப்படுவதில்லை. வெகு சிலருக்கே இப்படியான நிலை காணப்படுகிறது.
சரி, 'ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் இடம் சிறப்பாக இருப்பது என்றால் என்ன பொருள்?!...'
1. மிதுனம், கன்னி, ரிஷபம் ஆகிய லக்கினத்தில் ஏதேனும் ஒன்றில் ஜாதகர் பிறந்து... ஐந்தாம் இடத்தில் ஸ்தான அடிப்படையில் சுபருடன் கூடிய புதன் குரு பார்வை பெற்று காணப்படுமாயின்... அந்நிலையில், ஐந்தாம் இடம் சிறப்பாக உள்ளது என்று பொருள்.
2. ஐந்தாம் இடத்தில் 6, 8, 12 ஆம் அதிபதிகள் ஒன்று சேர்ந்தோ... இல்லை 6,8,12 ஆம் அதிபதிகளில் யாரேனும் ஒருவர் மட்டும் 5 ஆம் இடத்தில் அமர்ந்து இல்லாமல் இருந்தாலோ... அல்லது ஐந்தாம் அதிபதி 6,8,12 ஆம் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று இல்லாமல் இருந்தாலோ... ஜாதகர் நல்ல பிள்ளைகளை திருமண ஆன சில நாட்களில் பெறுவார். அப்பிள்ளைகளால் எதிர்காலத்தில் சிறப்புடன் இருப்பார்.
அதுவே...
1. சூரியன் 6,8,12 ஆகிய ஏதேனும் ஒரு வீட்டின் அதிபதியாக இருந்து அவர் ஐந்தாம் இடத்தில் தனித்து அமர்ந்து இருந்தால் குழந்தை பாக்கியம் தடை படும். எனினும் அந்த ஐந்தாம் இடம் சிம்மம், மேஷம், விருச்சிகம் எனில் தாமதமான குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். அதிலும் தம்பதிகள் இருவருக்குமே ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு.
2. குரு பகவான் 5 அல்லது 8 ஆம் வீட்டில் இருந்தால் அது கடுமையான புத்திர தோஷத்தை தரும். எனினும் அந்த ஐந்து அல்லது எட்டாம் இடம் மீனம், தனுசு, சிம்மம், கடகம் எனில் பெண் பிள்ளை பிறக்க வாய்ப்பு உண்டு. எனினும், அதுவும் கால தாமதம் ஆகியே கிடைக்கப்பெறும்.
3. செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருந்தாலும் புத்திர தோஷம் தரும். அதிலும் அந்த செவ்வாய் லக்கினத்திற்கு 6,8,12 ஆகிய ஏதேனும் ஒரு வீட்டின் அதிபதியாக இருந்து அவர் 5 ஆம் இடத்தில் வீற்று இருந்தால் சில சமயங்களில் மனைவி கருவுற்றாலும் பிள்ளை நல்லபடியாக பிறக்க முருகப் பெருமானை அதிகம் துதிக்க வேண்டும். ஒருவேளை செவ்வாய் இருக்கும் அந்த 5 ஆம் இடம் மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்று என்றால் பெரிய சோதனைகள் வராது. கடைசி நிமிடத்தில் காக்கப்படுவார்கள்.
4. ராகு 5 ஆம் இடத்தில் இருந்தாலும் கூட புத்திர பிராப்தி தாமதம் ஆகும். ராகு, குரு ஐந்தாம் இடத்தில் சேர்ந்து இருந்தால் அது கடுமையான புத்திர தோஷத்தை தரும். எனினும் கணவன் - மனைவி இருவரில் யாருக்காவது ஒருவருக்கு 5 ஆம் இடம் பலம் பெற்று இருக்கும் பட்சத்தில் பெண் குழந்தையாக பிறக்க வாய்ப்பு உண்டு. எனினும், அதுவும் கூட சற்று கால தாமதம் ஆகலாம்.
5. சனி பகவான் 5 ஆம் வீட்டில் இருந்தாலும் கூட புத்திர பிராப்தி தாமதம் ஆகும். ஒருவேளை சனி பகவான் 6,8,12 ஆகிய வீடுகளின் அதிபதியாக இருந்து அவர் 5 ஆம் இடத்தில் வீற்று இருந்து அந்த 5 ஆம் இடம் மகரம் அல்லது கும்பமாகில் பெண் குழந்தைக்கு வாய்ப்பு அதிகம் உண்டு.
6. இதே போல ஐந்தாம் இடத்தில் குரு, கேது சேர்க்கை இருந்தாலும் கூட பெண் குழந்தை தாமதமாகப் பிறக்க வாய்ப்பு உண்டு. இதன் படி சிலருக்கு இரு குழந்தைகள் உண்டு என்றும் அவை இரண்டுமே பெண் குழந்தையாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், தம்பதிகள் இருவருவரின் ஜாதகத்தையும் நன்கு ஆராய்ந்த பின்னரே இந்த முடிவுக்கு வருதல் நலம்.
7. லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் ஐந்தாம் வீட்டின் அதிபதி (லக்கினத்தில் இருந்து எண்ணி) மூன்றாம் இடத்தில் அல்லது ஆறாம் இடத்தில் அல்லது எட்டாம் இடத்தில் அல்லது பன்னிரெண்டாம் இடத்தில் என மேற்கண்ட இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தாலும் கூட பிள்ளைகள் பிறக்க தாமதம் ஆகும். அப்படியே மனைவி கர்ப்பம் உற்றாலும் கூட அவர்களை கர்ப்ப காலங்களில் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
8. லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் ஆறாம் வீட்டின் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தாலும்; அதே போல... லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் எட்டாம் வீட்டின் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தாலும்; அதே போல...லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் பன்னிரெண்டாம் வீட்டின் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருந்தாலும் புத்திர பிராப்தி தாமதம் ஆகும். அப்படியே குழந்தைகள் பிறந்தாலும் கூட அவர்கள் இறுதி வரையில் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும்.
9. இதே போல லக்கினத்தில் இருந்து எண்ணி வரும் ஆறு, எட்டு மற்றும் பன்னிரெண்டாம் இடத்தின் அதிபதிகளின் தசை அல்லது புத்தி நடக்கும் காலத்தில் கரு உற்றாலும் அல்லது கரு உற்று இருந்தாலும் கவனமாக கர்ப்பத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அந்நிலையில், 'கர்ப்ப ரக்ஷா - அம்பிகை' அம்பாளை வழிபட்டு வருதல் சிறப்பு.
தெரிந்து கொள்ளுங்கள்.....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻