*தக்கோர் வாழும் ஊர்* *தலைச்சங்காடு*
நிலம்,நீரொடு ஆகாசம், அனல், கால் ஆகி
நின்று ஐந்து
புல நீர்மை புறம் கண்டார், பொக்கம் செய்யார் போற்று ஓவார்,
சலம், நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே!
நூல்: தேவாரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
தலம்:
திருத்தலைச்சங்காடு
இறைவா,
நிலம், நீர், காற்று, ஆகாயம், வானம் ஆகிய ஐம்பூதங்களாகத் திகழ்கிறவனே, ஐந்து புலன்களையும் வென்று நிற்பவனே,
பொய் பேசாதவர்களின் போற்றுதலைமட்டும் ஏற்கிறவனே, வஞ்சகம், இழி செயல்களில் ஈடுபடாத நல்லவர்கள் வாழும் தலைச்சங்கையின்
அழகிய கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உன்னை வணங்குகிறேன்!
திருத் தலைச்சங்காடு
தல வரலாறு
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 21 கி.மீ. தூரத்தில் இத்திருத்தலம் உள்ளது.
அருகில் திருஆக்கூர் திருத்தலம் உள்ளது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான திருதலைச்சங்க நான்மதியம் என்ற கோயிலும், சிவன் கோயிலின் அருகாமையில் உள்ளது.
திருக்கடவூரில் இருந்து சுமார் 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்திருத்தலத்தை அடையலாம்.
இறைவர் : சங்காரண்யேசுவரர்,
சங்கவனேசுவரர்
இறைவியார் : சௌந்திரநாயகி
தல மரம் : புரசமரம்
தீர்த்தம் : சங்குதீர்த்தம் (பௌர்ணமியன்று நீராடுதல் சிறப்பு), காவிரி
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நலச்சங்க வெண்குழையும்.
கோச்செங்கட் சோழ நாயனாரால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றாகும்.
கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை.
ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.
கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம்.
பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேசுவரர் சந்நிதி அமைந்துள்ளது.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியே படிகளேறி இறைவன் சந்நிதி உள்ள முன் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும்.
முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் சங்காரண்யேசுவரர் லிங்க உருவில் காட்சி தருகிறார்.
மூலவர் சங்காரண்யேசுவரருக்கு நல்லெண்ணை ஊற்றி அபிஷேகம் செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் லிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம்.
கருவறை சுற்றில் ஸ்ரீசண்டிகேஸவரர்,
மஹாவிஷ்ணு, ஸ்ரீஜுரஹரர், ஸ்ரீராமர் சீதை மற்றும் தேவார நால்வர் உருவச் சிலைகளைக் காணலாம்.
தெற்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியும், மேற்கு வெளிப் பிரகாரத்தில் முருகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதியும் உள்ளன.
மேற்கு வெளிப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் மஹாவிஷ்ணு சீதேவி, பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்.
மஹாவிஷ்ணு இத்தலத்தில் சங்காரண்யேசுவரரை வழிபட்டு தனது ஆயுதமாக பாஞ்சசன்னிய சங்கைப்பெற்ற சிறப்புடையது இத்தலம்.
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது.
இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேஸ்வரியின் தனி
சந்நிதி அமைந்துள்ளது.
கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது.
அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம்.
இத்தலத்தின் தல விருட்சம்
புரச மரம். புரச மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம்,
மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம்.
ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம்.
இது கோவிலுக்கு எதிரில் உள்ளது.
இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலய குருக்கள் வீடு அருகில் இருப்பதால் அவரை தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், " தூய கொடி அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச்சங்காடு மேவும் சயம்புவே" என்று போற்றி உள்ளார்.
துக்கடா
இந்தப் பாடல் ‘தலைச்சங்காடு’ என்ற சோழ நாட்டுத் திருத்தலத்தைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.
ஆனால் அது சொல்லும்
செய்தி மிகவும் பொதுவானது:
மலர் தூவி பூஜை செய்தால்மட்டும் இறைவன் நம்முடைய வழிபாட்டை ஏற்றுக்கொண்டுவிடமாட்டான்.
கோயிலுக்குக் கோடிகோடியாக அள்ளிக்கொடுப்பதெல்லாம் போதாது
பொய் பேசக்கூடாது, கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.
அப்படிப்பட்ட தூய்மை உள்ளவர்களின் பிரார்த்தனைக்குதான்
அவன் காது கொடுப்பான்,
அப்படிப்பட்டவர்கள் வாழும் ஊரில்தான் அவனும் விரும்பிக் குடியேறுவான்! 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #ஓம் நமசிவாய #🙏கோவில் #தினம் ஒரு கோயில் #ஆலய தரிசனம்🔔



