ShareChat
click to see wallet page
search
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.06.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற . விளக்கம் ========= அப்பொழுது வைகுண்டர் தேவர்களை நோக்கி, அன்பர்களே, இவ்வுலக மக்கள் கண்களில் காணும்படி வர வேண்டும் என்று நீங்கள் வேண்டியபடி என்னைத் தொடர்ந்து மக்கள் கண்களில் காணும் வண்ணம் என்னோடு சேர்ந்து ஒரே கூட்டமாகக் கூடி எப்போதும் ஒழுங்காக வாருங்கள் என்று கூறினார். உடனே, வானத்தில் நின்றுகொண்டு வாத்தியங்கள் முழங்கி வரவும், தானவர்கள் முதல் சங்கக் கூட்டங்களும் ஆகாயத்தில் நின்று அவரை வாழ்த்திக் கொண்டு வரவும், சிறப்பு பொருந்திய சூரிய தேவனும் அங்கே வந்து தனது குடை மூலம் நிழல் போல ஒளியைப் பரப்பி வந்தார். . . அகிலம் ======== செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல் ======================================================= நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு . விளக்கம் ========= சிறப்பான வைகுண்டர், வண்டுகள் சுற்றி வருகின்ற சோலைகள் வாய்க்கப் பெற்ற வனங்களையும் தாண்டி, ஆலைகள் நிறைந்த தெருக்களையும் தாண்டி, அந்த ஊரில் அமைந்திருந்த சிறந்த பதிகளையும் தாண்டி, மண்டப மேடைகளையும் தாண்டி, மடங்களையும் தாண்டி, குளுமை பொருந்திய தமிழ் மொழி பேசப்படும் திருச்செந்தூர் எல்லையை விட்டு செல்வதற்காக அங்கே நின்று கொண்டிருந்தார். . . அகிலம் ======= நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர் நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன் இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார் . விளக்கம் ========= அப்பொழுது, அங்கே நின்ற உறுதி படைத்த மாமுனிவன் ஒருவன் சிவனுடைய மருமகனான வைகுண்டரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி, தாங்கள் திருச்செந்தூர்ப் பதி விட்டுத் தெச்சணாபூமிக்கு, இச்சமயத்தில் செல்ல வேண்டிய காரணம் என்ன? இங்குள்ளோரைத் தாங்கள் பகைத்த காரணம் என்ன? என் நாயகமே, தேவர் முதல் எல்லாக் கூட்டங்களையும் மகிழ்விக்கின்ற அரசே, இந்த காரணம் பற்றித் தாங்கள் சொல்வீராக என்றான். . . அகிலம் ======= அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார் இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல் நாள்வழியாய்ச் சான்றோரை நியாயமில் லாதடித்தான் சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை . விளக்கம் ========= முனிவன் சொன்னதைக் கேட்ட வைகுண்டர் முனிவனை நோக்கி, முனிவனே, இப்போது நீ கேட்டதற்குரிய பதிலை நான் கூறுகின்றேன். நான் கூறுகின்றவற்றை ஏற்று நடக்காத நீசன் தான் கெடுவது அறியாமல் நித்தம்நித்தம் சான்றோர்களை எந்தவித நியாயமுமின்றி அடித்தான். அவனுக்குத் திருவன்நதபுரத்தில் இருந்து புத்திமதி கூறினேன். அப்படியும் என்னுடைய வார்த்தைகளையும் சக்தியையும் பற்றிச் சிறிதளவுகூட எண்ணாமல் சான்றோரை மீண்டும் மீண்டும் இழிவாக நடத்தி வருகிறான். . . அகிலம் ======= ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம் வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால் என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான் சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான் . விளக்கம் ======== எனவே, அந்த நீசன்மேல் அதிக அளவு கோபம் கொண்டு திருவனந்தபுரம் இடத்தை விட்டுத் திருச்செந்தூர் நோக்கி வந்தேன். அங்கே நான் சிறிது காலம் வாழ்ந்து வந்தேன். அப்போது சில வெங்கப்பயல்கள் வேசைகளோடு உறவாட ஆசைப்பட்டனர். என்னைப் பற்றிச் சிறிதுகூட எண்ணாமல் என் கோவிலுக்குள்ளேயே அங்கு வந்த சில பெண்களுடன் கீழ்த் தரமாகச் சரச வார்த்தைகளைப் பேசியும் தவறும் செய்து விட்டனர். . . அகிலம். ======== இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில் மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன் . விளக்கம் ========= இருவரின் மனமும் ஒத்து செயல்பட்டிருந்தால்கூட அத்தவற்றினை மன்னிக்க முடியாது. கோவிலில் எனக்குப் பணிவிடைகள் செய்துவிட்டுத் திரும்பிச் சென்ற வேறொருவனின் மனைவியை அங்கிருந்த ஒரு நம்பூரி பிடித்து இழுத்தான். அந்த வயதான சழிந்த உடம்பையுடைய நம்பூரி தன் இச்சைக்கு உடன்படாத அவள் மார்பின் மேல் அணிந்திருந்த துணியைப் பிடித்து இழுத்து விலக்கி முறைகேடு செய்ய முயற்றான். . . அகிலம் ======== மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல் மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக் கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே . விளக்கம் ========= அச்சமயம் அவன் தலையின் மேல் அணிந்திருந்த முத்திரி மாலையைக் கூட கழற்றவில்லை. மனதிலிருந்த தீய காம மயக்கத்தால் நம்பூரி அந்தப் பெண்ணின் உள்ளம் வருந்தும்படி அவளைக் கட்டிப் பிடித்து இழுத்தான். அவள் மார்பகங்களைத் தனது காம வெறியால் அவளுக்குக் கேடு வரும் வண்ணம் நகத்தால் கிழித்து வேதனை உண்டாக்கினான். அவ்வேதனை தாங்காமல் அப்பெண் கோபமுற்றுக் கோவில் சுவற்றில் தலையை மோதி ஒரு சாபம் கூறினாள். . அகிலம் ======= நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக் காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள் சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே . விளக்கம். ========== நாராயணா, கந்தா, நான் உனக்குப் பணிவிடைகள் செய்து, உன்னைக் காண வேண்டும் என்னும் நோக்கம் இப்படியாகிவிட்டதே. என்னுடைய வாழ் நாளும் கடைசிக் காலத்தை எட்டக் கூடிய நிலை உருவாகி விட்டது. இந்த தவறான உறவினால் உனக்கும் கேடுகள் உருவாகி விட்டன. எனக்கு இப்படி ஒரு பிறவி இப்பொழுது வாய்த்து விட்டதோ? எனக்கு இத்துன்பம் ஏற்பட்டதால் திருச்செந்தூர்க் கோவிலில் இன்னும் சில நாள்களில் இங்குள்ள மண் நீரற்றுப் போய்விடும் என்று அந்த கற்புள்ள மங்கை சபித்து தடீர் என்று கீழே விழுந்து உயிர் துறந்து சிவலோகத்தை அடைந்தாள். . . அகிலம் ======== நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும் உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால் இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல் எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன் . விளக்கம் ========= நம்பூரி பங்கம் செய்ததால் மாமுனியே, அவள் அத்தலத்தில் உயிர் விட்டாள். அந்தப் பெண் உரைத்த கடுமையான சாபத்தால் நான் அங்கு இருக்க விரும்பவில்லை. அன்றைய நாள் முதல், இனி நாம் எங்கே போவோம் என்று எண்ணித் திருச்செந்தூரை விட்டு எழுந்து தெற்குக் கடற்கரை ஓரத்தில் போய் அமர்ந்தேன். . . தொடரும்... அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா  முடனே சொரூபமொன்று நானெடுப்பேன் சூட்ச அதுதா னொருகாலம் அதிகம்க னேகேளு துபெரிய என்மகனே கேட்டிடுநீ சூட்சம் அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய் தின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே அய்யா ! 01.06.2026 DMuthu Prakash வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா  முடனே சொரூபமொன்று நானெடுப்பேன் சூட்ச அதுதா னொருகாலம் அதிகம்க னேகேளு துபெரிய என்மகனே கேட்டிடுநீ சூட்சம் அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய் தின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே அய்யா ! 01.06.2026 DMuthu Prakash வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி - ShareChat