ShareChat
click to see wallet page
search
சிந்தனை வரிகள். தோல்வியடைவதற்கு நான் வருத்தப்படவில்லை. நான் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகு வரும் தோல்விக்கு நான் கவலைப்படுவதில்லை. உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள். அவர்கள் உங்களை மதிக்கும் அளவு உயர்ந்து காட்டுங்கள். எதுவாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் அதில் சிறந்து இருங்கள். ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரம் அளிக்கப்பட்டால் அதில் நான்கு மணி நேரத்தை கோடாரியைக் கூர் தீட்டவே பயன்படுத்துவேன். நான் மெதுவாகத் தான் முன்னேறுவேன். ஆனால், முன்னேறிக் கொண்டே இருப்பேன். முழுமையாக ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்த பிறகு உங்கள் முயற்சியினை முன்னெடுங்கள். வழியில் கண்டெடுத்த ஐந்து ரூபாயை விட உழைப்பினால் பெற்ற ஒரு ரூபாயின் மதிப்பு அதிகம். எல்லோருக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையுண்டு, ஆனால் வயதாகாமல். எனக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது. செய்வதைச் செவ்வனே செய்ய வேண்டும் அவ்வளவே. உதவும் எண்ணம் கொண்டவர் விமர்சிக்கத் தகுதியானவர். பாராட்டு - அனைவருக்கும் பிடித்த விஷயம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும். நாம் செய்யும் ஒரு விஷயத்தை சிறந்ததாக்க நம்மால் முடிந்த அளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும். 'முடிந்த அளவு" அதை கடைசி வரை கொடுக்க வேண்டும். கண்டிப்பை விட, அன்பே சிறந்த முடிவைத் தரும். 😊😊😊 #உற்சாக பானம் #⏱ஒரு நிமிட கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #👪 cute family members 👪 #பொழுது போக்கு
உற்சாக பானம் - எதையும் எதிர்கொள்வேன்  என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும் எதையும் எதிர்கொள்வேன்  என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும் - ShareChat