ShareChat
click to see wallet page
search
#🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 #🌾🌴🙏🏼ஸ்ரீ வராகி அம்மன்🙏🏼🌴🌾 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #அம்மன் வருடம் சித்திரை மாதம் 04ம் நாள் 17-ஏப்ரல்-26, வெள்ளிக்கிழமை நமக்கு தெரியாமலேயே சிலந்தி வலை பின்னுவதுபோல் நம் மனதில் படர்ந்து அலைக்கழிக்கும் தீய எண்ணங்களை நீக்கி சிவந்த உதய சூரியன் கதிர்கள் பட்டு வெண்பனி உருகி தெளிவான பளிங்கு நீரூற்றுபோல் ஆக்கிட சிந்தை நிரம்பிய பக்தி பெருக்கோடு மனம் உருகி நெகிழ்ந்து சிவனின் பாகம் பிரியாள் அங்கயற்கண்ணி அம்பிகையை போற்றி பாடி வாசனை மலரால் பூஜித்து பொற்பாதம் தலை சூடி வணங்கிடுவோம் வாரீர் பொற்கையில் கிளி கொண்ட மீனாக்ஷி, மீன் ஒத்த கண்களால் கடைக்கண்ணால் பார்த்து அருள்வாய் தேவி மரகத பச்சை மேனி கொண்டு பிரகாசிப்பவளே, பைய நடந்து வந்து உன் தாமரை பதமலர் காட்சி தருவாய் அம்மா பச்சைக் கிளி கையில் ஏந்தி இச்சகத்தை ஆள வந்தவளே பச்சைக் கிளியாக எனை உன் கையில் ஏந்திடுவாய் பக்குவமாய் உன்னருளை மனதில் உருக்கொண்டு பரவசமாக உனை போற்றி செந்தமிழில் பாடிடுவேன் அம்மா தாயே நீ நினைப்பரும் பொருளென முனிகணம் போற்றுவதை கேட்டு புன்முறுவல் செய்கின்றாய் சரணமம்மா அனுதினமும் உனையே சரணம் என தொழுதிடும் அடியவர் துயர்தனை முழுவதும் நீக்குகின்றாய் அபயமம்மா இப்பிறவி பெருங்கடலில் சிக்கி மூழ்கி தளர்வுற்றேன் நீட்டிய என் கரம் பற்றி உன் பாதமாம் கரை சேர்த்திடு தாயே கடையனேன் மேல் உயர் பரிவினைப் பெய்து காக்கின்றாய் நிலையிலா இவ்வாழ்வினில் ஓர் நிறைவினைத் தேடும் என் நெஞ்சில் அமர்ந்து நின் அருள்நிலை நிறுத்தி என்னை ஆண்டிடுவாய் என் அன்னையே சரணமம்மா இகத்திலே என்னை ஆட்கொண்டு அருள் புரிந்த உன் புகழ் பாட கவித்திறன் அருள வேண்டி நிற்கிறேன் அகத்தினில் வலிமையும் உரத்தையும் அளித்து எனை அணைத்து நீ அஞ்சல் என்பாய் நிழலென நின் பொன்னடி பற்றுகின்றேன் அளப்பரும் கருணையின் ஒருதுளி அடியனுக்கு அளித்திட மறுப்பது தகாதம்மா தயை புரிவாயம்மா 🪷🪷🪷
🙏🪔 ஓம் வராகி அம்மா போற்றி 🪔🙏 - ShareChat