மனமே ரிலாக்ஸ்
ஒருவர் நல்ல மனநிலையில் உள்ள போது அவர்கள் மூப்பு நிலை அடைந்தாலும் அவர்களின் செயல்களிலும் வேலைகளிலும் சுறுசுறுப்பு காணப்படும் . எப்பேர் பட்ட கடின வேலைகளை கூட ஈஸியாக மேற்கொள்வார்கள்,. உடலில் ஏன் முகத்தில் கூட முதுமையின் அடையாளம் பார்க்க முடியாது. புன்சிரிப்பில் கூட சோர்வை துக்கத்தை பார்க்க முடியாது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை அடைவர். அவர்களின் நடைகளில் உற்ச்சாகம் தெரியும் பேச்சுகளில் தெளிவு இருக்கும். உடல் ஆரோக்யம் இருக்கும். இவர்களின் இந்த நிலைக்கு காரணம்
சூழ் நிலைகள், சுற்றி இருக்கும் மனிதர்கள் காணும் காட்சிகள் வீட்டில் இருப்பவர்களின் செயல்களும் அணுகுமுறைகளுமே காரணம் . அடுத்து முக்கிய காரணம் கஷ்டமோ நஷ்ட்டமோ சுகமோ துக்கமோ வலிகளோ இவைகளை நாம் புன்சிரிப்போடு ஏற்றுகொள்ள நம் மனதை பழக்கப்படுத்த வேண்டும். ஆம் எப்போது நம் உடல் நம் பேச்சை கேட்க மறுக்கிறதோ எப்போது எதிரில உள்ளவர்களின் செயல்களில் பேச்சில்
எதிர் மறை தெரிகிறதோ அப்போது தான் கவனமாக இருக்க வேண்டும்.
சுற்றுபுறம் மற்றவர்கள் செய்கையும் சோர்வுக்கு காரணமாக மனதிற்கு பட்டால் அந்த சூழலில் இருந்து விலகி இயற்கையோடு நேரம் செலவிட வேண்டும் ஆம் இயற்கை மனதிற்கும் உடலுக்கும் நல்ல மருந்தாக மாறி நம் மனதை உற்ச்சாகமாக வைத்து கொள்ளும் தவிர மழையின் சப்தமும் அதனால் ஏற்பட்ட மண் கவாசனை கூட நமக்கு உற்சாகத்தை வர வழைக்கும்.
ஜோதிடர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க ஒருவருடைய ஜாதகத்தில் கோள்களின் நிலைபாடுகளை எதிர்மறையாக உதாரணத்திற்கு உங்களுக்கு இப்போது தசாபுத்தி சரியில்லை நேரம் சரியில்லை என்று உணர்த்தும் போது அவர் சொல்லும் சில நேர் மறைகளை கூட மூளை ஏற்க்காது. அவர் சொன்ன
எதிர்மறை
சொற்களையே சிந்திப்பதால் அப்படியே அந்த வார்த்தைகள் உயிர் பெற்றுவிடும் . அதே மருத்துவர்கள் ஒருவர் உயிர் போகும் நிலையில் இருந்தால் அவர்கள் கடவுளை வேண்டுங்கள் குணமடைவீர்கள் என்ற அந்த நேர்மறை மனதில் பதிந்து அவரை உயிர் பெற்றுவர செய்யும் . நம் வார்த்தைகள் நினைவுகள் தான் நம்மை காப்பாற்றும். எப்போது எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதோ உடனே அந்த இடத்தை விட்டு இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சென்று அமரவேண்டும் ,. கன்களை மூடி மூச்சை இழுத்து விடுங்கள் 10 முறை.
அடுத்து உங்கள் சிறந்த உண்மையான நண்பன் யார் தெரியுமா?
அவர் உங்களோடே இருக்கிறார். உங்கள் மனதை லேசாக்கி உங்களின் கஷ்டங்களை குறைப்பவர் . அவர் எல்லோரிடமும் இருக்கிறார் . ஆம் அவர் யார் ?
பேனாவும் காகிதமும் தான். உங்கள் குறை நிறைகளை எழுதும் போது வெளியில் சொல்லமுடியாத விஷயங்கள் கூட இவர்களிடம் தெரிவித்தால் போதும் மனம் லேசாகிவிடுவதை உணர்வீர்கள் . ஆனால் இப்போது அதை ஒதுக்கி கைபேசியில் மூழ்கிவிட்டதால் உங்கள் மனதை Rolex செய்ய முடியாது . காலத்தோடு நடைபயில கற்றுகொள்ளுங்கள் மாற்றங்கள் ஏற்படும்
இயற்கையோடு நட்புகொள்ளுங்கள் இதுதான் இளமையின் ரகசியம் .
Savithri Raju🙏 #👉வாழ்க்கை பாடங்கள்


