*ஓம் சரவண பவ*
கடவுள் ஒருவரே முருகா!
கருமணியாய் வழிநடத்தும் முருகா!
இதயத்தின் ஓசையே முருகா!
உலகை ஆளும் முருகா!
உணர்வில் நீயே முருகா! நற்றுணையாகுமே முருகா!
கற்பனை போதாது முருகா! கற்சிலையானேன் முருகா!
என் கடைசி மூச்சும் முருகா! முருகா! முருகா!
கல்லில் உமைக் கண்டேன்! கண்ணெதிரே தோன்றினாய்! முருகா!
புலனடக்கி ஜோதியாய்க் கண்டேன்! உள்ளத்தில் ஒளிர்ந்தாய்! முருகா!
உளமுருக்கி ஆலயம் வடித்தேன்! என்னுள்ளே கலந்தாய்! முருகா!
பல்லுயிரை உம் நிழலாய் நேசித்தேன்! நேரே நின்றாய்! முருகா!
எவ்வழியால் தொழுதாலும் அவ்வழியால் தோன்றும் முருகா!
உன்னடி சரணம்!
புன்னகையில் வாயடைத்துப் போனேன் -
முருகா!
என்று ஒரு முறை சொன்ன உடன் ...
உணர்ச்சி மிகுதியில் செயலிழந்தேன் -
முருகா!
உம் இல் சென்ற உடன் ...
முழுமையாய் எனை மறந்தேன்
முருகா!
*ஓம் முருகா போற்றி*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏


