#maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், நிதி தொடர்பான உண்மை நிலவரங்கள் மறைக்கப்படாமல் வெளியிடப்பட வேண்டும். அரசின் தற்போதைய நிதிநிலை என்ன? மாநிலத்தின் மொத்தக் கடன் எவ்வளவு? எதிர்கால நிதி மேலாண்மைத் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கு வெள்ளை அறிக்கை தெளிவான பதிலை வழங்க வேண்டும்.
நிதி வெளிப்படைத்தன்மை என்பது நல்லாட்சியின் அடையாளமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும், மக்களின் நம்பிக்கைக்கும் வெள்ளை அறிக்கை முக்கிய பங்காற்றும். எனவே, அரசு விரைவாக வெள்ளை அறிக்கையை வெளியிடுவது காலத்தின் தேவையாகும்.
#Makkalneedhimaiam
#Kamalhaasan_MP
#cheifministerofTamilnadu



