ShareChat
click to see wallet page
search
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 30.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வைகுண்டர் முருகனுக்கு அருளல் தொடர்ச்சி : ============================================= அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார் இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால் உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில் பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார் அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம் உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக் கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் . விளக்கம் ========= உடனே, வைகுணடர் கந்தனை நோக்கி, கந்தனே, நீ இப்போது சொன்ன மொழிகள் எல்லாம் உண்மையாக இருக்குமானால், உயர்ந்த உன் கோபுரத்தின் வடமேற்கு மூலையில் பின் கோபுரம் தெரியும் வண்ணம் பிளந்து காட்ட வேண்டும். மேலும் உன்னை என்றும் வழிபட மக்கள் உருவாக்கி வைத்திருக்கும் பயனற்ற சிலையைத் தெற்கு முகமாகத் திருப்பி வைத்துவிட வேண்டும். உலக மக்கள் அறியும் வண்ணம் உன் கோயிலின் ஒரு வாயிலை அடைத்து வைக்க வேண்டும். முடிவாக நீ மன வேதனையோடு கண்ணை மூடிக் கொண்டு கவிழ்ந்தவண்ணம் இருக்க வேண்டும். இத்தனையும் செய்து முடிப்பாயா? என்றார். . . அகிலம் ======= அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால் பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார் அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார் . விளக்கம் ========= பிறகு நான் சொன்னதை மறந்து ஏதாவது தவறுதலாக நடந்தால் வைகுண்டராகிய எனக்குப் பொல்லாத கோபம் உண்டாகும். உனக்குக் கடினமான பெரிய விலங்கு மாட்டப்படும் என்று கூறி எச்சரித்தார். . இதைக் கேட்ட கந்தன் மனம் மிகக்கலக்கம் அடைந்து, தாங்கள் இப்போது சொன்னவற்றை எல்லாம் நான் இப்போதே செய்து முடித்து விடுகிறேன். மேலும் தங்கள் அறிவுரைப்படியே அடியேன் நடப்பேன் என்று கூறினார். . . அகிலம் ======= சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன் விடியும் பொழுது வேசம் பலதணிவேன் பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன் வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே . விளக்கம் ========= மீண்டும் கந்தனிடம் சில உபதேசங்களைக் கூறினார். கந்தனே, எல்லாரும் கட்டுப்பாட்டிலிருந்து மீறி நடக்காது இருங்கள். நீதி வழியில் செயல்படுங்கள். உலகம் அறியும்வண்ணம் ஒரு நெல் எடுத்து உடைக்கும் முன்னர் தருமயுகத்துக்குத் தகுதி பெற்ற ஆத்மீக விழிப்புற்று எழுந்தவர்களின் தகுதியை அறியப் பல சோதனைகள் பார்த்து நடுத்தீர்ப்பும் செய்வேன். தருமயுகம் பிறக்கும் சமயம் பல வகை வேசம் அணிந்து தருமபதிக்குத் தகுதி படைத்தவருடன் அடுத்த நெல் எடுத்து உடைக்கும் முன்னே நான் தோன்றி தருமயுகத்தை ஆள வருவேன். . . அகிலம். ======== கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும் மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர . . விளக்கம் ========= எனவே, என்னையே கருதி ஒரு நினைவோடு இருங்கள். உங்கள் நினைவு சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உபதேசங்க்ள கந்தனாகிய உனக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கும் இது பொருந்தும். எனவே, மறந்துவிடாதீர்கள். ஞாபகமாக இருங்கள் என்று கூறி அவ்விடம் விட்டு, வைகுணடர் மீண்டும் தெச்சணம் நோக்கி நடக்கலானார். . . அகிலம் ======== வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல் ============================================ அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும் ஆதவனைச் சூழ் கணம்போல் அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர் ஆடியே பாடி வரவே தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழ சூழவளைந் தேழியல் படர்தே சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச் சூராதி சூர ரெனவே . விளக்கம் ========= அண்டத்தில் உள்ளவர்கள் எல்லாரும் எட்டுத் திசைகளிலும் சூழ்ந்து நிற்கும் கணங்களைப் போல் நின்று அங்கிருந்து வந்து கொண்டிருந்த வைகுண்டரை வணங்கினர். சிலர் அரிஅரி அரகரா சிவசிவா என்று பாடியும் ஆடியும் வந்து கொணடிருந்தனர். தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து வளைந்து அவருடைய பாதங்களை ஏழு வகை இசைகள் பாடித் தொழுதனர். அவர்கள் வீரம் பொருந்திய இறைவனான நாராயண மந்திரத்தைத் தொடர்ந்து ஓதி வந்தனர். . தொடரும்... அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - 0 0 - ShareChat