"மனிதர்களுடன் அளவுக்கு அதிகமாக ஒட்டிக்கொள்ளாதீர்கள்!
ஏனெனில் உங்களை விடச் சிறந்த ஒருவர் கிடைக்கும்போது, சிலர் உங்கள் இருப்பையே மறந்துவிடுவார்கள்.
மனிதனுடைய திறமை பெரிதல்ல. கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.
கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்தால்,அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
வாழ்க்கையைப் பந்தயமாக எண்ணி ஓடுபவர்கள் களைத்துப்போய் விடுகிறார்கள்.
பயணமாய் எண்ணுபவர்கள் கலகலப்பாய் மகிழ்கிறார்கள்.
#மனிதர்கள்


