ShareChat
click to see wallet page
search
திருமுறைகள் - பகுதி 6 சேக்கிழார், நம்பியாண்டார் நம்பியின் பிற்காலத்தவர், நம்பியாண்டார் நம்பி பதினொறு திருமுறைகளை தந்தார். பன்னிரண்டாவது திருமுறையை தந்தவர் சேக்கிழார். பன்னிரென்டாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தார் சேக்கிழார். இவரது தந்தை வெள்ளியங்கிரி தாயார் அழகாம்பிகை இவர்களுக்கு முதல் மகனாக பிறந்தார். இவருக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் அருண்மொழித்தேவர். இவரது தம்பி பாலறாவாயர் ஆவார். அருண்மொழித் தேவர் இளமையிலேயே கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கினார். சே என்பதற்குக் காளை என்றும், சேக்கிழார் என்றால் காளைக்கு உரியவர் என்று பொருள். காளையை வைத்து உழவுத்தொழில் செய்து வந்தோர்களில் அமைச்சராகவும், சிவனடியாராகவும் சிறந்து விளங்கியமையால் இயற்பெயரான அருண்மொழித்தேவர் என்பது மறைந்து சேக்கிழார் என்பதே பெயராக ஆனது. சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் எனும் அநபாயசோழருக்குக் கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? மலையினும் பெரியது எது? என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை வெள்ளியங்கிரி அவர்களுக்கு மன்னரின் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். இந்த விடைகள் என்னுடையது அல்ல, எனது மூத்த மகனுடைய என மன்னரிடம் கூறினார். சேக்கிழாரின் அறிவுத் திறனை வியந்து அவருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார். மன்னர் கேட்ட கேள்வியும் சேக்கிழார் அளித்த பதிலும்... கடலினும் பெரியது எது? உலகினும் பெரியது எது? மலையினும் பெரியது எது? மலையை விட பெரிது? “நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” -எந்தச் செயலை எடுத்தாலும் அதை நிலையான தைரியமான மனதுடன் யார் செய்கிறானோ, அவனது மனம் மலையை விட உறுதியானது. கடலை விட பெரிது எது? “பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது” -தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு, கடலை விடப் பெரிது. உலகை விட பெரிது எது? “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” - ஒருவனுக்கு தேவைப்படும் போது, சரியான சமயத்தில் கிடைக்கிற சிறிய உதவி உலகத்தை விட பெரிது. சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்புப் பட்டத்தினைத் தந்தார் அரசன். தொடருவோம்... 🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #பன்னிரு திருமுறை #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #🙏ஆன்மீகம் #🙏🌹பாரதபூமி🌹🙏🌹சித்தர்கள் பூமி🌹🙏புண்ணியபூமி🌹🙏
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat