swarnam Meenakshinathan
607 views 5 days ago
திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்~ பத்தாம் திருமுறை! ஆறாம் தந்திரம் –1 பாடல்1650 ஆறாம் தந்திரம்- அருளுடைமையின் ஞானம் வருதல் (அருள் - நாத விந்துவாகிய திருவடி. அருள் உடைமையின் ஞானம் வருதலாவது, நாதவிந்துவாகிய திருவடி பொருந்தியபோது ஞானம் விளங்குதல்). #பாடல் புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. #பொருள் அம்மையும் அப்பனுமாக ஓர் உடம்பில் விளங்கும் சிவபெருமான் புண்ணியன் என்று அழைக்கப்படுவான். யாவர்க்கும் தந்தையாய் உள்ளவன் ஆதலால் அவன் எந்தை எனப்படுவான். அவனே யாவரையும் தூய்மைப்படுதலால் அவன் புனிதமாயுள்ளான். நல்லார் அத்தகையோன் திருவடியைத் திரு ஐந்தெழுத்து ஓதியும் போற்றி மந்திரம் புகன்று மலர்தூவித் தொழுதும் சேர்வர். அப்படிச் சேர்தலால் அவர்பால் திருவிளக்குச் சுடராகிய சிவஞானம் விளைந்தது. தலைமைப்பாடு அமைந்த சிவபெருமான் திருவருள் பெற்றபோதே மண்ணவர் பிறப்பற்றுச் சிறப்புறுவதும் சிவ உலகத்தாராகிய வானவர் ஆவதும் நிகழும். #திருச்சிற்றம்பலம் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💰Best Shop #📦New Products #🤑Limited Stocks #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
11 likes
8 shares

More like this