அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
🌾 நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு !! 🤔
உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!
கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.
யார் அந்த ஆறு பேர்கள்...?
────●●●────
முதலாவதாகப் பரசுராமர்....
இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.
ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.
ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.
அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.
────●●●────
இரண்டாவதாக ஒரு முனிவர்...
முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.
────●●●────
மூன்றாவதாக இந்திரன்...
கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.
────●●●────
நான்காவதாகக் குந்தி...
கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.
────●●●────
ஐந்தாவதாகச் சல்லியன்...
கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.
────●●●────
ஆறாவதாகக் கண்ணன்...
கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.
────●●●────
ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை தீர்த்தில் குளித்தாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
#மூங்கிலுக்குள் #ஈரம்!
#திருவாசகம்
#பாடல்
பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு உன்
அணி ஆர் பாதம் கொடுத்தி, அதுவும் அரிது என்றால்
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே!
#எட்டாவது #திருமுறை #திருவாசகம் #ஆனந்த #பரவசம் 89 விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு எனை வைத்தாய் என்று தொடங்கும் பத்து பாடல்களில் 9 வது பாடல்
பாடியவர்:
#மாணிக்கவாசகர்
#விளக்கம்
பொய்யான மாயைகளை விலக்கி மெய்யான இன்பம் தருகிறவனே,
உன்னை வணங்குகிற அடியவர்களுக்கு உன்னுடைய அழகான திருவடியைக் கொடுத்து அருளுகிறாய், உனது திருவருள் மிகவும் அரிதானதுதான்!
ஆனால், என் மனமோ வலிமை பொருந்திய மூங்கிலைப் போன்றது.
நான் செய்த பிழைகளும் நிறைய. எனக்கும் உன் கருணை கிடைக்குமா?
விரைவாக வா, என்னுடைய தவறுகளை உடைத்துப் பொடிப்பொடியாக்கிக் குளிர்ச்சியான உன்னுடைய பாதங்களைக் கொடுத்து
அருள் செய்!
#கல் #போன்ற #மனம்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இங்கே #மாணிக்கவாசகர் #மூங்கில் #போன்ற #மனம் என்கிறார்.
இதன் அர்த்தம், ’கொஞ்சமும் ஈரப்பசை (அன்பு) இல்லாத, கடினமான மனத்தைக் கொண்டவன் நான்,
எனக்கும் நீ அருள் செய்வாயா?’
நிச்சயம் செய்வான்,
ஒருவர் இப்படி இறைஞ்சிக் கேட்கும்போதே அந்த மூங்கிலுக்குள்
ஈரம் கசியத் தொடங்கிவிடுகிறதே!
#திருச்சிற்றம்பலம்
நிச்சயம் நாளுண்டு நம்பினால் வாழ்வுண்டு...
ஆதலால்...
முட்டி மோதுவோம் முடிந்தளவு முயலுவோம் தட்டித் தூக்க முடியாதெனினும்...
வாழ்வில் சாதனை என்பது
வளர்ந்திருப்பது அல்ல, வேறூன்றி
நிலைத்திருப்பது.
நாம் இல்லாத ஒரு இடத்தில் கூட நமக்கு மரியாதை கிடைக்குமானால் அதுவே நாம் வாழ்ந்ததின் அடையாளம்.
இருக்கிற இடம் தெரியாமல் இருந்துவிட்டுப் போவது வாழ்க்கையல்ல. நாம் இருந்தோம் என்பதற்கான அடையாளத்தை ஏற்படுத்திச் செல்வதே வாழ்க்கை.
வாழ வேண்டுமே என்று நினைக்காமல். வாழ்ந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தால். துன்பமும் தூசியாய்த் தெரியும்.
சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
ஆசாரக் கோவை
#முந்தையோர் #கண்ட #முறை !
இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம்.
பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம்.
தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.
சிறு பொழுது, பெரும் பொழுது.
ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.
ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர்.
6 - 10 - காலை
10 - 2 - நண்பகல்
2 - 6 - ஏற்பாடு
6 - 10 - மாலை
10 - 2 - யாமம்
2 - 6 - வைகறை
இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்.
படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள்.
சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம்.
ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும்.
எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும்.
மனதில் சிந்திக்க வேண்டும்.
அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும்.
பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும்.
பாடல்
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-
முந்தையோர் கண்ட முறை.
பொருள்
வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும்.
தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய
நல் அறமும் = நல்ல அறச் செயல்களையும்
ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும்
சிந்தித்து = மனதில் சிந்தித்து
வாய்வதின் = வாய்த்த,
தந்தையும் = தந்தையையும்
தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக
என்பதே- = எனபதே
முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி
இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல.
இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது சொல்கிறது.
5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள்.
அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
அதிகாலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும்.
நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு
இருப்பதை உணர்வீர்கள்.
இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.
#திருச்சிற்றம்பலம்
#திருச்சிற்றம்பலம்
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே
சிவாயநம 🙏
மன்னிப்பு என்பது தவறுக்காகவும்,
Sorry என்பது சமாதானத்திற்காகவும்
கேட்கப்படுகிறது.
தோற்கும் போது,
அதுதான் நமக்கு,
இறுதியென,
உறுதி செய்துவிடாதே,
ஏனென்றால் இங்கு,
இறப்பை தவிர,
இறுதியானதும்,
உறுதியானதும் நமக்கு,
வேறொன்றுமில்லை..
பிறரிடம் தேவையில்லாது,
வாக்குவாதம்,
செய்வதை விட,
ஆமாமென்று கூறிவிட்டு,
நகர்வது திமிரென்று,
அவர்கள் கூறினால்,
திமிராகவே,
இருந்துட்டு போவோம்...
🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #ஓம் நமசிவாய #தெய்வீக சிந்தனைகள்



