ShareChat
click to see wallet page
search
புதிய அரசுக்கு முக்கியமானதொரு சவால்: அதிகரித்து வரும் சென்னை நகரின் தீராத குடிநீர் பிரச்சினை வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதி ஒன்றில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அதிக பட்சம் 200 அடி ஆழம் போட்டால் போதும், தண்ணீர் தேவைக்கு அதிகமாகவே தாரளமாகக் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அந்தப் பகுதியில் 200 படுக்கைகளுடன் ஒரு நவீன மருத்துவமனை, ஆயிரம் பேர் வேலை பார்க்கக்கூடிய சாஃட்வேர் பார்க், மற்றும் ஒரு கல்லூரி ஆகியவை வந்தன. நிலத்தின் விலை மற்றும் வீட்டுவாடகை விஷம் போல் ஏறின. ஏரியாவாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மக்களுடைய மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. ஒரு வருடத்திலேயே ஆழ்துளைக் கிணறுகள் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் வறண்டு விட்டன. அதற்குக் காரணம், மருத்துவமனை, சாஃட்வேர் பார்க், கல்லூரி ஆகியவை 600 அடி முதல் 1000 அடி வரை 6.5 அங்குல விட்டம் கொண்ட ஆழ்துளைக் கிணறுகளை அமைத்ததுதான். அங்கு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதால் மக்கள் வாழும் குடியிருப்புகளில் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. தாம்பரம், போரூர் மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் ஆழத்தில் இருப்பதால், அங்கு சாதாரணமாகவே 400 முதல் 500 அடிகள் ஆழத்தில்தான் தண்ணீர் கிடைக்கும். சில இடங்களில் ஆழம் 1200 அடி வரை கூட செல்வது உண்டு. பெரிய நிறுவனங்களைப் போல சாதாரண மக்கள் பெரும் பொருட்செலவில் ஆழமான துளைகளைப் போட முடியாது என்பதால் மக்கள் கோடை காலங்களில் அன்றாட புழக்கத்துக்கும் நீரினை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். பொதுவாக தண்ணீர் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையுடன் தீர்ப்பதற்கு மாறி மாறி ஆறு தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்டு வந்த கழக அரசுகள் சிரத்தையுடன் செயல்படாததால் நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மற்ற பெரு நகரங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைதான். குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு நெறிமுறைகளை அரசு வகுத்து, அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம். தெய்வாதீனமாக கடந்த சில வருடங்களில் நல்ல மழை பெய்து சென்னையை காப்பாற்றியது. ஒரூ வருடம் மழை தப்பிவிட்டால் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்புவது கடினம். போர்க்கால அடிப்படையில் ரயில்களிலும் விமானங்களிலு தண்ணீர் கொண்டுவர நேரலாம். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலை. தோல் பதனிடுதல், ஜவுளித்துறை, மருந்து, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் தொழில் நுட்பம் / டேட்டா சென்டர்கள், பானங்கள் / பேக்கேஜுடு குடிநீர் ஆகிய நீரின் தேவை அதிகம் உள்ள தொழில்கள் பல்லேறு குடியிருப்பு பகுதிகளில் இருந்து அதிக தூரத்தில் துவங்கப் படவேண்டும் என்பதை லைசன்ஸ் கொடுக்கும்போதே உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ளவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டம் கட்டமாக (Phased manner) வெளியேற்ற வேண்டும். கடலோரப் பகுதிகளில் (ECR, OMR) மிக ஆழமாகத் துளையிடுவது கடல் நீர் உட்புகுவதற்கு (Saltwater Intrusion) வழிவகுக்கும் என்பதால், அங்கு ஆழத்தைக் குறைத்து மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதே சிறந்தது என வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். புதிய கட்டுமானங்களில் மழைநீர் சேகரிப்பு (Rain Water Harvesting) விதிமுறைகள் அமலில் உள்ளன. இருப்பினும் அனைத்து பழைய கட்டுமானங்களிலும் மழைநீர் சேகரிப்புக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு அதிக பட்ச ஆழம் நிர்ணயிக்கப்பட வேண்டும். சூப்பர் எல்நினோ புண்ணியத்தில் ஏரிகள் வறண்டு (Day Zero) எனப்படும், நகராட்சிகளால் தண்ணீர் வழங்க முடியாமல் போகும் நாள் வரும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். கோடைக் காலங்களில் பெரிய நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதை தடுத்தால்தான் பொதுமக்கள் அந்தக் காலகட்டத்தை ஒருவழியாக சமாளித்து கரையேற முடியும். #சென்னை #குடிநீர்பிரச்சினை #விஜய் #நிலத்தடிநீர் #மழைநீர் சேகரிப்பு Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel! #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05