ShareChat
click to see wallet page
search
#நல்லதே பேசு நல்லதே நினை கோலாகலமாக நடைபெற்ற ஈதுல் அல்ஹா (பக்ரீத்) சிறப்பு தொழுகை விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக திகழும் திண்டிவனத்தில், நபி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஈதுல் அல்ஹா எனும் பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகை இன்று (28.05.2026) வியாழக்கிழமை காலை மிகுந்த பக்தி உணர்வுடன் நடைபெற்றது. திண்டிவன நகரில் உள்ள நவாப் பள்ளிவாசல், புது பள்ளிவாசல், மதினா பள்ளிவாசல். தாருஸ்ஸலாம் பள்ளிவாசல், ரஹ்மானியா பள்ளிவாசல், ரோஷனை பள்ளிவாசல், உமர் புலவர் பள்ளிவாசல், மக்கா பள்ளிவாசல், காபா பள்ளிவாசல்.அபூபக்கர் சித்திக் பள்ளிவாசல், சஞ்சீவிராயன் பேட்டை பள்ளிவாசல், ஹவுசிங் போர்டு பள்ளிவாசல், கிடங்கள் நூர் பள்ளிவாசல், கோட்டைமேட்டு முபாரக் பள்ளிவாசல் , கூபா பள்ளிவாசல்.உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லி, தலைவர்கள் செயலாளர்கள், இமாம்கள் மற்றும் ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றிணைந்து செஞ்சி ரோடு – நேரு வீதி மேம்பாலம் வழியாக இறைவனின் புகழைப் பாடிக்கொண்டு ஒற்றுமை பேரணியாக மயிலம் சாலையில் உள்ள சந்து இனாம்தார் திறந்தவெளி மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு காலை 7.00 மணியளவில் நடைபெற்ற சிறப்பு ஈதுல் அல்ஹா தொழுகைக்கு நவாப் பள்ளிவாசல் டிரஸ்ட் இமாம் மௌலானா மௌலவி ஏ. நியாஸ் அஹமத் அவர்கள் தொழுகை நடத்தினார். தொடர்ந்து அபூபக்கர் சித்திக் பள்ளிவாசலின் மௌலானா மௌலவி உசேன் அவர்கள் பக்ரீத் திருநாளின் தியாகப் பெருமை , சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் மௌலானா மௌலவி ஹபிபுல்லா, மௌலானா மௌலவி ஹ. முஹம்மத் ஜாவித், மௌலானா மௌலவி முஹம்மத் ஹாரூன், மௌலானா மௌல்வி. எஸ் .ஏ . சாகுல் அமீது, மௌலானா மௌலவி முஹம்மத் தாஸின், முஸ்லிம் மக்கள் கழகத்தின் சமூக போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் ,நவாப் பள்ளிவாசல் டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் யூ. அஜ்மல் அலி, மாவட்ட முதன்மை சான்று உறுதி வழக்கறிஞர் யூ. அம்ஜத் அலி, வழக்கறிஞர்கள் இ. சர்வர்கான், கபீர், அ. அஜீஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ஏ .எல். எஸ். ஜான்பாஷா. விசிகவின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணை செயலாளர் கு. அப்துல் ஜப்பார், 27வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கு. ஷபியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி.மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளின் மாவட்ட, நகர, கிளை மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தப்லீக் ஜமாத்தார்கள் மற்றும் பல்வேறு பள்ளிவாசல் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு அன்பும் ஒற்றுமையும் நிறைந்த திருவிழாவாக நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
நல்லதே பேசு நல்லதே நினை - ShareChat