இன்றைய வெளிப்படுத்தின விசேஷ தியானம் : 29/06/2026
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கம் POST - 309
வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரம் :
XI. 2) “ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ள வர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்." (வெளி 14:4) (Part - 2)
சபையின் இருண்ட காலமான கி.பி.6-ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டு வரை வேதத்தின் மூல நூல்கள் கத்தோலிக்க சபையாரின் திருமணஞ் செய்யாத துறவிகளின் கரங்களில் இருந்த போது இந்த வசனம் அவர்களால் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று பல வேத பண்டிதர்களின் கருத்தாயிருக்கிறது.
அப்.யோவான் சபையானது தங்களைக் கறைப்படுத்தாதவர்களாய், கற்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று நிரூபங்களில் வலியுறுத்துகிறார். "கறை திரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக" இருக்க (எபே 5:27)ல் அப்.பவுல் வலியறுத்துகிறார். "கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடமற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்க வேண்டும்." (பிலி 2:15) என்கிறார் அப்.பவுல்.
தங்களைக் கறைப்படுத்தாதவர்கள். கற்புள்ளவர்கள் என்று அப்.யோவான் கூறும்பொழுது உலகத்தோடு ஐக்கியங் கொள்ளுதல், பொருள் ஆசையோடிருத்தல் ஆகிய பாவங்களை மனதில் கொண்டு உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்." (பிலி 3:10,11) மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களெல்லாம் கிறிஸ்துவின் சித்தத்திற்கு தங்களை முற்றிலுமாக ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்துள்ள ஜீவியத்தை நமக்கு அறிவிக்கின்றது. இவர்களுடைய ஒப்புக் கொடுத்துக் கொண்ட வாழ்க்கையிலே சிலவேளை இவர்கள் கரடுமுரடான பாதையினூடாக தவித்திருக்கலாம். போகும் வழியை அறிந்து கொள்ளாமலும், விளங்கிக் கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். தான் எங்கே போகிறேன் என்பதை அறியாமலேயே தன் வீட்டாரையும், நாட்டையும் விட்டுப் பிரிந்து தேவன் காட்டிய வழியில் நடந்த ஆபிரகாமின் நம்பிக்கை இவர்களிடம் காணப்பட்டிருக்க வேண்டும். "என் பின்னே வாருங்கள்” (மத் 4:19) என்பது தான் கிறிஸ்து இயேசு ராஜா தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்த முதல் அழைப்பு என்பதை அறிவோம்.
சீயோன் மலையில் புதுப்பாட்டைப் பாடுகிற இவர்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மனுஷரிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள். "கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." (1 கொரி 6:20) "நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்;மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்”(கொரி 7:23) இவ்வசனங்களின்படி தேவன் அவர்களை கிரையம் கொடுத்து வாங்கினபடியால் தேவனுக்குச் சொந்தமானவர்கள் ஆனார்கள். ஆகையால் இவர்கள் தேவனுக்கென்றதான முதற்பலன்களானவர்கள். "அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சைரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்." (எண் 18:2) இஸ்ரவேலர்கள் தங்களுடைய விளைச்சலில் முதலாவதாக ஒரு நல்ல பங்கைத் தெரிந்து கொண்டு அதை தேவனுக்கு காணிக்கையாகச் செலுத்தினார்கள் என்பதை மேற்காணும் வசனம் போதிக்கின்றது. "அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்." (யாக் 1:18) “அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவீகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம்." (ரோம 8:23)
மேற்காணும் கர்த்தருடைய திருவசனங்களின்படி, கிருபையின் கால சத்திய வசனங்களுக்கு கீழ்ப்படிந்த கோடானகோடி தேவ ஜனங்களில், கடைசிக் காலத்தில் சீயோன் மலையில் ஆட்டுக்குட்டியானவரோடு புதிய பாடலைப் பாடி நித்திய வாசிகளாவதற்கு ஆவியின் முதற் பலன்களானவர்களாகிய மணவாட்டி சபையை மகிமையின் தேவன் தெரிந்தெடுத்துள்ளார் என்பதை அறிந்து மகிமை நாதராகிய இயேசு மணவாளனை மகிமைப்படுத்துவோம்.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலர்,
I. ஆசீர்வாதம்
"பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை"
மதுரை,
இந்தியா,
(தினந்தோறும் எங்களது Whatsapp Channel - மூலமாக வசனம் மற்றும் சத்தியங்களை அறிந்துக்கொள்ள இணையுங்கள். ஜெப தொடர்பிற்கு Pr.Arulnatharaj 8682882815, Pr Sam Gunaraj 8682882805)
Follow the பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNA8Y66BIEhjWAI0K3n.
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #🙏கோவில்


