ShareChat
click to see wallet page
search
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கன்னிவாடி ரெட்டியார் பட்டியைச் காலனியை சேர்ந்த காசிராஜா (வயது 42). அவரது மகன்கள் சஞ்சய் (வயது 20) மனோஜ் குமார் (வயது 21) வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காசிராஜன் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எ எழுந்து பார்த்தபோது தனது மனைவி மருதாயம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். எனவே உடனடியாக தனது மகன்களுடன் காசிராஜன் தனது மனைவியை தேடி சென்ற போது வீட்டின் வெளியே மருதாயம்மாள் இல்லாததை அடுத்து பாலசுப்பிரமணியம் வீட்டில் பாலசுப்பிரமணியம், மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து கணவன் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தனது உறவினரான வாடிப்பட்டி கச்சராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு (25) தகவல் தெரிவிக்கவே ஜானகிராமன் பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டச் சொல்லி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விட்டார். இதனையடுத்து நால்வரும் பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே ஜானகிராமன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளார். பாலசுப்ரமணியம் பதிலுக்கு அவர்களை தாக்கியதில் கடும் கோபமடைந்தநால்வரும் பாலசுப்ரமணியத்தை அருகில் இருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) எடுத்து அடித்து கொலை செய்துவிட்டு அந்த கல்லை கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் பெர்ஜின், மனைவிக்கு தெரியாமல் சில நாட்களாக தனது நண்பனின் மனைவியுடன் கள்ளகாதலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாந்தி கணவரை கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவரது கணவர் பெர்ஜின் நண்பனின் மனைவியான அமலிவனஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை நாகர்கோவிலில் உள்ள கட்டையன்விளை பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து பெர்ஜின் மனைவி சாந்திக்கு தகவல் தெரியவந்ததை தொடர்ந்து அவரது கவனர் கள்ளகாதலியோடு வசித்து வரும் நாகர்கோவில் அடுத்த பார்வதிபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். வெகு நேரமாக கதவினை தட்டியும் யாரும் கதவினை திறக்கவில்லை. இதனால் வீட்டின் முன்பு தனது இரண்டு மகன்களோடு அமர்ந்து முற்றுகையிட்டு கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பெர்ஜின் மனைவி சாந்தி. இதனால், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வடசேரி போலீசார் சாந்தியிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாந்தி, 50,000க்கு மேல் சம்பளம் வாங்கியும் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதுவும் செய்யாமல் அவரது நண்பனின் மனைவியுடன் தகாத உறவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் , அண்டைவீட்டார் தன்னை இங்கிருந்து வெளியேறுமாறு கூறுவதாகவும், அவர்கள்தான் இவர்களுக்கு வீட்டினை வாடகைக்கு கொடுத்துள்ளதாகவும், எல்லாம் தெரிந்திருந்தது இதை அந்த அண்டைவீட்டார் செய்வதாகவும் கூறினார். மேலும், வனஜாவின் மூத்தமகன் கத்தியை எடுத்து குத்த முயற்சிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், சாந்தி தனது கணவர் போலீசார் என்பதால் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி கதறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ் #📢 மே 26 முக்கியதகவல்கள் 👍
வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 - "எதிர் வீட்டுக்காரருடன் உல்லாசத்தில் இருந்த தாயை அந்த மனைவி" கோலத்தில் பார்த்த மகன்கள். இரவோடு இரவாக கள்ளக்காதலனுக்கு கொடூரம்! "எதிர் வீட்டுக்காரருடன் உல்லாசத்தில் இருந்த தாயை அந்த மனைவி" கோலத்தில் பார்த்த மகன்கள். இரவோடு இரவாக கள்ளக்காதலனுக்கு கொடூரம்! - ShareChat