MUTHUPANDIAN RAMKUMAR
620 views 6 days ago
🕉🕉🕉🕉🕉🕉🕉 *குபேர கடாட்சம் கிடைத்து, கோடிக்கணக்கில் பணம் சேர இந்த பத்து ரூபாய் பரிகாரம் செய்தால் போதும்!!!* *ஒவ்வொருவருக்கும் பணத்தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழையாக இருப்பவருக்கு உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை இது போன்ற செலவுகள் மட்டும்தான் இருக்கிறது. ஒரு மாதத்தில் இதனை சமாளிப்பதற்கே அவர்கள் சம்பாதிக்கும் தொகை போதுமானதாக இருப்பதில்லை. இதற்கு ஏற்ற பணத்தை சம்பாதிப்பதற்காக காலை முதல் இரவு வரை படும் பாடு பட்டு கடினமாக உழைக்கின்றனர். அதிலும் சிலர் அவர்களின் தேவையை சமாளிக்க முடியாமல் கடன் வாங்குகிறார்கள். இப்படி ஏழையாக இருப்பவரின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்துடன் தான் செல்கிறது. அதேபோல் பணக்காரர்களாக இருப்பவர்கள் தங்கள் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக, புதிய கட்டுமானம் கட்டுவதற்க்காக கடன் வாங்குகிறார்கள். இப்படி பணத் தேவை என்பது ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் தேவை என்பதை இருக்க தான் செய்கிறது. இவ்வாறு அனைவருக்கும் தேவைப்படும் பணத்தின் அதிபதியான குபேர கடவுளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து வர நம்மிடம் பணம் மள மளவென்று சேர ஆரம்பிக்கும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.* *நமது வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று இல்லாவிட்டால் எதனையும் வென்றுவிட முடியாது. எவ்வளவு தான் பிரச்சனைகளை சந்தித்தாலும் அவற்றை வென்று அடுத்தபடியாக நமது வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான செயல்களை செய்யத் துவங்கி விட வேண்டும். இவற்றையெல்லாம் நாம் செய்வதற்கு நம்மை விட பலம் பொருந்திய ஒரு சக்தியை நம்பி தான் இவை அனைத்தையும் நாம் செய்கிறோம்.* *அவ்வாறு அனைவரின் நம்பிக்கையாக இருக்கின்ற ஒன்று தான் தெய்வம். ஒரு சிலர் தங்கள் குல தெய்வத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தனக்கு இஷ்ட தெய்வமான ஒரு தெய்வத்தை மனதில் நினைத்து தான் அனைத்து காரியங்களையும் செய்ய துவங்குவார்கள். அப்படி தெய்வங்கள் நம்முடன் இருந்து, நமக்கான அனைத்து தேவைகளையும் செய்ய நமக்கு போதிய தைரியத்தையும், பலத்தையும் கொடுக்கின்றன.* https://chat.whatsapp.com/EbndOIIkbxO0wf6HQqA1NG #🙏🪔 குபேரன் லட்சுமி போற்றி 🪔🙏 #ஹீ குபேரன் லட்சுமி# #ஸ்ரீ லட்சுமி குபேரன் #🙏🪔 ஓம் குபேரன் லட்சுமி தாயே போற்றி 🪔🙏 _*ஆன்மீகம் மற்றும் செய்திகள்*_ *இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் பல வகைகளில் நம்பிக்கையாக இருந்தாலும், அதிர்ஷ்டம் என்ற ஒன்றும், பணம் என்ற ஒன்று வரும் பொழுது அதற்கு முதன்மைக் கடவுளாக மகாலட்சுமி தேவியையும், குபேர கடவுளையும் தான் அனைவரும் வணங்குகின்றனர். அவ்வாறு நமது இல்லங்களில் குபேரன் அருள் கிடைத்து விட்டது என்றால் இந்த பணப் பிரச்சினை அனைத்தும் மறைந்துவிடும்.* *அதற்காக முதலில் பத்து ரூபாய் நாணயங்களை 108 எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை முதலில் தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் கோமியத்தில் சுத்தமாக அலச வேண்டும். பிறகு அதனை பன்னீரில் அலசி எடுக்க வேண்டும். பிறகு ஒரு சில்வர், வெள்ளி, பித்தளை இது போன்ற ஏதாவது ஒரு பாத்திரத்தில் இந்த 108 பத்து ரூபாய் நாணயங்களை சேர்க்க வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையில் வைத்து, தினமும் காலை, மாலை விளக்கு ஏற்றிய பிறகு, இரண்டு கைகளால் இந்த ரூபாய் நாணயங்களை அள்ளி, மேலிருந்து கீழாக கொட்ட வேண்டும். இவை சத்தத்துடன் பாத்திரத்தில் விழுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு தினமும் காலை மூன்று முறை, மாலை மூன்று முறை செய்ய குபேரர் அந்த சத்தத்தின் காரணமாக நமது இல்லம் தேடி வந்து விடுவார். பின்னர் பணப்பிரச்சனை என்பதே நம்மை நெருங்காமல் இருக்கும்.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
8 shares

More like this