முடிவே இல்லாத துயரங்கள் வந்து
முன்னால் நின்றாலும் கலங்கமாட்டேனடி...
முற்றுப்புள்ளி வைக்கும் மரணம் வந்தாலும்
முதுகு காட்டி நான் ஓடமாட்டேன்!
கல்லறைத் தொட்டில் என்னை அழைத்தாலும்
கவலை கொள்ளாமல் கடந்து வருவேன்...
காலன் வீசும் பாசக்கயிற்றையும்
நூல் இழை என அறுத்து எறிவேன்!
இத்தனையும் செய்ய எனக்குத் துணிவேது?
இமயம் நிகர்த்த உன் தோள் இருக்கையில்...
உன் விரல் கோர்த்து நான் நிற்கையில்
நிச்சயம் மரணமும் தோற்றுப் போகுமடி!
உயிர் பிரியும் வலியைக் கூட
உன் அருகாமை மருந்தாய் மாற்றுமடி...
சாவு வந்து என் கதவைத் தட்டினாலும்
உனக்காக மீண்டு வருவேன் நான்! #💖நீயே என் சந்தோசம்🥰


