தூத்துக்குடியில் சமையல் எண்ணெய் விற்பனையில் கொடி கட்டி கோலோச்சிய பிராண்டு நிறுவனம் கோல்டு வின்னர் நிறுவனம்!
காளீஸ்வரி (நாடார்) குடும்பத்தினருக்குரியது, என்பது உலகறிந்த உண்மை. 1993 களில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்கிற நிலைக்கு உயர்ந்தது.
இதே நேரத்தில் அதானியின் வில்மர் நிறுவனம் ஃபார்ச்சூன் என்ற பெயரில் சமையல் எண்ணெய் விற்பனையைத் துவங்கியது.
சரி இதற்கும் தூத்துக்குடி காளீஸ்வரி நாடார் குடும்பத்தினருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்.
அதானியின் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் விற்பனைக்கு போட்டியாளராக இருந்த பெரு நிறுவனமாகத் திகழ்ந்தது நம்ம காளீஸ்வரி அண்ணாச்சி குடும்ப பிராண்ட்டான கோல்ட் வின்னர் நிறுவனம் தான்.
கோல்டு வின்னரை முடக்கினால் தான் அதானியின் ஃபார்ச்சூன் சமையல் எண்ணெய் நிறுவனம் தனது விற்பனையை விரிவு செய்ய முடியும் என்ற நிலை!
அதற்கு தானே பாஜக அரசு இருக்கிறது!
மோடியை விட்டு அமலாக்கத்துறையை ஏவி விட்டது அதானியின் ராஜ்ஜியம்!
2017 ல் ஒரே நேரத்தில் 54 இடத்தில் கோல்ட் வின்னர் கம்பெனியில் ரெய்டு நடத்த பாஜக அரசு அமலாக்க துறையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை ஏவியது.
காளீஸ்வரி அண்ணாச்சியைக் காலி செய்தது மட்டுமல்ல; அதனைத் தொடர்ந்து நாடார்கள் நடத்தும் நிறுவனங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காலி செய்ததை இங்கே நான் வேதனையோடு குறிப்பிட்டேயாக வேண்டும்!
நாசரேத்தைச் சேர்ந்த ஆச்சீஸ் மசாலா பொருட்கள் நிறுவனம்! நாடார் பெருமக்களின் மெர்கன்டைல் வங்கி,
சரவணா ஸ்டோர், சரவணா செல்வரெத்தினம் ஸ்டோர்ஸ் குழும நிறுவனங்களில் 72 இடங்களில் ரெய்டுகளை நடத்தி பாஜக அரசு அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டு இன்றைக்கு நாடார் சமூக ஓட்டுக்களைப் பெற்றுவிடலாம் என்று CSI கிறிஸ்தவ நாடார் பால் கனகராஜ் முதல் இந்து நாடார்களான தமிழிசை, பொன்னார் என 3 நாடார்களை நேரடியாக தாமரை சின்னத்தில் இறக்கி விட்டு பாஜக தனது அரசியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
Jose Kissinger #💚I Love தமிழ்நாடு #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #📺அரசியல் 360🔴 #🌱விவசாயம்

