#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # நாள் வழிபாடு… ஆயுள் முழுக்க செல்வம்! அட்சய திருதியை ரகசியம் - ஶ்ரீசுவர்ண கெளரி வழிபாடு* ....
😯😟😯😟😯
சக்தி வழிபாட்டையே தொன்மை வழிபாடு என்கின்றன பண்டைய ஞானநூல்கள். அனைத்துப் படைப்புகளுக்கும் சக்தியே ஆதாரம் என்கின்றன அவை. வெண்பனி மலை மீது வந்து தங்கிய சக்திதேவியை கெளரி என சாஸ்திர நூல்கள் போற்றுகின்றன..
வெண்மையை கெளர வர்ணம் என்பர். ஆக, இந்த அம்பிகை கிரிகளில் வந்து தங்கியதாலும், வெண் பனி போன்ற நிறத்தைப் பெற்றவள் என்பதாலும், அவளுக்கு `கெளரிதேவி’ என்று திருப் பெயர் சூட்டிப் போற்றின.
கெளரிதேவி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு. அது வீட்டில் செல்வம், தான்யம், மனமகிழ்ச்சி ஆகியவை நிறையும்படி செய்கிறது. முன்னாளில் பெண்கள் நல்ல கணவனை வேண்டி கெளரி விரதம் நோற்றனர் என்கின்றன புராணங்கள். அதேபோல், உலக மக்களுக்குத் தேவையான பதினாறு செல்வங்களை யும் அருளும் பதினாறு வடிவங்களாக கெளரிதேவி அருள்புரிகிறாள் என்கின்றன ஞானநூல்கள். தேவியின் பதினாறு திருவடிவங்களையும் தரிசித்து, முறைப்படி வழிபட சகல சம்பத்துகளும் உண்டாகும்..
திருவுருவமாக அமைத்து வழிபட முடியாதபோது பூரண கும்பங்களை நிறுவி அவற்றில் கெளரிதேவியை நிலைப்படுத்தி இயன்ற உபசாரங்களைச் செய்து வழிபடலாம். பதினாறு விளக்கு களை ஏற்றி வைத்து அவற்றுக்கு மாலை சூட்டி அவற்றில் அம்பிகையை நிலைப்படுத்தியும் வழிபடுவர்.
அதேபோல், கெளரி வழிபாட்டின் ஒரு அங்கம், அன்பர்களுக்கு உணவிடுவது ஆகும். ஆகவே, கெளரிதேவியை வழிபட்டு, அன்ன தானம் செய்வதால் அபரிமிதமான செல்வபோகம் உண்டாகும்; வீட்டில் சுபிட்சத்துக்குக் குறைவே இருக்காது என்பது நம்பிக்கை.
கெளரிதேவியின் 16 வடிவங்களில் முக்கியமானது சுவர்ணகெளரி தேவி வடிவம். சுவர்ண கெளரியை வழிபடுவதால், அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அந்தப் பிரளயத்தில் இருந்து தோன்றிய சுவர்ண லிங்கத் தைத் தேவர்கள் பூஜித்தனர். அப்போது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும், உமையன்னையும் தோன்றி அருள்பாலித்தனர். இந்த அன்னையை சுவர்ண கெளரியாக தேவர்கள் வழிபட்டார்களாம்..அஷ்டமச் சனி, ஏழரைச் சனி - கிரகப் பாதிப்புகள் விலகிட, அட்சய திருதியை அன்று இதைச் செய்தாலே போதும்! .
செய்யும் காரியங்களுக்குப் பன்மடங்காகப் பலனைப் பெருக்கித் தரும் அட்சய திருதியை நாளில் இந்த தேவியை வழிபடுவதால், ஆபரணச்சேர்க்கை செல்வ வளம் உண்டாகும்; சேரும் செல்வம் ஒருபோதும் விரயம் ஆகாது.
பொதுவாக ஆடி மாதம் சுவர்ண கெளரி விரதம் இருப்பார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் அட்சய திருதியை அன்று சுவர்ணகௌரியை வழிபடுகிறார்கள். அன்று, கௌரி எனப்படும் பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், மறு நாள் அன்னைக்குப் பாதுகாப்பாக விநாயகர் வருவதாகவும் ஐதீகம்.
அன்றைய தினம் காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இறைவியைப் பூஜிப்பது மிகவும் சிறப்பு.
அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணெய் தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும்..
பின்னர் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி வணங்க வேண்டும். பின்னர் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்புச் சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். தீபாராதனை முடிந்ததும் இரண்டு நெய் தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும்.
பிறகு சுமங்கலிப் பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும். 11 பேருக்கு அன்னதானம் அளிக்கலாம்.
வீட்டில் இப்படியாக பூஜித்த பிறகு, அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் ஈசுவரனை தரிசிக்க வேண்டும்.
இரவு வேளையில் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பதால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சுவர்ண யோகம் கைகூடும்; வீட்டில் பொன்-பொருள் வரவு அதிகரிக்கும். ஆயுள் முழிக்க பொருளாதார செழிப்புக்குக் குறையே இருக்காது!.
தெரிந்து கொள்வோம்...
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


