ShareChat
click to see wallet page
search
திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம் திருவேதிகுடி அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர் மரம்: வில்வம் வைத தீர்த்தம் பாடல் எண் : 5 பண் : சாதாரி சொக்கர் துணை மிக்க வெயில் உக்கற முனிந்து தொழும் மூவர் மகிழத்தக்க அருள் பக்கம் உற வைத்தவர்னார் இனிது தங்கு நகர் தான் கொக்கரவ முற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம் மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே. பொழிப்புரை: சிவபெருமான் மிக்க அழகுடையவன். கோபத்தால் சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது, அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது, மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும், மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும், தேவர்கள் போற்றும் ஒலியும் கொண்டு, தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும், துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய
🙏ஆன்மீகம் - ShareChat