#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
காட்பாடி தொகுதி- தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக வேட்பாளர் வி.ராமு, கடும் வெயிலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம், முள்ளிபாளையம், கஸ்பா பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிடும் காட்பாடி தொகுதி வேட்பாளர் வி.ராமு, கடும் வெயிலிலும், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் வீதி வீதியாக, ஒரு வீடு விடாமல் சென்று பொதுமக்கள், இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களை நேரில் சந்தித்து கனிவுடன் உரையாடி நோட்டீஸ் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு கேட்டுக் கொண்டார். இவருக்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மலர் தூவி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, திருஷ்டி ஆலங்கள் எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும், “இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்போம்” என பொதுமக்கள் ஆங்காங்கே வாக்குறுதி அளித்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமுவுக்கு உற்சாகம் அளித்து வருகின்றனர். இதில் பகுதி செயலாளர் நாராயணன், வட்டச் செயலாளர் ராணி மேகநாதன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பில், கடந்த திமுக ஆட்சியின் அவல நிலைகள் மற்றும் தற்போதைய திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய ஆதரவு தொந்தரவு கோரி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.


