இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை...
இந்தக் கதையில் வரும் பயில்வானுடைய இரண்டு பொண்டாட்டிகளுக்கும் பிடிவாதம் அதிகம். இரண்டு பேரும் ஒரே எண்ணத்துடன் இருப்பது அபூர்வம். ஆனால் அதிசயமாக இரண்டுபேரும் பக்கத்து வீட்டுக்காரனை உதைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள்.
சண்டை ஏற்கனவே ஒரு ரவுண்டு முடிந்து விட்டது. மேல் காலெல்லாம் வலி. சமாதானத்திற்கு அழைத்துப் பேசினால் பயில்வானுடைய நிபந்தனைகளை எல்லாம் ஏற்க சண்டைக்காரன் மறுக்கிறான். சண்டைக்காரன் வீட்டுக்குச் செல்லும் பாதையை பயில்வான் அடைத்து விடுகிறான்.
பயில்வான் அமெரிக்காவின் கதை கிட்டத்தட்ட அப்படித்தான் போகிறது. இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் அதன் இரண்டு பொண்டாட்டிகள். இருவருக்கும் ஈரான் எதிரி. மாட்டிக்கொண்டு முழிக்கும் அமெரிக்கா 'எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல ஹொர்மூஸ் ஜலசந்தியை மூடிவிட்டது.
உலகின் 20% எண்ணெய்க் கப்பல்கள் ஹொர்மூஸ் வழியாகச் செல்கிறது. ஜசந்தியை அடைப்பதால் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்வதுடன் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஸ்ரீலங்கா, நைஜீரியா, மேலும் தொழில் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்படும்.
எத்தனையோ தடைகளைப் பார்த்துவிட்ட ஈரான் இன்னும் வலிமையாகவே இருக்கிறது. அதற்கு ரஷ்யாவும் சீனாவும் உதவி செய்கின்றன. நீரிணையை மூடுவதால் GCC நாடுகளின் எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் உள்ளது. அதைச் சீர்செய்வதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்.
வரவிருக்கும் அபாயங்கள் பொருளாதாரச் சீர்குலைவை விட மிகவும் ஆபத்தானவை. அமெரிக்கக் கடற்படைச் சொத்துக்கள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படும் எந்தவொரு பதிலடித் தாக்குதலும், கட்டுப்பாட்டை மீறிய பதற்றத்தை அதிகரிக்கும்.
ஈரானின் எண்ணெய் வருவாயை முடக்குவதே அமெரிக்காவின் நோக்கமாக இருக்கலாம். இருப்பினும், இதன் விளைவு, எண்ணெய் விலை கடுமையாக உயர்வது, உலகப் பொருளாதாரம் சீர்குலைவது, மற்றும் ஓர் உலகப் போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பது ஆகியவையே ஆகும். வியூக ரீதியாகப் பார்த்தால், இதில் கிடைக்கக்கூடிய ஆதாயத்தை விட அதன் இழப்பு பன்மடங்கு அதிகம்.
#🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
00:05

