ShareChat
click to see wallet page
search
#kelvi அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும் கேள்வி: சுவாமிஜி! ஒரு தாய் தந்தையருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன; அம்மூன்று குழந்தைகளும் மூன்று விதமாக இருக்கக் காரணம் என்ன? பதில்: இதில் ஒரு பெரிய விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் குழந்தை உருவாகும் பொழுது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம், அறிவு இவைகளைப் பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்காலகட்டத்தில் கோள்களின் சஞ்சாரநிலை, பஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற இரசாயனமாற்றம் இவற்றைப் பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன. பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்த பின்பு, தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள், பஞ்ச பூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலைக்கேற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும். எனவே, இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு முதலிய 16 காரணங்களினால் வேறுபடுகிறான். அவை:- 1. கருவமைப்பு 2. உணவு வகை 3. காலம் 4. தேசம் 5. கல்வி 6. தொழில் 7. அரசாங்கம் 8. கலை 9. முயற்சி 10. பருவம் 11. நட்பு 12. சந்தர்ப்பம் 13. ஆராய்ச்சி 14. பழக்கம் 15. வழக்கம் 16. ஒழுக்கம் முதலியன. இவற்றிற்கேற்ப, 1. உருவ அமைப்பும் 2. குணம் 3. அறிவின் உயர்வு 4. கீர்த்தி 5. உடல்வலிவு 6. உடல் நலம் 7. செல்வம் மனிதர்க்கு உண்டாகும். மேற்கண்ட பதினாறு காரணங்களால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அவ்வப்போது மேலே சொன்ன உருவமைப்பு முதலிய வேறுபாடுகள் வருகின்றன. வாழ்க வளமுடன்! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹
kelvi - ShareChat