#kelvi-pathil
அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்
கேள்வி: ஐயா! தவம் செய்யும் பொழுது ஈ, கொசுத் தொந்தரவை எப்படித் தவிற்பது?
பதில்: மெல்லிய துணியை வைத்து உடலை மறைத்துக் கொள்ளலாம். மனிதனுக்கு 6 விதமான உபத்திரவங்கள் உண்டு என்பார்கள் முற்காலத்தில். பகல் உபத்திரவங்கள் இரண்டு – ஈ, பிச்சைக்காரன் தொல்லை; இரவு உபத்திரவங்கள் இரண்டு – கொசு, மூட்டைப்பூச்சி; இரவு – பகல் உபத்திரவங்கள் இரண்டு – எறும்பு, வாழ்க்கைத்துணைவர். இவற்றை அடியோடு ஒழிக்க முடியாது என்று சொல்வார்கள். தடுக்கும் முறையும், தாங்கும் பொறுமையும் வேண்டும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹


