#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
பண்டாரவிளை - ஏரலில்
ஸ்ரீவைகுண்டம் காங். தொகுதி வேட்பாளர் ஊர்வசி எஸ் அமிர்தராஜை ஆதிரித்து கனிமொழி எம்.பி.தேர்தல் பரப்புரை
தூத்துக்குடி ஏப்17
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு கை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என பண்டாரவிளை மற்றும் ஏரலில் கனிமொழி எம்.பி . தேர்தல் பரப்புரையாற்றினார். ஏரல், சாத்தான்குளம் பகுதியில் இளைஞர் மற்றும் பெண்களுக்கு தனது சொந்த செலவில் இலவசமாக ஊர்வசி அகடமி நடத்தி வருகிறார். இதில் பயின்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு துறையில் பணிபுரிந்து வருகின்றனர். விரைவில் சாயர்புரத்திலும் இலவச அகடமி தொடங்க உள்ளார் எனவும் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். எனவே வாக்காள பெருமக்களே நீங்கள் கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
முதலமைச்சர் தேர்தல் அறிக்கை படி மகளிர் உதவிக்தொகை ரூ 2000/- உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்குமகளிர் உரிமை தொகை வழங்கப்படும். தேர்தல் அறிக்கை படி பெண்களுக்கு "சூப்பர்ஸ்டார்" ரூ.8000/- மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். கூப்பனை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிவாரணநிதி ஒன்றும் இதுவரை தரவில்லை மகளிர் கான இடஒதுக்கீட்டை வரவேற்கிறோம். ஆனால் இருக்கக் கூடிய தொகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் குறைக்க கூடாது. மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.100 நாட்கள் வேலை முடக்கப்பட்டுள்ளன சம்பளம் கிடைப்பதில்லை. 42% பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டை குழந்தைகளின் எதிர்காலம் மொழிகளை பாதுகாக்க திராவிட விடியல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட வேட்பாளர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ்க்கு "கை" சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என பேசினார்.
நிகழ்வில் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் ஜெப தங்கம் பிரேமா,வக்கில் ஆறுமுகபெருமாள், ஸ்ரீவை ஒன்றிய கழக செயலாளர்கள் பி.ஜி.ரவி, கோட்டாளம், மகளிரணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி, பேரூர் கழக செயலாளர்கள் ராயப்பன், கண்ணன், நவநீத முத்துக்குமார், சாயர்புரம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் த.அறவாழி, மாவட்ட அயலக துணை அமைப்பாளர் ராஜேஷ் ரவிச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், மாவட்ட காங்.துணை தலைவர் சங்கர், காங்கிரஸ் பொருளாளர் எடிசன், வட்டார தலைவர்கள் ஜெயராஜ், ஜெயசீலன்துரை, தாசன், மாவட்ட பொது செயலாளர் சிவகளை பிச்சையா, சாயர்புரம் நகர காங்.தலைவர் இசை சங்கர் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


