எனக்கு #ஏஞ்சலினா_ஜோலி-ய பிடிக்கும். கிளாமரா இல்லை.!ஆக்சன் ஹீரோயினா.! மாடஸ்டி பிளைசிக்கு நிஜ உருவம் குடுத்த மாதிரியான தோற்றம்.
ஒரு காலத்துல டிப்ரசன் அதிகமாகி, தற்கொலை பண்ண முடிவெடுத்திருக்கு இந்த அழகு மயில். தற்கொலை பண்ணிகிட்டா, நம்ம சுத்தி இருக்குறவங்களெல்லாம் குற்ற உணர்ச்சில வாடுவாங்களேன்னு யோசிச்சு, ஒரு கூலி கொலையாளியை சந்திச்சு தன்னையே கொல்ல சொல்லி பணம் குடுத்துருக்கு. போட்டோவை பார்த்தவன், முதல்ல டுவின்ஸோன்னு நினைச்சிருக்கான். தேவதையோட சோக கதைய கேட்டவன், கொல்ல மறுத்துட்டான். அவனுக்கே அது புதுசா இருந்திருக்கனும். ரொம்ப தொந்தரவு செஞ்சதால, ரெண்டு வாரம் டைம் தர்றேன், இதே முடிவோட இருந்தா உன்னை கொலை பண்றேன்னு சொல்லி அனுப்பிட்டான். முதல் வாரம் எதுவும் நடக்கலை. இரண்டாவது வாரம் ஒரு படத்துல நடிக்கிற வாய்ப்பு வந்துருச்சு. அவ்ளோதான் மனசு மாறி தப்பிச்சிருச்சு.
#🤔தெரிந்து கொள்வோம்


