🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 08.07.2026 (புதன்) மகிமை நிறை மறையுண்மைகள். முதலாவது. ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், "நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது." என ஒசேயா நூலில் கூறுகிறது. நிலையற்ற உலகில் வாழும் நாம் அனைவரும் ஆண்டவரை தேடும் காலம் இது என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம். இரண்டாவது. ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து, இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 105 : 2-ல், " அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!" என கூறப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். மூன்றாவது. தூய ஆவியின் வருகையைத் தியானித்து, இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், "தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்." என வாசித்தோம். தூய ஆவியால் திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் இத்தகைய கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். நான்காவது. தேவ மாதாவின் விண்ணேற்பைத் தியானித்து, தான் சிறுவனாக இருந்த போது, இறைவனுக்காக உயிர்த்தியாகம் செய்து மறைசாட்சியாக மரிக்க கடவுளிடம் வரம் கேட்டு மன்றாடியவர் இன்றைய புனிதர் புனித கிரகொரி மேரி கிரஸ்ஸி. இத்தாலியில் பிறந்த இவர் பின்னாளில் சீனாவில் இறைவனுக்காக மறைசாட்சியாக மரித்தார். புனித கிரகொரி மேரி கிரஸ்ஸியை நம் திருச்சபைக்குத் தந்து சீன தேசத்தில் கிறித்துவம் தழைத்தோங்க செய்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஐந்தாவது. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து, புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம். ஆமென். 🌿 #✝️இயேசு #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச்
39 likes
26 shares

More like this