ShareChat
click to see wallet page
search
சனி பகவானின் பார்வைக்கு என்ன பலன்.? பொதுவாக சனி பகவானை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது ... சுப அசுப கருமத்தை அனுபவிக்க வைப்பவர். சுப அசுப கருமத்தை செய்யத் தூண்டக் கூடியவர். சுப அசுப கருமத்தை செய்ய விடாமல் தடுப்பவர். என்பதும் ... மேலும்... சனிபகவான்...தான் அமர்ந்த... இடத்திலிருந்து 3,7,10 என...மூன்று வித பார்வைகளை பார்ப்பார் என்பதும்... அடிப்படை புரிதலுக்கானது. பொதுவாக.. சனி பார்வை கெடுதலை மட்டுமே தரும் என்று சொல்லிவிட முடியாது.... ஏன் .? எப்படி.? உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான்., திரிகோணாதிபதியாக இருந்து திரிகோணத்திலேயே அமர்ந்து பார்ப்பதை விட. கேந்திரத்தில் அமர்ந்து பார்ப்பது நன்மை அளிக்கும். என்ன நன்மை..? அசுப கர்மங்களை செய்யவிடாமல். சுப கர்மங்களைச் செய்ய தூண்டும். அதேபோல உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான். கேந்திராதிபதியாக இருந்து கேந்திரத்திலேயே அமர்ந்து பார்ப்பதைவிட. திரிகோணத்தில் அமர்ந்து பார்ப்பது நன்மை அளிக்கும் . என்ன நன்மை.? அசுப கர்மங்களை அனுபவிக்க விடாமல். சுப கர்மங்களை அனுபவிக்க வைக்கும். இதுவே... உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் திரிகோண அதிபதியாக இருந்து. மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால். சுப கர்மங்களை அனுபவிக்க விடாமல் தடுக்கும். மேலும் உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் கேந்திர அதிபதியாக இருந்து மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து பார்த்தால். அசுப கர்மங்களை செய்யத் தூண்டும். குறிப்பாக... சனி தன்னுடைய பார்வையினால் எப்பொழுது கெடுதலை செய்வார்... உங்களுடைய லக்னத்திற்கு சனி பகவான் மறைவு ஸ்தான அதிபதியாக இருந்து. அங்கேயே ஆட்சியாக அமர்ந்து பார்த்தாலும் சரி. அல்லது தன் வீட்டிற்கு... மறைவு ஸ்தான வீடுகளில் அமர்ந்து பார்த்தாலும் சரி.. அல்லது ... ஒரு மறைவு ஸ்தான அதிபதி வேறொரு மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து...பார்த்தாலும் சரி... விபரீதமான குரூரமான மோசமான கருமங்களையே அனுபவிக்க வைக்கும்.. இப்பொழுது மனதில் ஒரு கேள்வி எழும். சனிபகவான் சுபத்துவமாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யாது. என்று... உண்மைதான்.. ஆனால் அதில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது.. சனி பகவானை எந்த கிரகம் சுபத்துவப்படுத்தி இருக்கிறதோ அந்த கிரகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு ஜாதகருக்கு அவருடைய பார்வையின் வழியே நன்மையை செய்வார். . இப்பொழுது மீண்டும் ஒரு கேள்வி எழும். சனியுடன் ஒரு சுப கிரகம் நெருங்கி இருந்து சுபத்துவ படுத்தினால் தானே இந்த பிரச்சனை.. சனி பகவானை பார்வையாலேயே ஒரு கிரகம் சுபத்துவப்படுத்தி இருந்தால்.? உண்மைதான்... குரு போன்ற சுப கிரகங்கள் தனது ஏழாம் பார்வையை தவிர்த்து.. ஐந்து ஒன்பதாம் பார்வையால் சனியை சுபத்துவப்படுத்தி இருக்கும் பட்சத்தில்.... சனிபகவான் அவருடைய பார்வையின் வழியே நன்மையைச் செய்வார்.. மேலும்... குரு பகவான் உங்களுடைய லக்னத்திற்கு எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அவர்களின் மூலம் அல்லது அவர்களின் தயவின் மூலம் மட்டுமே சனிபகவானால் நன்மையைச் செய்ய முடியும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை
✡️ஜோதிட பரிகாரங்கள் - ShareChat